Sunday, November 23, 2014

திருக்குறள்-காமத்துப்பால் 1326 முதல் 1330 வரை

திருக்குறள்-காமத்துப்பால் 1321 முதல் 1330 வரை

குறள்-1326

வயிறார ஒருவன் உணவு உண்கிறாண்.அது எளிதில் செரிக்காமல் அவதிப் படுகிறான்.வயிறு வலிக்க ஆரம்பிக்கிறது.மருத்துவரிடம் செல்லலாமா? என யோசிக்கிறான்.அதே அளவுடன் உண்ட உணவு உடனே செரித்துவிட்டால்...அடடா...அந்த இன்பம் இருக்கிறதே..அளவிடமுடியாது.ஆனால்..அதைவிட ஒரு இன்பம் உண்டாம்..அது என்ன தெரியுமா? வள்ளுவன் சொல்கிரான்..காமத்தில் கூடுவதைவிட காதலர்க்கு ஊடல் கொள்வதில் ஒரு சுகம் இருக்கிறதாம்.

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.

குறள்-1327

காதலன் , காதலி ஊடல் கொள்கின்றனர்.அதில் யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்து ஊடலை முடிவுக்கு கொண்டுவந்தபின் கிடைக்கும் இன்பம் அதிகம்.ஆகவேவிட்டுக் கொடுப்பவர் தோற்றவராக மாட்டார்.அவர் இன்பம் அடைவதில் வெற்றி பெற்றவராகிறார்


ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

குறள்-1328

காதலன், காதலி அன்புடன் புணரும்போது காதலனுக்கு வியர்க்கிறது.அப்போது அதுவும் சுகமாய் உள்ளதாம்.மீண்டும் இவளுடன் ஊடல் தோன்றினால்..அதே இன்பத்தையடைய மனம் எண்ணுகிறது.

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுகையில் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?.

குறள்-1329

காதலன் காதலி ஊடல்.காதலன் அந்த ஊடல் அதிக நேரம் நிலைக்க, வேண்டுகிறான். இரவும் விடியாது நீள வேண்டுகிறான்.அப்போதுதான் காதலியின் அருகாமையும் நீடிக்குமாம்


ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

காதலி அதிகம் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு நான் வேண்டி நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீடிக்கட்டும்.

குறள்-1330

காமவயப்பட..காதலர்க்கு இடயே ஊடுதல் இன்பத்தை அளிக்குமாம்.ஆனால்..அந்த ஊடல் முடிந்ததும் தழுவப்பெற்றால்..அதுவே அந்த ஊடலுக்கு இன்பம் ஆகுமாம்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

Saturday, November 22, 2014

திருக்குறள்-காமத்துப்பால் 1321 முதல் 1325 வரை



குறள்-1321

காதலனிடம் எந்தத் தவருமே இல்லை.ஆனாலும்..அவன் ஒவ்வொரு முறையும் காதலியிடம் ஊடல் கொள்கையில் அவன் அன்பு மேலும், மேலும் கூடுகிறதாம்.ஆகவே இந்தக் காதலி ஊடலுக்கு ஜே சொல்கிறாள்.

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அள஧க்கு மாறு.

அவரிடம் தவறு ஒன்றும் இல்லை.ஆயினும். அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.

குறள்-1322

காதலன் காதலியில் ஊடல் கொள்கையில், காதலிக்கு சிறு துன்பம் ஏற்படுகிறது.ஊடலுக்குப் பின் கூடல் அன்பை மேலும் பெருக்குவதால்..முதலில் அவளுக்கு ஏற்படும் துன்பமும் பெருமை வாய்ந்ததாம்.

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். #1322

ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.

பாடல்-1323

தேவர்கள் உலகம் என்று ஒன்று இருக்கிறதாம்.அங்கு உள்ளவர்களுக்கு இன்பத்திற்கு பஞ்சமே இல்லையாம்.இப்படியெல்லாம் சொல்லப்படும் அவ்வுலகம்..தன் காதலனுடன் அவளுக்கு உள்ள நிலத்துடன் சேர்ந்த நீர் போல ஒற்றுமையால் ஊடலுக்குபின் கிடைக்கும் இன்பத்தைவிட அதிகமாய் இருக்காதாம்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலகம் இருக்கின்றதா?.

குறள்-1324
காதலனை இறுகத் தழுவிக் கொண்டு..இணைபிரியாமல் இருக்க வேண்டுமாயின் ஊடலும் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.அது இருவருக்கிடையே மன உறுதியையும் உடைக்கும் ஆயுதமாம்


புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.

காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல ஆயுதமும் உள்ளது.

பாடல்-1325

காதலன் தவறே செய்ய வில்லை ஆயினும் தவறிழைத்தவன் போல காதலியிடம் ஊடல் கொண்டு..காதலியினால் புறக்கணிக்கப் படுகையில்..அந்த ஊடலை எண்ணினால் சற்று இன்பமாயும் உள்ளதாம்.


தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து. #1325

தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஒர் இன்பம் உள்ளது.

Friday, November 21, 2014

திருக்குறள்-காமத்துப்பால்-1316 முதல் 1320 வரை


குறள்-1316

காதலி காதலனின் அன்புப் பிடியில் இருந்தாள்.ஆசை அதிகமானதால் காதலன் எப்போதும் உன்னைத்தான் நினைத்தேன் என்றான்.உடனே, காதலி, நினைத்தேன் என்றால், எப்போவாவது மறந்திருந்தால்தானே நினைக்க முடியும்? அப்படியாயின் ஏன் மறந்தீர்? என ஊடத் தொடங்கினாளாம்.

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

உன்னை நினைத்தேன் என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்; அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்? எனக்கேட்டு ஏன் மறந்தீர்? என்று அவள் ஊடல் கொண்டாள்.

குறள்-1317

தும்மும் போது வாழ்த்துவது வழக்கம்.அதே நேரம் வேடிக்கையாக யாரோ நினைக்கிறார்கள்..அதுதான் தும்முகிறாய் என்பார்கள் பெரியோர்.அதுவே இங்கே வம்பாய் போய்விட்டது இந்தக் காதலனுக்கு

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

நான் தும்மினேன்; அவள்  வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்!?.

குறள்-1318

முன் குறள் நாயகனே, அடுத்தமுறை முன்னேற்பாடாக தும்மல் வருகையில் அதை வெளிப்படுத்தாது அடக்கிக் கொண்டான்.அதைக் கண்டவள், "யாரோ உன்னை நினைக்கிறார்கள்.அது எனக்குத் தெரியக்கூடாது என மறைக்கிறீர்கள்" என ஊடல் கொள்கிறாள்.பாவம் அந்தக் காதலன்.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.


அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உனக்கு வேண்டியவர்கள் உன்னை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்.

குறள்-1319

அவள் ஊடல் கொண்டாலும், அதை காதலனே நீக்கி மகிழ்வித்தாலும், அதற்கும் அவள்...மற்ற பெண்களிடமும் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? என்று கோபம் கொள்கிறாள்.

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள்  நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ? என்று சினம் கொள்வாள்..

குறள்-1320

சரி ஊடலூ வேண்டாம்..என அவளிடம் பேசாது அவளது அங்கங்களின் அழகை ரசித்துக் கொண்டிருந்தால், எந்தப் பெண்ணின் உறுப்புகள் போல உள்ளது என என் மேனியை பார்க்கறீர்களா? எனச் சினம் கொள்கிறாள்.இவன் என்னதான் செய்வான்?பாவம்

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.

அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து அவளை நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்கிறாள்.




Thursday, November 20, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1311 முதல் 1315 வரை



குறள்- 1311

பெண் விருப்பம் கொண்டவன் அவன்.தெருவில் செல்லும் பெண்களை எல்லாம் தழுவதாகக் கற்பனை செய்து..தம் கண்களாலேயே அவர்கள் மீது காமப்பார்வை வீசியவன்.அப்படிப்பட்ட அவனை அவள் இனி தழுவ மாட்டேன் என்கிறாள்


பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்.

குறள்:-1312

சாதாரணமாக நம் விட்டில் பெரியவர்கள், வயதில் சிறியோர் தும்மினால், "நீடூழு வாழ்க" என ஆசிர்வதிப்பர்.அந்தப் பழக்கம் வள்ளுவன் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பது இக்குறளால் தெரிகிறது.காதலி , காதலனிடன் ஊடல் கொள்கிறாள்.ஊடலை மறக்க அவன் தும்மினானாம்.அப்போதாவது எப்போதும் சொல்வதுபோல"நீ வாழ்க" என்று கூறி ஊடலை முடித்துவைப்பாள் என்ற எண்ணத்தில்.



ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

காதலரோடு ஊடல் கொண்டிருந்த போது, நான் அவரை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

குறள்-1313

 அவன் ஒரு மாற்றத்திற்காக மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக சூடிக்கொண்டான்.உடன், காதலி, வேறு எந்த பெண்ணுக்கோ சம்மதம் கேட்கும் வகையில்தான்  அம்மாலையைச் சூடிக்கொண்டுள்ளதாகக் கோபம் கொள்கிறாள்.


கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்கிறாள்

குறள்-1314.

எல்லாக் காதலரையும் விட நான் அதிகம் காதல் உடையவன் உன் மீது என்கிறான் காதலன்.அவன்பால் உள்ள அன்பு முகுதியால், இச் சொற்களைக் கூடத் தாங்க முடியாதவள்'அவன் பலரைக் காதலிப்பதாக அர்த்தம் கொள்கிறாள்.

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
தெளிவுரை

யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன் என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும் எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்.

குறள்-1315

அவள் அவனை அளவிற்கு அதிகமாகக் காதலிக்கிறாள்.ஒரு நாள் காதலன் காதல் மிகுதியில் "உன்னை இப்பிறவியில் பிரியேன்' என்கிறான்.அப்படியெனில், என்னை அடுத்தப் பிறவியில் பிறிந்துவிடுவீரா? என்று கண்களில் நீர் மல்க வினவுகிறாள் இக்காதலி

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
தெளிவுரை


இப்பிறப்பில் நான் பிரியமாட்டேன் என்று நான் சொன்னவுடன் அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா? எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி.

திருக்குறள்- காமத்துப்பால் 1306 முதல் 1310 வரை





குறள்-1306

மிகவும் கனிந்த பழமானாலும் சரி, இளம் காயானாலும் சரி அப்பழத்தின் உண்மையான ருசியைத் தராது.அது போலவே காதலன், காதலிக்குள் பெரும் ஊடலும், சிறு ஊடலும் ஏற்பட்டு அது இன்பம் தரும் காதல் வாழ்க்கையை அமையாவிட்டால் வாழ்க்கை பயனற்று போய் விடும்.

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.


பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாக ஆகிவிடும்..


குறள்-1307

சிறு ஊடல்கள் கணவன், மனைவியரிடையே இன்பம் பயக்குமானாலும், அப்படிப்பட்ட ஊடலிலும் ஒரு துன்பம் இருக்கிறதாம்.அவ்வூடல் நீண்டு விட்டால் துன்பமே பயக்குமாம்.


ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.

கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருப்பதிலும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.

குறள்-1308

நம்மை எண்ணி அல்லவா? வருந்துகிறார்..நம்மை நினைத்து அல்லவா வருந்துகிறாள் என்ற உணர்வு ஒருவருக்கொருவர் இல்லாதபோது அடுத்தவர் வருந்துவதால் என்ன பயன்?

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?.

குறள்-1309

நீர் வெயிலுக்குக் கீழ் இருந்தால் தான் வெயிலில் வருவோர்க்கு குளிர்ச்சி நீரைத் தரமுடியும்.அதேபோல..ஊடல் அன்புள்ள காதலன், காதலியினிடம் ஏற்பட்டால் அது இனிமையானதாகவே ஆகும்.

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.


நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.


குறள்-1310

ஒருவர் மீது அன்பு ஏற்பட்டுவிட்டால்..அவருடன் ஊடலும் கொண்டால்..நம் மனதைக் கவர்ந்தவரிடம் ஊடல் கொண்டோம், அவனுடன் கூடவேண்டும் என மனம் சொல்லக் காரணம் அந்த அன்பே ஆகும்.


ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

ஊடலைப் போக்காது வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்.

Wednesday, November 19, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1301 மு தல் 1305 வரை



குறள்- 1301

அவள் அவனுடன் ஊடல் கொள்ளும் போது அவன் அடையும் வேதனை அவளுக்கு வேடிக்கையாய் இருக்கிறதாம்.ஆகவே அவனிடம் ஊடல் செய்து..அவன் துன்பத்தைப் பார்க்க ஆசைப்படுகிறால் இந்தக் காதலி

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது


( ஊடும்போது அவர் அடைகின்ற) காதல் துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து ஊடல் கொள்வாயாக

குறள்-1302

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பார்கள்.உண்ணும் உணவில் கூட உப்பின் அளவு சற்று அதிகமானால்..அதை அனுபவித்து உண்ணமுடியாது.அது போல கலவி இன்பத்திற்கும் ஊடல் வேண்டுமாம்.ஆனால் அதுவும் அளவோடிருத்தல் அவசியமாம்


உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.

குறள்-1303

ஊடல் கொண்ட மனைவியிடம் ஊடல் நீக்கி கூட வேண்டுமாம்.அப்படியில்லாமல் கூடுவது ஊடல் துன்பத்தில் இருப்பவரை மேன்மேலும் வருத்துவது போலாம்.

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். #1303

தம்மோடு ஊடல் கொண்டவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரவழைத்தல் போன்றது.

குறள்-1304

ஒரு கொடிக்கு நீர் ஊற்றாமல் இருந்தால் அது வாட ஆரம்பிக்கும்.அதைவிட கொடுமையானது அச் செடியை அடியோடு அறுத்துப் போடுதல்.அதற்கு ஈடாகுமாம் ஊடல் கொண்டவளிடம் கூடாமல் போவது

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

ஊடல் கொண்டவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

குறள்-1305
அழகிய மனைவியின் ஊடல்தான் நல்ல பண்புகல் அமஒந்த கணவனுக்கு சிறப்பாகுமாம்.இருவரின் அன்பு ஊடல் அளவுடன் இருந்தால் கூடும் எனலாம்.

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே நல்ல பண்புகள் அமைந்த  காதலர்க்கு அழகு சேர்க்கும்.

திருக்குறள் -காமத்துப்பால்- 1291 முதல் 1295 வரை



காதலன் மனம் காதலியை எண்ணாது இருக்கும் போது தன் நேஞ்சு மட்டும் அப்படியில்லாமல் ஏன் காதலனையே நினைத்து கொண்டிருக்கிறது என தன் நெஞ்சை காதலிக் கேட்கிறாள்.

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

நெஞ்சே! என்னை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எனக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?.

குறள்-1292

என் மீது அவருக்கு அன்பு இல்லை என உனக்கேத் தெரிந்திருந்தும் ..என் நெஞ்சே..நீ , நாம் போனால் அவர் கோபம் கொள்ளமாட்டார் என அவரையே எண்ணி அவரிடம் ஏன் போகிறாய்?

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

என் நெஞ்சே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!.

குறள் -1293

அவன் அவளை விட்டு பிரிந்துள்ளான்.ஆகவே அவள் கண்களுக்கு அவன் நல்லவனாய்த் தெரியவில்லை.ஆயினும், அவள் மனம் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறது..ஒருவேளை அவனைக் கவனிக்க ஆளில்லை என்ற ஆதங்கத்தாலா?


கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?.

குறள்-1294

காதலிக்கு காதலன் மீது கோபம்.ஆனால், அவனைக் கண்டதுமே, அவளது நெஞ்சம் அவன் மீது இருந்த கோபத்தையெல்லாம் மறந்து அவனை நாடுகிறது.அதனால், தன் மனம் மீதே கோபப்பட்ட அவள் இனி அதனுடன் எந்த ஆலோசனையும் செய்ய மாட்டேன் என மனதிடம் பொய்க்கோபம் காட்டுகிறாள்.

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து பின் அதன் இன்பத்தை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போவதில்லை.

குற:-1295

இக்குறளின் நாயகிக்கோ வேறு விதமான எண்ணம்.கணவன் அவளை விட்டு பிரிந்திருக்கும் காலம், அவன் உடன் இல்லையே என மனதில் அச்சம் இருக்குமாம்.அவர் வந்து சேர்ந்துவிட்டாலோ..அவர் எப்போது பிரிந்து சென்றுவிடுவாரோ! என்ற அச்சம் இருக்குமாம்.

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் மனம் எப்போதும்  நீங்கா துன்பத்தைப் பெற்றிருக்கிறது.

Tuesday, November 18, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1296 முதல் 1300 வரை



பாடல்-1296

நம் மனமே நம்மை உண்ணுமா? உண்ணூம் என்கிறான் வள்ளுவன்.எப்போது..
காதலன் காதலையை விட்டுப் பிரிந்து விட்டான்.அந்தப் பிரிவைத் தனியே இருந்து அனுபவிக்கிறாள் காதலி.அந்தக் கொடுமை இருக்கிறதே..! அதுதான் அவள் நெஞ்சே அவளைத் தின்பது போல இருக்கிறதாம்

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவரை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருக்கிரது.

குறள்-1297

காதலன் ,காதலியை மறந்து விட்டான்.ஆனால், அவளால் அவனை மறக்க முடியவில்லையாம்.ஆகவே தன் மனதைத் தானே திட்டிக் கொள்கிறாள்.அதற்குச் சற்றும் நாணம் கிடையாது என.

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத,  நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி,  நாணத்தையும் மறந்துவிட்டேன்.

பாடல்-1298

பிரிந்து சென்ற காதலனை இகழ்வாகப் பேசினால்...அந்த இழிவு தனக்குதானே என எண்ணி இந்த காதலி அவன் வரவையும், அவனுடன் கூடுதலையும் எதிர் நோக்கி இருக்கிறாள்.

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

குறள்-1299

காதலனைப் பிரிந்ததால் காதலிக்கு மகிழ்ச்சி இல்லை.ஆனால்..அத் துன்பத்திற்கு அவள் மனமே அவளுக்குத் துணை போகாத போது வேறு துணை என்னவாக இருக்கக்கூடும்?

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, அவர் உரிமையாகப் பெற்றுள்ள அவரது நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?.

குறள்-1300

அவளது நெஞ்சமே அவள் சொல் கேட்கவில்லையெனில், மற்றவர்கள் சொல்வதை அவளால் எப்படி ஏற்கமுடியும்? அவளது நினைவில் இருந்து அவன் மறையவில்லையே!

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

ஒருவர்க்கு அவர் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது மற்றவர் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

Monday, November 17, 2014

திருக்குறள்-காமத்துப்பால்- 1286 முதல் 1290 வரை



குறள்-1286

கணவன் அருகில் இருந்தால், அவளுக்கு அவன் மீதான குறைகள் ஏதும் கண்ணுக்குத் தெரிவதில்லை.ஆனால், அவன் இவளைப் பிரிந்து சென்றால்..அவனிடம் உள்ள குறைகளை மட்டுமே அவளது மனம் கணக்கிடுகிறதாம்

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

கணவனை நான் காணும்போது அவரது தவறுகள் தெரியவில்லை. காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிற தெரியவில்லை.

குறள்-1287

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.அதில் பாய்ந்தால் அதனுடன் அடித்துச் செல்வோம் என்று அறிந்தும், மடத்தனமாய் அதைல் பாய்பவர்களைப் போல, அவனிடம் கொண்ட கோபம் பலனளிக்காது என்று தெரிந்தும், தேவையின்றி அவனுடன் ஊடல் கொள்வது எந்தப் பயனை அளிக்கும்?


உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாது என அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?.

குறள்-1288

கள்ளுண்ணுதல் தீமை என மனம் சொன்னாலும், உண்ணுவதால் உண்டாகும் மயக்கத்தை மனம் கொடுப்பது போல, காதலன் அவளுக்கு இழிவுதரும் துன்பங்களைச் செய்தாலும் அவன் மீது கொண்டுள்ள காதல்



இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.



என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு.

குறள்-1289

காதல் இன்பம் மிகவும் மென்மையானது.அதை அனுபவிக்க என இடம், பொருள் எல்லாம் இருக்கிறது அதை அறியாது காதல் நலன் அடைய நினைப்பவரே அதிகம் உள்ளனர்

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே.

குறள்-1290

காதலி, காதலனுடன் ஊடல் கொண்டுள்ளாள்,ஆனால் அவனைக் கண்டதும், அவனுக்கு முன்பாகவே அவனைத் தழுவி அவனுள் கலந்துவிடுகிறாள்.அந்த அளவிற்கு அவன் மீது உள்ள காதல் ஊடலை மறக்க வைத்து விடுகீறது

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.


கண்களால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.

Sunday, November 16, 2014

திருக்குறள்-காமத்துப்பால்- 1281 முதல் 1285 வரை



குறள்-1281

கள் அருந்தினால்தான் மயக்கம் தரும்.ஆனால்..காதலிப்பவர்களுக்கோ..ஒருவரை ஒருவர் நினைத்தாளே கள் உண்ட மயக்கம் வந்துவிடுமாம்.ஒருவரை ஒருவர் பார்த்தாலே மயக்கும் இன்பம் வந்துவிடுமாம்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு. #1281

நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு.

குறள்-1282

காதல்..காதலனிடம் பெருகும் நேரத்தில்..அதை வீணாக்க இருவருக்குள் சிறு ஊடல் போதுமாம்.ஆகவே..காதல் பெருகைகையில் ஊடல் கூடவே கூடாதாம்

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவுக் கூட ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

குறள்-1283

காதலி சொல் கேட்காமல்..காதலன் தன் விருப்பத்திற்கு செயல்களைச் செய்தாலும்..காதலியின் கண்கள் அவனைக் காணவேண்டும் என்றே இருக்கிறதாம்

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் இருப்பதில்லை.

குறள்-1284

காதலனைக் கண்டதும்..அவன் செய்த தவறுகளையெல்லாம் எண்ணி அவனுடன் பெரும் சண்டை போட வேண்டும் என எண்ணுகிறாளாம் தலைவி.ஆனால் அவனைப் பார்த்ததுமே எல்லாவற்றையும் மறந்து அவனுடன் கூடவே மனம் சென்றுவிடுகிறதாம்.


ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

தோழி! நான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

குறள்-1285

காதலி கண்களுக்கு மை தீட்ட மை தீட்டும் கோலைத் தேடுகிறாள் .அதைக் காணவில்லை.அதே போன்று காதலைக் கண்டதும் அவன், அவளைப் பிரிந்து சென்ற கோபம் காணாமல் போகிறதாம்.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

Saturday, November 15, 2014

திருக்குறள்-காமத்துப்பால்-1276 முதல் 1280 வரை



குறள்-1276

என்றும் இல்லாதவாறு காதலியை ஆரத்தழுவுகிறான் காதலன்.அப்படி அவன் அவளிடம் காட்டும் அன்பு அவன் அவளைவிட்டு பிரியப்போகிறானோ என்னும் அச்சத்தை அவளுக்கு அளிக்கிறதாம்.

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

குறள்-1277
காதலன் காதலியை சற்றும் விருப்பம் இன்றித் தழுவுகிறான்.அது அவள் உடல் அறியவில்லையாம்.ஆனால் உள்லத்திற்குத் தெரிகிறதாம்.அதனால்தான் அவளது வளையல்கள் அதை உணர்ந்து கையிலிருந்து கழலுகிறதாம்

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.


குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை அவள் வளையல்கள் அவளுக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!.

குறள்-1278

இணைபிரியா காதலர்கள்.காதலன் அவளை நேற்றுதான் பிரிந்து சென்றுள்ளாம்.ஆனாலும்,,அப்பிரிவையும் தாங்கமுடியாது பசலை அடைந்து ஏழுநாட்கள் பிரிந்தாற் போல உள்ளதாம்


நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

நேற்றுத்தான் அவள் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், ஏழுநாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் அவளைப் பற்றிக் கொண்டதே.

குறள்-1279
அவன் பிரிந்து சென்றுள்ளான் என்பதை மெலிந்த தோள்களும், கழன்ற வளையல்களும் உணர்த்துவதால்..அவள் அவன் இருக்குமிடம் நோக்கிச் செல்ல தீர்மானித்துவிட்டாளாம்


தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது. #1279

பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

குறள்-1280

சாதாரணமாகவே தனது உள்ளம் சொல்வதை கண்களாலேயே சொல்லிவிடுவார்கள் பெண்கள்.ஆம்..அவர்கள் கண்களே பேசும்.அதுபோல காதல் ஆசையையும் கண்களால் உணர்த்தி..அதைத் தீர்க்குமாறு காதலனுக்கு சொல்லிவிடுவார்களாம்.

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.


காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண் தன்மை மேலும் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.

Friday, November 14, 2014

திருக்குறள்-காமத்துப்பால்-1271 முதல் 1275 வரை



குறள்-1271

காதலி, காதலனிடம் தனது விருப்பம் என்ன எனத் தெரிவிக்க நாணப்பட்டுக் கொண்டு தெரிவிக்கவில்லை.ஆனால்...அவளது அழகிய மை தீட்டப்பட்ட கண்கள் அவள் சொல்ல விழைவதை அவனிடம் சொல்லிவிடுகிறதாம்

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி  இருக்கிறது.

குறள்-1272

காதலியிடம் கண் நிறைந்த அழகு, பெண்மைப் பண்பு. அழகிய மூங்கில் போன்ற தோள்கள்...காதலனுக்கு அவளை ரசித்துக் கொண்டே இருக்கலாம் போல உள்ளது.அவரவர்க்கு, அவரவர் காதலி பேரழகாய்த் தெரிவதில் வியப்பு என்ன?

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.

குறள்-1273

குறள்-1273

பளிங்கிற்குள் உள்ளது வெளியே தெரியும்.ஆகவேதான்..ஒளிக்க ஒன்றுமில்லா மனதை பளிங்குமனம் என சொல்வர்.ஆனால் அழகு அவளுக்கு பளிங்கு மாலைக்குள் கோர்க்கப்பட்ட நூல் தெரிவது போல தெரிகிறதாம்.

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.


கோக்கப்பட்ட மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

குறள்-1274

அரும்பாத மலர் தனக்குள் வாசனையை அடக்கி வைத்திருக்கும்.அது மலர்ந்ததும் அதன் வாசம் நம்மை இழுக்கும்.அதேபோல ஒரு பெண்..அதுவும்..நம் காதலி ஒரு புன்னகை செய்தால் போதும்..அந்த புன்னகை எனும் அரும்புக்குள் காதலனின் நினைவு நிரம்பி இருக்குமாம்.


முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

குறள்-1275

கணவன், மனைவிக்குள் அவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் பல சங்கேத மொழிகள் உண்டு.அது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்.

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் மனைவியின் பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

Thursday, November 13, 2014

திருக்குறள்- காமத்துப்பால்- 1266 முதல் 1270 வரை



குறள்-1266

காதலனைப் பிரிந்து காதலி.அவன் வருகைக்காகக் காத்திருக்கிறாள்.அவன் வந்ததும் அவனைப் பிரிந்திருந்ததால் அவளுக்கு இருந்த துன்பம் விலகிவிடுமாம்.அத் துன்பத்தை அவள் நோய் என்றதன் மூலம் அதன் வேதனையை உணரலாம்.
 
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லாம் தீருமாறு நான் நன்றாக இன்பம் துய்ப்பேன்.

குறள்-1267

பிரிந்திருந்த கணவன் வந்தால், அவன் பிரிந்திருந்ததற்காக ஊடுவாளா?அல்லது..பிரிந்தவர்கூடினால் பேசவும் வேண்டுமோ? என்பத்ற்கேற்ப பேசாமல் அவனைத் தழுவுவேனா? அல்லது இரண்டையும் செய்வேனா? இக்காதலிக்கு என்னதொரு குழப்பம் பாருங்கள்


புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.


கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?.

குறள்-1268

இங்கே...தலைவனின் நண்பன் கூறுகிறான்.அவன் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெற்றால் இவன் தன் மனைவியுடன் உல்லாசமாய் இருப்பானாம்.தலைவனின் நலமே தன் நலம் என எண்ணம்.


வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வென்றால் என் மனைவியுடன் எனக்கு மாலை இன்ப விருந்துதான்.

குறள்-1269

நமக்குப் பிடித்தவர், நம்மை விட்டு பிரிந்திருந்தால்..ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய்த் தோன்றும்.காதலன், காதலிக்கும் கூட இது பொருந்துமாம்.வெளிநாடு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்திருக்கிறாள்.அவன் திரும்ப வரும் ஒவ்வொரு நாளும் ஒருநாள் ஏழுநாட்கள் போல நீண்டுத் தெரியுமாம்.


ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.

பாடல்-1270

பிரிவுத் துன்பத்தைப் பொறுக்கமுடியாது மனம் பேதலித்துப் போனப்பிறகு, மீண்டும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கூடுவதினால் பயன் ஏதுமில்லை.பிரிவுத் துயர் மனநிலைக் கூட பிறழச் செய்து விடுமாம்



பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போய் விடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்?.

Wednesday, November 12, 2014

திருக்குறள் - காமத்துப்பால்-1261 முதல் 1265 வரை



குறள்-1261

காதலன் காதலையைப் பிரிந்து செல்கிறான்.அவன் பிரிந்து சென்றது முதல் ஒவ்வொரு நாளும் சுவரில் ஒரு கோடு இடுகிறாள்.அதனால் அவள் விரல்கள் தேய்ந்துவிட்டனவாம்.அவன் வருகிறானா...என பார்த்துப் பார்த்து கண்களும் காணும் திறனை இழந்து வருகிறதாம்.


வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்தன.

குறள்-1262

காதலரை அவளால் மறக்க இயலவில்லை.அவள் மறந்திருக்க முயன்றாலும் அவள் தோள்கல் அழகு இழந்து மெலிந்து, அதில் அணிந்திருந்த அணிகலங்களும் கழன்று விழும் நிலையில் உள்ளனவாம்

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகிழந்து மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதி

குறள்-1263

அவனுக்கு அவளதுபால் ஈடுபாடு இல்லை.ஆனால் அவளுக்கோ அவனை மறக்க இயலவில்லை.எவ்வளவு காலம் ஆனாலும் அவன் விரும்பி திரும்பும்வரை காத்திருப்பாளாம் இந்த கண்ணகி


உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.

குறள்-1264

அவளைப் பிரிந்து சென்றவன்..அதே அன்புடன் அவளைக் காண திரும்பி வருகிறான்.காதலிக்கோ மகிழ்ச்சியடைகிறாள்.மனம் உயரத்தில் கொடி கட்டிப் பறக்கிறது.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யை நினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.

குறள்-1265

கணவனைக் காணாமல் வாடுகிறாள் மனைவி.அதனால் உடலில் பசலை படர்கிறது.அவனைப் பார்த்தால் போதும் தன் நோய் நீங்கிவிடும் என்கிறாள் அவள்


காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு. #1265


என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம்
தன்னால் நிங்கி விடும்.

Tuesday, November 11, 2014

திருக்குறள்- காமத்துப்பால்- 1256 முதல் 1260 வரை





குறள்-1256

காதலன் காதலியைப் பிரிந்து சென்றுள்ளான்.காதலிக்கு அவனுடன் போய்ச் சேர வேண்டும் என்று ஆசை.அந்த ஆசை எதனால் உண்டானது? அதற்குக் காரணம் அவனுடன் உள்ள காதலாம்.காதல் நோய்தான் அப்படி அவளைத் தூண்டுகிறதாம்.


செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
தெளிவுரை

வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் மிகவும் கொடுமையானது

குறள்-1257

அவன் அவளைக் காதலிக்கிறான்.ஆகவே அவள் சொல்வதையெல்லாம் கேட்கிறான்,ஆகவே, அவன் எதையாவது விரும்பி, அவள் நாணத்துடன் சம்மதிக்கும் நிலையில் இல்லை.ஆகவே நாணத்தை அவள் மறந்தாளாம்.


நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்

நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.

குறள்-1258

காதலன் அவளைப் புகழ்வதையெல்லாம் கேட்க மனம் விரும்புகிறது.அவன் சொல்வது சற்று மிகைப்படுத்தல் என அவளுக்குத் தெரியுமாம்.அந்த பணிவான சொற்கள் அவளைக் கட்டிப் போடுகிறது.


பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

அவளுடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலனுடைய பணிவுடைய மொழி அல்லவா?

குறள்-1259

காதலன் வந்தால் ஊடல் கொள்ள எண்ணி அவள் அவன் முன் வாராமல் இருந்தாளாம்.ஆனாலும், அவள் மனம் அதையே நினைத்தோ கொண்டிருந்ததால் அதற்கு அவசியமில்லை என எண்ணிவிட்டாளாம்.

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு மறந்து தழுவிக் கொண்டேன்.

குறள்-1260

அவளுக்கு அவளது காதலனைக் கண்டால்..மனம் கட்டுப்படுத்த முடியாது இருக்கிறதாம்.அது கொழுப்பைத் தீடிலிட்டாம் உருகுவதுபோல மனம் கரைகிறதாம்.ஆகவே ஊடல் என்பது அவளால் முடியாதாம்.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?.

திருக்குறள்- காமத்துப்பால்- 1251 முதல் 1255 வரை



குறள்-1251

காதலிக்கோ காதலனைக் கண்டால் நாணம்.தன் விருப்பத்தையும் சொல்ல நாணம் குறுக்கே உள்ளது.ஆனாலும், வேறு வழியின்றி சொல்ல வைக்கிறது காமம் என்னும் நோய்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.

குறள்-1252

நடுஇரவு. ஊரே உறங்க..அவள் மட்டும் அவனை நினைத்து உறங்கவில்லை.அவளை உறங்க விடாது காதல் இரக்கமற்றதாய் இருக்கிறதாம்


காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.

குறள்-1253

நாம் தும்மினால்...பெரியோர்கள், "யாரோ உன்னை நினைக்கின்றனர்.அதானல்தான் தும்முகிறாய்' என்பார்கள்.ஆனால் இந்தத் தலைவி காதலை மறக்க எண்ணுகிறாள்.அந்த நினைவே தும்மலாய் வருகிறதாம்.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

நான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.

குறள்-1254

அவள் மிகவும் அடக்கமானவள். ஆனால், அவள் காதலிக்க ஆரம்பித்ததும், அவள் காதல் விருப்பம் ஊர் முழுதும் எப்படியோ தெரிந்துவிட்டது.காதலை நாம் மறைக்க முயன்றாலும் வெளிப்பட்டுவிடும் என்று தெரியாதவளா இவள்?


நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும். #1254

நான் இதுவரையில் அடக்கத்துடன் உள்ளதாக எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து வெளியே வெளிப்படுகின்றது.

குறள்-1255

காதலன் அவளை விட்டு பிரிந்து சென்றுள்ளான்.அவளாலும் அவனை பிந்தொடர முடியாது.அந்த அடக்கக் குணத்தை தெரியாதவர்கள், தெரிந்துகொள்ள காதலிக்க வேண்டும்.அல்லையேல்..அத்துயரம் எப்படிப்பட்டது என அறிய வாய்ப்பில்லை.

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று. #1255

தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருங்குணத்தை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அன்று.

Monday, November 10, 2014

திருக்குறள்-காமத்துப்பால் -1246 முதல் 1250 வரை



குறள்-1246
காதலிக்கு, காதலனுடன் ஊடல்.அதைக் கண்ட காதலன், சமாதானப்படுத்த வருகையில், கொஞ்ச நேரம் ஊடலை மறந்தாலும்..மீண்டும் ஊடலை விட்டுக் கொடுக்கமாட்டாலாம் .இதனால்..பாவம் காதலனுக்குக் கொடியவன் என்ற பெயரை வேறு ஏற்படுத்தி விடுகிறாள்

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. #1246

என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.


குறள்-1247

காதலிக்கு காதலன் மீதான காமத்தையும் விடமுடிஉஅவில்லை.அதைச் சொல்ல நாணமும் விடவில்லை.அதற்காக நான் என்ன செய்வேன் என தன் நெஞ்சையேக் கேட்கிறாள்

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.
குறள்-1248
காதலன், காதலியைப் பிரிகிறான்.ஆனாலும் அந்த பிரிவு துன்பத்தால் வருந்து அவர் நம் மீது அன்பு செலுத்தவில்லையே என அவனையே எண்ணிக் கொண்டிருக்கிறாளாம்.


பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. #1248
தெளிவுரை

என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய்..

குறள்-1249

மனதிற்குள் எவ்வளவோ வருத்தம்.காதலன் பிரிந்ததற்கு ஏதேதோ காரணம், கண்கள், நெஞ்சம் என ஒவ்வொன்றின் பேரிலும் வருத்தம்.கடைசியாக தன் மனதிற்கு கீழ்கண்டபடி ஆறுதல் சொல்கிறாள்


உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?.

குறள்-1250

அவளைக் கலந்து ஆலோசிக்காது அவன் பிரிந்து சென்றுள்லான்.அதை மனதில் எண்ணி எண்ணி மேலும் மேலும் மெலிகிறாள் இந்த நாயகி

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

திருக்குறள்-காமத்துப்பால் -1241 முதல் 1245 வரை



குறள்= 1241

காதலனைப் பிரிந்து இருப்பதால் காதலிக்கு காமம் ஆட்டிப்படைக்கிறது.பசலை நோய்.அப்போது..தன் மனதிடம் அவள் கேட்கிறாளாம், "மனமே! என் நோய் தீர்க்கும் மருந்து ஒன்று சொல்" என.

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) என் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?.

குறள்-1242

காதலன்..அவளைப் பிரிந்து செல்கிறான்.திரும்ப எப்போ வருவான் எனத் தெரியவில்லை.ஆனால், நெஞ்சம் மட்டும் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறது.அதற்கு அவள் (தனக்குத் தானே!) அவள் ஆறுதல் சொல்கிறாளாம்.
எப்படி எனப்பார்ப்போம்.

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

மனமே! நீ வாழ வேண்டும்! (ஆதலால்)அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!.

குரள்-1243

அவளைப் பிரிந்து சென்ற அவனுக்கு அவள் மீது இரக்கமில்லை.ஆதலால்..என் மனமே ..நீ இறக்கவும் செய்யாது, அவர் வருவதை எண்ணி எண்ணி துன்பம் என்னும் நோயால் ஏன் வருந்த வேண்டும்?

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் தன்மை இல்லையே.

குறள்-1244

அவளது மனதிற்குத் தெரியும்.முதலில் காதலனைக் கண்டால் காணப்போவது கண்தான் என.இருந்தாலும்..தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்கிறாள்.எப்படி...
என் மனமே,  நீ அவரைக் காணச் சென்றால்..என் கண்களையும் எடுத்துச் செல்.இல்லையேல்..அக்கண்கள் என்னையே தின்னுவிடுவது போல என்னை வருத்தும் என்கிறாள்.


கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

குறள்-1245

அவள் அவன் மீது அன்புடன் இருக்கிறாளாம்.ஆனால்..அவளுக்கு அவன் மீது அன்பு இல்லையாம்.அதனால்..நாமும் வெறுத்து ஒதுங்க வேண்டும் என்றாள்..மனம் கேட்கவில்லையாம்..ஆம்..இதை யாருக்கு சொல்கிறாள்..தன் நெஞ்சுக்கே சொல்லிக் கொள்கிறாள்


செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

நெஞ்சே! நான் விரும்பி நாடினாலும் என்னை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணி அவரைக் கைவிட முடியும‌ோ?.

Sunday, November 9, 2014

திருக்குறள்-காமத்துப்பால் -1236 முதல் 1240 வரை



குறள்-1236

காதலன் பிரிந்து சென்றுள்ளான்.காதலிக்கோ அதனால் தோள்கள் மெலிந்து..கை வளையல்களும் கழன்று விழும் அளவு துன்பம் ஏற்படுகிறது.ஆனால்..அதற்குக் காரணமான காதலனைக் கொடியவன் என்று சொல்வதற்காக அவள் வருந்துகிறாளாம்.


தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

(அவன் பிரிவால்)வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

குறள்-1237

அப்படி காதலன் பிரிவால் வாடும் அவள் நிலையை அவனிடம் நெஞ்சே நீ எடுத்துச் சொல்ல மாட்டாயா? அப்படிசொல்லி நீ பெருமை அடையக் கூடாதா என்கிறாள்


பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து.

நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடையாயோ?.

குறள்-1238

காதலனைப் பிரிந்த காதலையைப் பற்றிதான் வள்ளுவன் சொல்லியுள்ளானா...இல்லை..என்கிறது இக்குறள்.
அவளை இறுகத் தழுவி, பின் அந்த இறுக்கம் சற்றே தளர்த்த..அந்தச் சற்று இடைவெளியும் பொறுக்காமல் அவள் நெற்றி பசலை வந்து ஒளி குறந்ததே! என காதலன் வருந்துகிறான்.
 

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

(அவளை)தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.


குறள்-1239

அவளைப் பிரிந்த காதலன் மேற் சொன்னபடி எண்ணுவதுடன்..அவள் நெற்றி மட்டுமல்ல..தழுவலுக்கு இடையே குறைந்த நெருக்கத்தால் காற்றும் உள் புகுந்து கண்கள் நிறம் இழ்ந்தனவே! அவை இப்போது எப்படி உள்ளதோ! என வருந்துகிறான்.

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் பசலை நிறம் அடைந்தன.. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?.


குறள்-1240

இந்தக் குறள் காதலனோ அதை வேறு கண்ணோட்டத்தில் சொல்கிறான்.எங்களிடையே தழுவுதல் சற்றே இறுக்கம் குறைந்ததால் நெற்றி பசலை அடந்தது.அதைப் பார்த்த கண்கள் துன்பம் அடைந்தது என்ங்கிறான்.


கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய கண்களும் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

Saturday, November 8, 2014

திருக்குறள்-காமத்துப்பால் -1231 முதல் 1235 வரை



குறள்-1231

காதலன் பொருளீட்ட வெளியூர் சென்றுள்ளான்.அத்துன்பத்தால்..அவள் தனிமையில் அழுகிறாள்.அப்படி அழுது, அழுது அவளது கண்கள் அழகை இழந்து, மலர்களுக்கு முன் வெட்கமுற்று இருக்கின்றனவா,

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

பிரிவுத் துன்பத்தை அளித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.

குறள்-1232

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.முகம் காட்டிக் கொடுத்தாலும்..கண்கள் மேலும் பொறுப்பேற்று பேசும்.கண்கள் ஒருவர் நம்மை எந்தவகையில் விரும்புகிறார் என்பதைச் சொல்லிவிடும்.இந்த குறள் என்ன சொல்கிறது

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.


பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் பிறர்க்குச் சொல்வன போல் உள்ளன.

குறள்-1233

காதலன் காதலியை மணந்த போது..அவனைத் தழுவிய தோள்கள்..அந்த இன்பத்தால் நங்கு பருத்து ஆரோக்கியமாக இருந்தன.இன்று காதலன் பிரிந்து சென்று விட்ட படியால் பருத்திருந்த தோள்கள் மெலிந்து அவனது பிரிவால் அவள் படும் வேதனையை ஊருக்கே சொல்லிவிடுகிறதாம்

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

காதலனுடன் கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், இப்போது மெலிந்தும் காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.

குறள்- 1234

முந்தைய குறளில் காதலிக்கு தோள்கள் மெலிந்தன காதலன் பிரிவால்.ஆனால், இக்காதலிக்கோ அவளது தோள்கள் பெலிந்து, வலு விழந்து..அவள் அணிந்திருந்த வளையல்களும் கழலும் வண்ணம் ஆகிவிட்டதாம்.

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

காதலன் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

பாடல்-1235

காதலன் பிரிந்து இருந்ததால் அவளது இயற்கை அழகு குறைவதுடன் அல்லாது, தோள்களும் மெலிந்து காதலன் பிரிந்த கொடுமையை ஊருக்கேச் சொல்கின்றன

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (பிரிந்து சென்றவனின்) கொடியவரி்ன் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

Friday, November 7, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1226 - 1230



குரள்-1226

காதலிக்கும் போது..மனம் மாலைப்பொழுது வராதா? என ஏங்குகிறது.மணந்தபின், காதலன் அவளைவிட்டு சில காலம் பிரிந்து சென்றாலும்..முன்பு இன்பம் தந்த மாலைப்பொழுது இப்போது துன்பத்தைத் தருகிறதாம்

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

மாலைப் பொழுது இவ்வளவு துன்பம் தரக்கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் நான்ன் அறியவில்லை.

குறள்-1227

காமம் இருக்கிறதே..அது ஒரு அழகிய பூவைப் போன்றதாம்.அப்பூ காலைப் பொழுதில் அரும்புகிறதாம்.பகலில் சற்றே முதிர்கிறதாம். மாலையில் முழுதும் மலர்ந்துவிடுகிறதாம்.மாலையில் மலர்வது மகிழ்வுதானே!

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.


இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

குறள்-1228

ஆயனின் புல்லாங்குழல் ஓசை, காதலனைப் பிரிந்துள்ள காதலிக்குத் துன்பம் தரும் மாலைப்பொழுதிற்கு வரும் தூதாகத் தெரிகிறதாம்.


அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

காதலர் பிரிவால்  தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை அவளைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் காதில் ஒலிக்கிறது.

பாடல்-1229

மாலைப் பொழுது ..காதலிக்குத் துன்பத்தைத் டஹ்ருகிறது.காமாலைக் கண்ணனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாய்த் தெரியும் என்பார்கள்.இந்தக் காதலிக்கோ..அந்த மாலை அவளை மட்டுமன்றி அனைவரையுமே துக்கத்தில் ஆழ்த்துவது போலத் தெரிகிறதாம்


பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.


அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்து போலத் தெரிகிறது.

குறள்-1230

பொருளீட்ட காதலன் பிரிந்து சென்றுள்ளான்.ஆனால் அது அவளுக்கு வருத்தத்தைத் தரவில்லை.ஆனால்..மாலைப்பொழுது வந்ததும் அவளைத் துன்பம் வாட்டுகிறதாம் அவன் நினைப்பு.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்

பொருள் ஈட்ட சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.

Thursday, November 6, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1221 - 1225



குறள்-1221

காதல் வயப்பட்டவர்களுக்கு மாலைப்பொழுது துன்பம் தரக்கூடிய ஒன்று.கூடுதலும், பிரிதலும் பெரும்பாலும் மாலைப் பொழுதிலேயே நடப்பதால்/திருமணத்திற்கு முன் வரும் மாலை இனிக்கும்..அதற்குப் பின்..


மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. #1221


பொழுதே! நீ வாழி. நிமாலைக்காலம் அல்லை; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!.

குறள்-1222

மாலைப் பொழுது மறந்து இரவு தொடங்குகிறது.அவள் காதலன் வரவில்லை.அவளுடன் சேர்ந்து மாலையு, இரவும் கூட துன்பம் அடைகிறதாம்


புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?.

குறள்-1223

மாலைப்பொழுது வந்தால் காதலிக்கு..காதலனைக் காணாவிடின் துன்பம் உண்டாகும்.இங்கு அவன் அருகில் இருக்கும்வரை பசலை எட்டிப்பார்க்காத நிலையில், அவன் பிரிந்ததும் மாலைநேரம் வரும் முன்னரே உடலில் பசலை வந்துவிடுகிறது

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.

குறல்-1224

காதலனைப் பிரிந்து இருக்கையில் வரும் மாலைப்பொழுது அவளைக் கொல்ல வீசப்பட்ட வாளைப்போல துன்பத்தைக் கொடுக்கிறதாம்

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

காதலர் பிரிந்திருக்கும் போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.

குறள்-1225

காலைப்பொழுது காதலிக்கு இன்பத்தைத் தருகிறது.அதே போல இல்லாது மாலைநேரம் ஏன் இல்லை.அதற்கு அவள் ஏதும் தீங்கிழைக்கவில்லை.ஆயினும் அவளுக்கு அது கெடுதியே செய்கிறதே!

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.


நான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?.

Wednesday, November 5, 2014

திருக்குறள் - காமத்துப்பால்- 1216 -1220



குறள்-1216

காதலனைக் தன் கண்களால் கண்டு ரசித்தவள் காதலி.இதயத்தின் வாசல் விழிகள் அல்லவா? அதன் வழி நுழைந்து அவள் இதயத்தில் இடம் பிடித்துவிட்டான் காதலன்.ஒருநாள் அவளைப் பிரிந்து செல்ல வேண்டிய சூழல்.பிரிகிறான்.இப்போது அவளது கனவில் வந்து அவளை வாட்டுகிறான்.எல்லாவற்றிற்கும் காரணம் கண்கள்தானே என கண்களைத் திட்டுகிறாள் காதலி

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். #1216

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருந்தால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பார்.

குறள்-1217

அவனை அவளால் மறக்க முடியவில்லை.தினமும் கனவில் வந்து அவளை வாட்டி வதைக்கிறான்.நேரில் வந்து பார்க்காதவன் கனவில் மட்டும் ஏன் வர வேண்டும்? என அன்பு இல்லா காதலனைப் பற்றி அன்பாக மனதில் திட்டுகிறாள்


நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.

நேரில் வந்து என்னிடம் அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து என்னை வருத்துவது என்ன காரணத்தால்?.

குறள்-1218
அவனைப் பிரிந்து இருக்கிறாள் அவள்.ஆனால் அவள் கனவில் வந்து தோள் டஹ்ழுவிக் கிடக்கிறார்.ஆனால் அவள் விழித்ததும் உன் மனதில் இருக்கிறேனே என மறைகிறார்.இந்த பெண்களுக்கு காதலர்கள் கனவில் வந்தாலும் துன்பம்..வாராவிடினும் துன்பம்

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.


தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் சாய்ந்து இன்பம் தருபவர், விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌.

குறள்-1219

காதலன், காதலி அன்பு என்றால் என்ன என அறியாத இளம் பெண்கள்..மணமான தன் தோழி காதலனைப் பிரிந்து வாடும் துன்பம் கண்டு...(அவள் துன்பத்திலும் இன்பம் உண்டு என அறியாது)காதலனை அன்பற்ற்வன் என ஏசுகிறார்களாம்.


நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.


குறள்-1220

காதலன் பிரிந்து சென்றதைக் கண்டு, அவன் காதலியிடம் அவன் உன்னைப் பிரிந்து செல்லலாமா? என ஏசுபவர்கள்..அவன் பிரிவை அவள் தாங்கும் படி கனவில் வருவதை அறியமாட்டார்கள்

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார்.. என் கனவில் அவர் வருவதை அறியமாட்டார்கள்

திருக்குறள் - காமத்துப்பால்- 1211 -1215



குறள் 1211

காதலன் பிரிந்து சென்றுள்ளான்.அவனிடம் இருந்து செய்தி ஏதும் வரவில்லை.அதே துயரத்தில் சிறிது கண் மூடி அரைதூக்கத்தில் இருக்கிறாள். அப்போது அவனிடம் செய்தி வந்தது போல இன்பக் கனவு.அவளுக்கு வந்த இக் கனவிற்கு அவளால் யாது ஈடு செய்ய முடியும்.


காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.

(நான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.

குறள் 1212

அவனைப் பிரிந்து அவளுக்குத் தூக்கம் வரவில்லை.அப்படி எப்போதேனும் கண்கள் தூக்கத்தைத் தழுவினால்..அவனை எண்ணி அவள் வாடுவதைத் தூக்கத்தில் வரும் கனவில் வரும் அவனிடம் சொல்வாளாம்


யலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

கண்கள் நான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு நான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

குறள் 1213

காதலன் நினைவிலேயே இருக்கிறாள்.கனவில் வருகிறான்.ஆனாலும் அவளைக் காதலிப்பதாய்த் தெரியவில்லை.ஆயினும்..அவன் கனவில் வரும் ஒன்றே அவள் உயிர் வாழ அவளுக்குப் போதுமானதாய் உள்ளதாம்.


நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

கனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளது

குறள்-1214

காதலன் அவளை பிரிந்து சென்றுள்ளான்.அவன் நேரில் இருந்து அவளிடம் அன்பு செலுத்தவில்லை.ஆயினும்..அவளுக்கு அவனைப் பற்றி வரும் கனவு அவன் இருப்பிடம் சென்று அவனை அவளுக்கு சொல்வதால் இன்பம் உண்டாகிறதாம்.

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.


நேரில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் இன்பங்கள் உண்டாகின்றன.

குறள்1215

காதலன் நேரில் இல்லாததால் அவளுக்கு இழப்பு ஒன்றும் இல்லையாம்.அவன் கனவில் வருவதும்..அதில் அவன் அன்பு மொழி பேசுவதும்..அவளுக்கு நனவில் நடப்பது போல உள்ளதாம்.


நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

Thursday, October 30, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1206 முதல் 1210 வரை



குறள்-1206

காதலன் காதலியைப் பிரிந்து சென்று விட்டான்.அவளால் அந்த வேதனையை தாங்க முடியவில்லை.ஆனாலும் அவனுடன் இருந்த நாட்களை எண்ணி அது தரும் மகிழ்ச்சியில் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாளாம்.

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.


காதலராகிய அவரோடு நான் வாழ்ந்திருந்த  நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனை நினைத்து உயிர் வாழமுடியும்

குறள்- 1207

காதலன் மறந்து சென்று விட்டான்.ஆனாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாளாம்.அது எப்படி அவளுக்கு சாத்தியமாகிறது என்றால், அவனுடன் வாழ்ந்த நினைவுகள் மறக்க நினைத்தாலும் மறக்கமுடியாமல் சுடுகிறது.ஆனாலும், அந்த சூட்டையும் மறக்க விரும்பவில்லை அவள்.அது அவளுக்கு இன்பத்தையும் தருவதால்.


மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! நினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?.

குறள்- 1208

காதலனி நினைத்து..நினைத்து மகிழ்கிறாள்..அதற்கு காதலனின் அனுமதி தேவையில்லையே.அதனால் காதலன் கோபம் அடைய முடியாதே..அதுவே எனக்கு உதவியாய் உள்ளது என மகிழ்கிறாள்

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

அவரை நான் அதிகமாக  எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அல்லவா?.

குறள்-1209

காதலிக்கையில் காதலன் சொல்கிறான்..நான் ஓருயிர் ஈருடல் என.ஆனால், அவளைப் பிரிந்து சென்றபினவரை எண்ணி எண்ணியே காதலியின் உயிர் போய்க்கொண்டிருக்கிறதாம்

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய அன்பில்லா  தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.

குறள்-1210

இதுவரை பிரியாமல் இருந்த காதலன் பிரிந்து சென்றுள்ள்ளான்.இந்நிலையில் காதலிக்குத் துணையாய் இருப்பது நிலவு மட்டுமே.அந்த நிலைவை..தான் காதலனைத் தேட மறைந்து விடாமல் உடன் இருக்க வேண்டுகிறாள்.

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

நிலவே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.

Wednesday, October 29, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1201 முதல் 1205 வரை



குறள்-1201

கள் என்பதை குடித்தால் மயக்கம் வரும்.ஆனால்...எந்த லாகிரி வஸ்துக்களையும் பயன்படுத்தாவில்லாலும், மனிதனுக்கு ம்னைவியுடன் கூடி அனுபவித்த இன்பததை, அவள் பிரிந்திருந்த வேளையிலும் எண்ணினாலே இன்ப மயக்கம் தருமாம்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.


நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் தருதலால்,
 கள்ளை விட காமம் இன்பமானதாகும்.

குறள்-1202

காதலி, காதலனைப் பிரிந்திருக்கிறாள்..அது அவளுக்குத் துன்பம் தந்தாலும்...காதலன் தன்னிடம் கொண்டுள்ள காதலை எண்ணினால்..அத் துன்பமும், இன்பமாய் தெரிகிறது

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.

நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் எவ்வகையிலும் சரி, காதல் இனியதுதான்.

குறள்-1203

தும்மல் வரும்போது..வீட்டில் உள்ள பெரியோர்கள்..சாதாரணமாக..:யாரோ நினைக்கிறார்கள்" என்பார்கள் என்பதை அவள் நம்புகிறாள்.அதனால் தான் அவளுக்குத் தும்மல் வந்து அடங்கியதும்..அவளது காதலன் அவளை நினைப்பதை விட்டு விட்டானோ என ஐயம் கொள்கிறாள்

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்


தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பது போலிருந்து நினையாமல் இருந்து விடுவாரோ!.

குறள்-1204

சந்தேகம் என்பது ஒரு வியாதி.அதை குணமாக்க எந்த மருந்தும் இல்லை;அதுவும்..கணவன், மனைவியிடையே அந்த வியாதி புகுந்துவிட்டால்..வாழ்நாள் முழுதும் வேதனைதான்.ஆனால், வள்ளுவன் சொல்வது அப்படியில்லை.காதலிக்கு , காதலன் மீது அவ்வளவு அன்பு.ஆனால்..அதே போன்று அவருக்கும் என் மீது அன்பு இருக்குமா? என நினைக்கிறாள்.இது, அவன் மீது உள்ள சந்தேகத்தால் அல்ல.அவன், தன்னிடம் மட்டற்ற அன்பு செலுத்த வேண்டும் என விருப்பத்தினால்.


யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?.

குறள்-1205

சென்ற குறளின் நாயகி, தற்போது ஒரு படி மேலே செல்கிறாள். அவர் அவளைதன் நெஞ்சத்திலிருந்து விலக்கிவிட்டாராம்.ஆனால்..இவளால் முடியவில்லையாம்.அப்படிப்பட்ட நிலையில், தன் மனதில் அவன் குடியிருக்க
வெட்கப்பட வில்லையே ! என நினைக்கிறாளாம்.

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

தனது நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?.

Tuesday, October 28, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1197,1198,1199,1200


குறள்- 1197
ஆணிடம் மட்டுமே காமன் இயங்குகிறானாம்.அதனால்தான் பெண்கள் காம நோயால் வருந்துகையில்..ஏற்படுகிறதாம் பசலை.அதனால்...காமனின் கண்பார்வை பெண்ணிடமும் பட்டால்..பெண்ணின் துன்பம் பறந்தோடிடும்.


பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான். #1197

காமன், ஒரு பக்கமாக மட்டும் இயங்குவதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!.


குறள்- 1198

மனைவியர் வேண்டுவது என்ன? அன்பான கணவன்.தன்னிடம் இன்சொல் சொல்லும் தலைவன்.ஆனால்..பலர் இன்று அதற்கு மாறுபட்டு..மனைவியிடம் அன்பு செலுத்தாமல்..அவள் படும் வேதனைகளை உணராமல்..அவ்வளவு ஏன்..ஒரு அன்பான சொல்கூட சொல்லாது செயல் படுகின்றனர்.பாவம் அத்தகைய பெண்கள்

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல். #1198


தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் கொடுமை வேறொன்றும் இல்லை.

குறள் -1199

அன்பில்லாத கணவ்ன் அமைந்தாலும்..பெண்களுக்கே உரிய தன்மை அவன் எது பேசினாலும் மகிழ்வதே! அவனை பிறர் புகழ்ந்தால் மகிழ்ச்சி..அப்படிப்பட்ட பெண்கள் இருப்பதால் தான் இன்று இல்லறங்களே நல்லறங்களாய் உள்ளன

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.


என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் கேட்பது என் செவிக்கு இன்பத்தைத் தருகிறது

குறள்-1200

அன்பில்லாத கணவ்ன்.மனைவி எவ்வளவோ முயன்றும் மாற்ற இயலவில்லை.ஆனாலும்..மனம் என்ன செய்கிறது..கணவனிடம் சென்று துன்பத்தைச் சொல்கிறது.ஆனால் அவன் செவி சாய்க்கவில்லை.அவனை மாற்ற முயல்வது என்பது..கடலைத் தூர்க்கும் முயற்சி என நினைக்க ஆரம்பித்து விட்டாள் மனைவி

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

நெஞ்சே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது உனக்கு எளிதான வேலையாகும்.

Monday, October 27, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1194,1195.1196



கணவனை மிகவும் விரும்புகிறாள் மனைவி.ஆனால், கணவனுக்கோ மனைவியைக் கண்டாலே பிடிக்கவில்லை.ஆனால்..அவளை உலகுக்கேப் பிடிக்கும்..இருந்தாலும் தன் கணவன் தன்னை விரும்பவில்லையே என்ற வருத்தம் பெண்ணை விட்டு அகலாது

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.

குறள்-1195

காதல்..என்பது இரு தரப்பினரும் மனது ஒருமித்தால் ஆகும்.ஆனாலும்..நம்மைக் காதலிப்பவர் நம்மைக் காதலிக்கவில்லை யெனில்...நமக்கு வேறு எவ்வகையில் மகிழ்ச்சியைத் தரும்.காதல் தோல்வி..என்பது மிகவும் வருத்தத்தைத் தரக்கூடியதுதான்.

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

அவள் காதல் கொண்ட காதலர், அவர் அவ்வாறே அவளிடம் காதல் கொள்ளாதபோது, அவளுக்கு அவர் என்ன நன்மை செய்வார்?.

குறள்-1196

ஒருதலைக் காதல்...ஆம்..காஅதலி அவனை விரும்புகிறாள்.ஆனால்...காதலனுக்கு அவளிடம் நாட்டமில்லை.காதல் என்றாள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பம் தரக்கூடியது. காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் சமமாய் இருந்தால் இன்பமானதாகும்.

Sunday, October 26, 2014

திருக்குறள் - காமத்துப்பால்- 1191,1192,1193



தான் விரும்புகின்ற காதலன் தன்னை மட்டுமே விரும்ப வேண்டும்.சதா தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்..என்றெல்லாம் பெண்கள் ஆசைப்படுவது உண்டு.அப்படிப்பட்ட காதலன் அமையப் பெற்றால் காதலிகள் விதை இல்லா பழத்தைப் பெற்றார் போன்றவர்களாம்.

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.


தன்னை விரும்பும் காதலர், தன்னை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.

குறள்-1192

விவசாயிகள் பயிரிட்டுவிட்டு பயிர் செழிக்க மழையை எதிபார்ப்பர்.அந்த மழையும், உரிய நேரத்தில் பெய்து விட்டால். அந்த விவசாயியின் மனம் மகிழ்வெய்தும்.அது போன்ற மகிழ்ச்சியைத் தரக்கூடியது வேறு ஒன்றும் உண்டாம்.அது என்ன ..


வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

கணவனைப் பிரிந்து வாழ முடியா மனைவிக்கு, அவளின்றி வாழ முடியாமல்..கணவர் காட்டும் அன்பு,, தன்னை எதிர்ப்பார்த்து உயிர் வாழும் மக்களுக்கு வானம் உரிய நேரத்தில் மழை தந்தது போலவாம்.

குறள்- 1193

காதலிக்கு..பொன்னகைத் தேவையில்லை.எப்போது தெரியுமா? அந்தப் பெண் முழுக்க முழுக்க காதலனால் அன்பைப் பெற முடியுமானால். அப்படிப்பட்ட பெண்..தனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது என்ற கர்வத்தில் இருப்பாளாம்.காதலனின் அன்பின் சக்தியின்றி வேறு இதற்குக் காரணம் என்ன?!


வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு

 காதலனால் விரும்பப்படும் பெண்ணுக்கே..(பிரிந்து சென்றுள்ள வர் வருவார் என்ற பெருமிதத்தால்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்ற செருக்குத் தகும்

Saturday, October 25, 2014

திருக்குறள்- காமத்துப்பால்-1188 முதல் 1190



குறள்-1188

காதலர் இடையே..தவறு ஆண்கள் மீது இருந்தாலும், சமுதாயம் பெண்ணையே குறை கூறும்.அதேபோல காதலன் பிரிந்து சென்றபின்..அவன் நினைவால் காதலிக்கு பசலைப் படர்ந்தது.அது கண்டு காதலனைக் குறை சொல்பவர் யாரும் ஏன் இல்லை? என வள்ளுவன் காலத்திலேயே கேட்கிறாள் இப்பெண்.

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

இவள் உடலில் பசலைப் படர்ந்தது என சொல்கிறார்களே தவிர..(அதற்குக் காரணமான)காதலன் பிரிந்த்துதான் காரணம் என சொல்பவர் யாரும் இல்லையே!

குறள்-1189

பொருளீட்ட காதலன் ,காதலியை பிரிந்து செல்கிறான்..அதற்கு அவளும் சம்மதிக்கிறாள்.அவன் நல்லவன்..ஆகவே அவனைப் பிரிவதால் பசலை அடந்தேனாயின் அடைந்துவிட்டுப் போகட்டும்.


பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலன் நல்லவர் எனில் எனது மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்.

பாடல்-1190

அவன் , அவளைப் பிரிந்து சென்றுள்ளான்.பிரிந்தவன் சொன்ன காலத்திற்குள் வரவில்லை.அதனால் காதலி பசலை ஆயினள்.அதற்காக அவனை ஏசாமல்..தன்னைக் குறை சொல்வாராயின் அதுவும் நல்லதே என்கிறாள் காதலி இங்கு.

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், நான் பசலை உற்றதாக பெயர் எடுத்தால் நல்லதே.

Friday, October 24, 2014

திருக்குறள்-காமத்துப்பால் 1184,1185,1186,1187



குறள்1184

காதலனைப் பிரிந்து இருக்கிறாள் காதலி.ஆனாலும் அவன் நினைவை மறக்க வில்ளை..அவனிடம் உள்ள நல் குணங்களைப் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறாள். ஆனாலும்...அவன் உடன் இல்லையே என உள்ளம் வருந்துகிறது.அதனால் அவளை பசலை வாட்டுகிறது.


உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

நான் அவனுடைய நல் குணங்களை நினைக்கின்றேன்; நான் பேசுவதும் அவற்றைப் பற்றியே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது ஏன்?

குறள் 1185

திருமணம் நடந்த புதிதில் காதலன் வெளியே சென்ற சில நாட்களில் பசலை கொண்டுவிடும்.ஆனாலும்..இப்பொழுது மணம் முடிந்து ஆண்டுகள் ஓடி விட்டன.ஆனாலும்..முன்னைக் காட்டிலும்..அவர் மீது அன்பு அதிகமாகிவிட்டதா? பிரிந்ததுமே பசலை வாட்டுகிறதே!


உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

குறள்-1186

விளக்கு எரிகின்றது.அதிலுள்ள எண்ணெய் குறையக் குறைய வெளிச்சம் மங்கி இருள் சூழத்தொடங்குகிறது.வேளிச்சம் குறைந்ததுமே இருள் பூமியைத் தழுவிக்கொள்வது போல காதலனின் தழுவலில் அவனது பிடி சற்ருத் தளர்ந்தாலும்..காதலியின் உடலில் பசலை படர்கிறதாம்
 
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்க
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

விளக்கு சுடர் மெலிவதைப் பார்த்து உடன் நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்து பசலை வரும்.


குறள்-1187

அவள் அவனைத் தழுவிக் கொண்டிருந்தாள்.உடலில் ஏதும் நேரவில்லை..இன்பத்தைத் தவிர.ஆனால்..அவன் அவளை விட்டு சற்று விலகியதுமே பசலை அவளை அள்ளிக் கொண்டது.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

தலைவனை தழுவிக் கொண்டேன்.பின் .சிறிது அகன்றேன்..உடன் பசலை நிறம் அள்ளிக் கொள்வது போல உடலில் படரிவிட்டதே!




Thursday, October 23, 2014

திருக்குறள்- காமத்துப்பால்-1181 முதல் 1183



குறள் 1181

காதலன் வேலை சம்பந்தமாய் வெளியூர் செல்ல நேரிடுகிறது.வேறு வழியில்லாமல் காதலையை விட்டுச் செல்கின்றான்.அவளும் சம்மதிக்கிறாள்.ஆனாலும், அவன் பிரிந்து சென்றதும்..அந்தப் பிரிவினால் பசலை நோய் அவளை தவிக்க வைக்கிறதாம்.

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.

விரும்பிய காதலரை அன்று பிரிந்திருக்க சம்மதித்தேன்.ஆயின், பிரிந்த பின் பசலை உற்ற என் நிலையை யாரிடம் சொல்வேன்

குறள்-1182
காதலன் வேலை நிமித்தம் அவளைப் பிரிகிறான்.ஆனாலும், பிரிந்திருக்கும் அவனை எண்ணி காதலி உடலில் பசலை நிறம் உடலில் ஏறுகிறது.அது, அவனால்தான் என்பதால் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

 காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.


குறள்-1183

அவனைப் பிரிந்ததால் அவளுக்கு அழகு எதற்கு எனத் தோன்றுகிறது.அவன் இருந்தால் அழகு தேவை..அவன் இல்லாததால் அந்த அழகையும் அவன் கொண்டு சென்று விட்டான்.அத்துடன் இல்லாது, அவனைப் பிரிந்து வாடுவதால் பசலையும் ஏற்பட்டுவிட்டது..அது கண்டு வெட்கம் தோன்றவில்லை.அவன் இருந்தால்தானே அவள் வெட்கப்பட முடியும்?

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.


காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

Tuesday, October 21, 2014

திருக்குறள்- காமத்துப் பால் -1176 முதல் 1180 வரை



குறள்-1176

ஒருவர் துன்பத்தைக் கண்டு மகிழ்பவனை ஆங்கிலத்தில் "சேடிஸ்ட்." என்பார்கள்.இங்கும் காதலி அத்தகைய குணம் கொண்டவளாகத் திகழ்கிறாள்.இவளுக்குக் காதல் துன்பத்தைத் தந்தது அவள் கண்களாம்.அதனால்..அது இவளுடன் சேர்ந்து துன்பத்தைத் தாங்கமுடியாமல் அழுவது அவளுக்கு மகிழ்ச்சியாம்

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

எனக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் மகிழ்ச்சியே!.

குறள்-1177

பிரிந்து சென்றுள்ள காதலனை எண்ணி..எண்ணி விடும் கண்ணீர் கண்களில் வற்றிப் போகட்டும்...என அன்று அவனைக் கண்டு மகிழ்ந்து..இன்று காணாமல் வருந்தும் கண்களுக்கு அவள் சாபம் இடுகிறாளாம்.

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.

அன்று விரும்பி மகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

குறள்-1178

அவன் மனதில் அவள் நிறைந்திருக்கிறாள் என்றான் காதலன்.அவளும் அதை நம்பினாள்.ஆனால்..அவன் சொன்னது வாயளவிலே என அவன் பிரிந்து சென்றதால் நினைக்கிறாள் காதலி,அதுமட்டுமின்றி அவனைக் காணாததால் கண்கள் தூக்கத்தைத் தழுவவில்லையாம்.

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் அவர். அவரைக் காணாமல் கண்கள் தூங்காமல் உள்ளன.

குறள்-1179

இந்த கண்கள் இருக்கிறதே...மிகவும் பாவம்..காதலர்களிடையே மாட்டிக் கொண்டு தவியாய் தவிக்கிறது.இங்கு பாருங்கள்''அன்று அவனை எதிர்பார்த்துத் தூங்கவில்லையாம்.இன்று..அவன் பிரிந்துவிடுவானோ என எண்ணி தூங்கவில்லையாம்.


வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

காதலன் வராவிட்டால் தூங்குவதில்லை.வந்தாலும்..எங்கே பிரிந்து விடுவானோ என அஞ்சி தூங்குவதில்லை

குறள்-1180

காதலன் பிரிந்து சென்றதால்..அழுது வெளிக் காட்டும் கண்களால், காதலிக்கும் பெண்கள் பற்றி ஊரார் எளிதில் அறிந்து கொள்கின்றனராம்

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.

அடிக்கப்படும் பறைபோல துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய காதலிப்போர் பற்றிய செய்தியை அறிதல் ஊராருக்கு எளிதாம்.

Monday, October 20, 2014

திருக்குறள்- காமத்துப் பால் -1173 ,1174,1175



குறள்-1173

அன்று ஒருநாள் காதலனை ஆசையோடு வேக வேகமாகப் பார்க்கிறாள் காதலி.இன்று, ஏதோ அலுவல் காரணமாக அவன் அவளைப் பிரிந்து சென்று உள்ளான். அந்தப் பிரிவைத் தாங்காத கண்கள் கண்ணீர் சிந்துகின்றன.இதை நினைத்தால் மனம் சிரித்துக் கொள்கிரது.ஆனாலும்..கண்ணீர் அவனைக் காணும் வரை அவளுக்கு நிற்காது போல இருக்கிறதே!

 கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

அன்று காதலனைக் கண்கள் அவைகளாகவே விரந்து பார்த்து விட்டு, இன்று அவன் பிரிவினால் தாமே அழுகின்றன.இது சற்று நகைக்கும் தன்மை உடையது (அல்லவா)

குறள்-1174

அழுது அழுது என்ன பயன்..அவன் வரவில்லை/இந்தக் கண்கள் இருக்கிறதே அதுதான் காமநோயை எனக்குள் உண்டாக்கியது.பின்..அழமுடியாது அதன் கண்ணீர் வற்றியும் விட்டன.எனக் காதலி புலம்பிகிறாள்

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.

என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோ்யை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் கண்ணீர் இன்றி வறண்டு விட்டன.

குறள்-1175

அவளின், காமநோய்க்கு முக்கியக் காரணம் கண்கள்தான்.ஆனால்..அதேகண்கள், அவளுக்கு கடலைவிடப் பெரிய துன்பத்தையும் தந்துவிட்டு. அவளுடன் சேர்ந்து தூங்காமல் துன்பத்தையும் அனுபவிக்கிறது.


படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். #1175

கடலளவு பெரிதான தாங்கமுடியா காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று தூங்காமல் துன்பத்தால் வருந்துகின்றன.
.

Sunday, October 19, 2014

திருக்குறள்- காமத்துப் பால் -1171 ,1172



குறள்-1171

காதலனைப் பிரிந்ததால் வருத்தப்படுவது நெஞ்சமாய் இருந்தாலும், அவனைக் காண வேண்டும் என அழுவது கண்கள்தானே?

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

காமநோய் கண்கள் கண்டதால் விளைந்தது.அவ்வாறிருக்க காட்டிய கண்கள் இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?


குறள்-1172

காதலிக்கும் முன் காதலன் எப்படிப்பட்டவன் என்பதை எல்லாம் உணராமல் காதல் கொண்டன கண்கள்.ஆனால் அந்த அன்பை உணராமல் இன்று துன்பத்தால் வாடுவதும் அந்த் அக்கண்கள் தான்.

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.

ஆராய்ந்து உணராது காதல் கொண்ட கண்கள் இன்று அவனைப் பிரிந்ததால் துன்பம் அடைந்தது தன்னால்தான் என அறியாது தவிக்கிறதே! ஏன்?

Saturday, October 18, 2014

திருக்குறள்- காமத்துப்பால் -1167 முதல் 1170 வரை




குறள்-1167

கடல் போன்ற துன்பத்தைத் தரக்கூடியதாம் காதல்.அத் துன்பக்கடலை நீந்தினாலும்..கரை ஏதும் கண்களில் படவில்லை.ஆதாலால்...இரவு முழுவதும் காதலனை எண்ணியபடியே தூங்காமல் கடக்கிறாளாம் காதலி

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

காதல் எனப்படும் வெள்ளத்தை நீந்தியும், கரை ஏதும் நான் காணவில்லை.நள்ளிரவு நேரத்திலும் தனியாகவே இருக்கின்றேன்

குறள்-1168

காதலனும் அருகில் இல்லை.ஊரே உறங்கிக் கொண்டிருக்கிறது.அவள் தனியாகவே இருக்கிறாள்.அப்போதும்..தன்னைப்போல யார் தனிமையில் இருப்பர் என எண்ணுகையில்..இரவு தான் கண்களில் படுகிறது.அதனால் அந்த இரவைப் பார்த்து பாவம் எனப் பரிதாபப்படுகிறாள்

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

இந்த இரவு பாவம். எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

குறள்-1169

சாதாரணமாக நாம் ஒருவரை ஒரு குறிப்பிட்ட நேரம் வருவார் என எதிர்பார்க்கையில்..அந்த நேரம் வராமல் காலம் நீண்டுக் கொண்டே இருப்பது போலத் தோன்றும்.இங்கே காதலனை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் காதலியின் நிலையும் அதுதான்.

கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.

(காதலனைப் பிரிந்து துன்புறும்) இரவுகள் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்றன.பிரிந்தவரின் கொடுமையைவிட இக் கொடுமையே அதிகமாய்த் தெய்கின்றது.

குறள்-1170

கணவன் ஊருக்குச் செல்கிறான்.மனைவியின் மனமோ..அவர் இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பார்..என அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறது.அது போல கண்களும் அவர் ஊரில் என்ன செய்துகொண்டிருப்பார் என எண்ணினால் என்ன..? அப்போதே அவரையும் பார்க்க முடியுமே! என வருந்துகிறாளாம்.


உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

காதலன் உள்ள இடம் நோக்கி செல்லும் என் மனதைப்போல என் கண்களும் செல்லமுடியுமானால் அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டாம்

Friday, October 17, 2014

திருக்குறள்- காமத்துப்பால்- 1163 -1166

குறள்-1163

காதல் சில நேரங்களில் அவளுக்கு மன வருத்ததைத் தருகிறது.காமநோயால் வருந்துவதை அவரிடம் சொல்லவும் வெட்கம் தடுக்கிறது.ஒருபக்கம் துன்பம்..ஒரு பக்கம் நாணம்.அதை அவள் எப்படி தாங்குகிறாள்?

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. #1163

காதல் துன்பத்தையும் அவரிடம் சொல்ல முடியாமல், காதல் நோயால் ஏற்பட்ட வெட்கத்தையும் சொல்ல முடியாமல் உயிரே காவடித் தண்டாகவும்..அதன் ஒரு புறம் காமநோயும், மறு புறம் வெட்கமுமாய் இருப் பக்கங்களிலும் தொங்குகின்றன.

குறள்-1164

காதலினால் ஏற்பட்ட துன்பம்..வெட்கம் இரண்டிலும் அவளிடம் அதிகம் காணப்படுவது காதல் துன்பமே.அதைக் கடக்கும் வழிதான் தெரியவில்லையாம் அவளுக்கு

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்

காமமாகிய கடல் உள்ளது.ஆனால் அதை நீந்திக் கடந்து செல்ல காவலான தோணியோ இல்லை

குறள்-1165

அவன் இன்பத்தையும் அளிக்கிறான்..அதே நேரம் பிரிந்து விடும் துயரத்தையும் அளிக்கிறான்.அவரிடம் தேவையின்றி பகமை ஏர்படின் அவன் எப்படிப்பட்டவனாய் இருப்பான்.அந்த நினைப்பே அவளுக்கு பயமாய் உள்ளது.

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

இன்பம் தரும் நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். துன்பம் தரும் பகையை வெல்லும் வலிமை வேண்டும்போது என்ன செய்வாரோ

குறள்-1166

காதலிப்பது..காதல்..இதெல்லாம் கடல் அளவு பெரியது.அதிலும்..ஆனால் காதல் நோயால் வருந்துவது என்பது அந்தக் கடலைவிடப் பெரியதாம்

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.


காமம் மகிழ்விக்கையில் அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

Thursday, October 16, 2014

திருக்குறள்- காமத்துப்பால் -1161- 1162



குறள்-1161

காதலி, அவளது காதல் துன்பத்தை யாரும் அறியக்கூடாது என மறைக்கிறாள்.ஆனாலு, ஊற்ரு நீர் எப்படி இறைக்க இறைக்க பெருகுமோ அதுபோல அவள் மறைக்க மறைக்க அவளுக்குத் துன்பமே அதிகரிக்கிறதாம்.

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

இக் காமநோயைப் பிறர் அறியாமல் நான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் பெருகுவது போல பெருகுகின்ரது..

குறள்-1162

காமத்தால் ஏற்படுகின்ற துன்பத்தை காதலியால் மறைக்கமுடியவில்லையாம்.அதே நேரம் இந்நோய்க்குக் காரணமான காதலனிடம் இதைச் சொல்லவும் வெட்கமாய் இருக்கிறதாம்(பெண்கள் இவ்விஷயத்தைப் பற்றி பேச நாணுவர்)
 
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்

இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய்க்குக் காரணமான காதலர்க்குச் சொல்லவும் நாணமாய் உள்ளது.

Wednesday, October 15, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1156 முதல் 1160வரை



குறள்-1156

நான் வேலையின் காரணமாக உன்னைப் பிறிய நேரிடுகிறது என்கிறான் காதலன்.காதலிக்கோ. காதலன் தன்னைப் பிரிந்து செல்கிறானே எனக் கோபம்.ஆகவே..பிரிந்து செல்கிறேன் என்ற காதலன் தன்னிடம் அன்பில்லாதவன் என புலம்புகிறாள்.

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

நான் வேலைக்காக பிரியப் போகிறேன் எனத் தெரிவிக்கும் அளவு கல் நெஞ்சம் உடையவரானால், அப்படிப்பட்டவர் திரும்ப வந்து அன்பு செய்வார் என என் எதிர்பார்ப்பு பயன்தராது.

குறள்-1157

காதலன் தன்னை விய்யு பிரிவானானால்..இவள் மெலிந்து விடுவாளாம்.அதை இக்காதலி எப்படி உணர்த்துகிறாள் பாருங்கள்


துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.

தலைவன் என்னை விட்டுப் பிரிந்து சென்றுள்ளான் என்ற செய்தியை..நான் மெலிந்ததால் முன் கை மூட்டிலிருந்து கழன்றி விழும் வளையல்கள் ஊருக்குத் தெரிவித்துவிடும்.

குறள் 1158

தன்னைச் சுற்றி உறவு இல்லா ஊரில் வாழ்வது என்பது கொடுமையான ஒன்றாகும்.ஆனால் அதைவிடக் கொடுமையானது என்ன தெரியுமா? நம் மனதுக்கு இனியவரை பிரிந்து இருப்பதாகும்

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.



உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமையானது

குறள்-1159.
 காதலனை விட்டு அகன்றாலும் காமம் அவளை வாட்டி வதக்கும்.ஒருவிதத்தில் தீ இதைவிடப் பராயில்லை.அதைத் தொட்டால்தான் சுடும்.ஆனால்...காம நோய்..?

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

நெருப்பு, தன்னை தொட்டால்தான் சுடும்.ஆனால் காம நோயோ அதை விட்டு அகன்றாலும் சுடும்.


குறள் 1160

பொருளீட்ட இக்காலத்தில் பல குடும்பத் தலைவர்கள்..ஊர் விட்டு ஊர் செல்கின்றனர். கணவனையும், பிரிந்து..தனிமையில் குடும்பப் பொறுப்பையும் ஏற்று திறமையாக வாழ்வு நடத்தும் பெண்கள் நாட்டில் எவ்வளவு பேர் உள்ளனர்.இதைப் போல வள்ளுவன் காலத்திலும் இருந்தனர் போலும்!

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

பொருளீட்ட பிரிவிற்கு ஒப்புதல் அளித்து (அப்படிப் பிரிகையில்) துன்பத்தால் கலங்காமல் பொருத்திருந்து  உயிர் வாழும் பெண்களுலகில் பலர் உள்ளனர்

Tuesday, October 14, 2014

திருக்குறள் - காமத்துப்பால் -1151 முதல் 1155 வரை



குறள் 1151

உயிருக்கு உயிரான காதலர்கள்.ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தால் அவர்கள் உயிரே போய்விடும் நிலை. அப்படிப்பட்ட சமயத்தில் காதலன் வெளியூர் செல்ல வேண்டியுள்ளது.அவன் காதலியிடம் விடை கேட்கிறான்.அப்போது அவள் சொல்கிறாள்

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
நல்வரவு வாழ்வார்க் குரை. #1151

என்னைப் பிரியவில்லை என்றால் அதை என்னிடம் சொல்.அப்படி நீ என்னை பிரிந்து போய்தான் ஆக வேண்டுமாயின்..(உன்னைப் பிரிந்ததும் என் உயிர் போய் விடும்)நீ வரும் போது உயிருடன் இருப்பவர் எவரோ அவர்களிடம் சொல்லிச் செல்.

குறள்-1152

அவன் அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவள் மனம் மகிழ்கிறது.ஆனால் அவர் என்னைப் பிரிந்து வெளியே செல்லப்போகிறார் என்பதை எண்ணினாலே துன்பம் ஏற்படுகிறது.அவனைப் பிரியா வாழ்க்கை அவளுக்கு வேண்டுமாம்


இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.

உரை-
அவர் பார்வையே எனக்கு மகிழ்ச்சி தருகிறது.ஆனால்..அவர் செயலோ அவர் என்னைப் பிரியப் போகிறார் எனும் அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!

குறள்-1153
"உன்னைப் பிரியேன்' எனக் காதலன் சொன்னாலும்..ஏதேனும் ஒரு காலத்தில் பிரிந்துதானே செல்ல வேண்டும்.அதனால் அவன் சொன்னதை நம்பக்கூடாது..என காதலி தன் மனதை தேற்றிக் கொள்கிறாள்

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

அறிவுடைய காதலர்களும் ஒருகாலத்தில் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்..பிரிந்திடேன் என காதலன் சொல்லும் உறுதிமொழியை நம்புவது இயலாது.

குறள்-1154

உன்னைப் பிரியமாட்டேன் என அவளை மணந்ததும் கணவன் கூறுகிறான்.அது நடைமுறையில் சாத்தியமா என பேண் நினைக்காமல்..அவன் அவளைப் பிரியும் நேரம் வந்த போது..அவன் சொன்னதை நம்பியது தவறா? என நினைக்கிறாள்>(ஆனாலும் அவன் பிரிவு தவிர்க்கமுடியாது என அவளுக்குத் தெரியும்)

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டாம் என்று முன் சொன்னவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.(இல்லை)

குறள்-1155

தலைவன் தலைவியைப் பிரிய வேண்டிய வேளை.ஆனால் அவன் பிரிந்தால் திரும்ப அவருடன் நான் சேர்வது அரிதாகிவிடும் என பயப்படுகிறாள் தலைவி.தலைவன் தன் கட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அவள் விரும்புகிறாள்.


ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

காதலன் தன்னைப் பிரிந்து சென்றால், மீண்டும் கூடுவது அவ்வளவு எளிதல்ல..ஆகையால்..அவர் பிரிந்து செல்லாமல்முதலிலேயே காத்துக் கொள்ள வேண்டும்.

Monday, October 13, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1146 முதல் 1150 வரை



சந்திரகிரஹணம் என்ரால்..பாமரர்கள் முன்பெல்லாம்..சந்திரனை பாம்பு பிடித்தது.ஆகவேதான் சந்திரன் மறைந்து காணப்படுகிறான் என்பார்கள்.இது அவர்களிடையே பரவிவிட்ட ஒரு செய்தியாக இருந்து வந்தது.அதுபோல பரவக்கூடியது வேறொன்று உண்டாம்..அது என்ன..?

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.


காதலனைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய ஊர்ப்பேச்சோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

பாடல்-1147

காதல் நிறைவேற வேண்டுமானால்..அதில் ஒரு திரில் இருக்க வேண்டும்.தாய், தந்தை, ஊர் இதெல்லாம் காதலுக்குத் தடை போட்டால்தான்..காதலர்களிடையே நாம் இணயவேண்டும் என்ற எண்ணம் மிகவும் வலுக்கும்.அதைத்தான் இக்குறளில் சொல்கிறான் பொய்யாமொழியான்.

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

இந்தக் காம நோய் ஊராரின் தூற்றலே எருவாகவும் தாய் கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

பாடல்-1148

முன் சொன்னது போலவேதான் இது..ஊரார் இவர்கள் காதலைப் பழித்தால்..அக்காதல் அழியாது.மேன் மேலும் வளரும்.எப்படி வளருமாம்...

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

ஊரார் பழிப்பதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அணைப்போம் என்று எண்ணுவதைப் போன்றது

பாடல்-1149

காதலன் அவளை மணப்பேன் என்று கூறி சென்று விட்டான்.அச் சமயம் ஊரார் இவள் காதலை பழிக்கமுடியாது.அதனால் அவள் ஏன் நாண வேண்டும்

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.


அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அந்தப் பலருக்காக நாணியிருக்க முடியுமோ.

பாடல்-1150

ஊரார் இவர்கள் காதலை இவர்கள் விரும்புமாறு பேசுகின்றனர்.காதலன் இதை விரும்பினால்...அவர்களின் பேச்சை ஒப்புக் கொள்வார்.

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.

நாம் விரும்புகின்றவகையில் இவ்வூரார் பேசுகின்றனர்.அதனால் இனி காதலன் விரும்பினால், விரும்பியப்படி என்னை மணப்பார்

Saturday, October 11, 2014

திருக்குறள் -1141 -காமத்துப் பால் 1141,1142,1143,1144,1145




குறள்-1141

காதலிப்பது யாருக்கும் தெரியாது என்றால்....காதல் நிறைவேறாவிடின்..வருத்தமுறும் காதலன் நிலை ஏன் இப்படி ஆயிற்று என யாருக்கும் தெரியாது.ஆனால்..அதுவே ஊருக்கே தெரிந்துவிட்டால்..வேறு வழியின்றி காதல் நிறைவேறியே ஆகும்.இதைத்தான் வள்ளுவன் மறைமுகமாக இக் குறளில் உணர்த்துகிறானோ?

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்கியம்.

குறள்-1142

அவர்கள் காதலிக்கிறார்கள்.ஆனால் அடிக்கடி சந்தித்து பேச முடியவில்லை.இதை உணர்ந்து தானோ என்னவோ.ஊராய் இவன் காதலைப் பற்றி பேச ஆரம்பிக்கின்றனர்.அந்தப் பேச்சினால்...வேறு வழியில்லாமல் காதலியின் பெற்றோர் காதலனுக்கே மணமுடிக்கின்றன.இதி..ஊரார் பேச்சு நன்மையை பயக்கியது

 மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலை பழித்துரைத்தது எங்களுக்கு நன்மையகவே முடிந்துவிட்டது.

குறள் 1143

ஊரார் இவன் காதலிப்பதைப் பற்றி பேச ஆரம்பித்ததால்..அது இவன் காதலியை மணம் புரிவது இவனுக்கு எளிதாகிவிட்டதாம்.

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, மணம் செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.

குறள் 1144

ஊர்வம்பு பேசுவது கூடாது என்பர்.ஆனால் அப்படி வம்பு பேசுவது கூட இக் காதலர்களுக்கு நன்மையாய் முடிந்து விட்டதாம்.

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.


எம் காதல் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.


குறள்-1145

கள் உண்டால் மனம் மகிழ்வது போல..இவன்(ள்) காதலிக்கிறான்(ள்) என ஊர் பேசும்போது..மனம் மயங்குகிறது காதலர்களுக்கு

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.


கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது மகிழ்ச்சியாவது போல எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.

Friday, October 10, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1136 முதல் 1140 வரை



குறள்-1136

காதலில் தோல்வி.இரவு உறக்கமில்லை.அவளை அடைய அவனுக்கோ கடைசி துருப்பு மடல் ஏறுதல் மட்டும்தான்.பாவம்..இந்தக் காதலர்களால் வேறு என்ன செய்ய இயலும்?


மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

காதலின் பிரிவு காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.நள்ளிரவிலும் மடலூர்தலைப் பற்றி உறுதியாக நினைக்கின்றேன்

குறள்-1137

மடலூர்தல் ஆண்கள் மட்டுமே செய்கின்றனர்.ஆனால் பெண்கள் காதல் நோயை அனுபவித்தாலும் பொறுத்திருப்பர்.இதுதான் பெண்மைக்கே இருக்கும் சிறப்பு.அவர்கள் வேதனையை மனதிற்குள்ளே வைத்துத் துன்புறுவர்.
வள்ளுவன் என்ன சொல்கிறான்... பார்க்கலாமா?

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.

கடல் அளவிற்கான காமநோயால் வருந்தினாலும், மடலேறாமல், துன்பத்தை பொறுத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பைப் போன்ற பெருமையான பிறவி இல்லை


குறள்-1138

காதலி அடக்கமானவள்.அவள் மீது இரக்கம் ஏற்பட்டாலும்..அவளை அடைய முடியா காதலன் மடலேறுகிறான்.அவர்கள் காதல் விஷயம் ஊர் முழுதும் தெரியப் போகிறது.


நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

இவள் மன அடக்கம் மிக்கவள்.பெரிதும் இரக்கப்பட வேண்டியவள்.என்று கருதாமல் அவர்கள் காதல் காமம் மறைத்திருத்தலை ஊருக்குத் தெரியப்போகிறதே!


குறள்-1139

அவர்கள் காதலை யாரும் அறியார். அவர்களின் மன அடக்கத்தால்தான் இது சாத்தியமாகிறது.

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

 அமைதியாய் (எங்கள் காதல்) இருப்பதால் எல்லோரும் அறியவில்லை என எனது காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கிறது.

குறள்-1140

காதல் நோயின் துன்பத்தை காதலிக்காதவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.அதனால் காதலில் வாடுபவனைப் பார்த்து சிரிக்கின்றனர்.என்ன செய்வது..அது நம் வழக்கம் தானே...தனக்கு வந்தால் தானே தலைவலியும், திருகுவலியும் தெரியும்

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

நான் பட்ட துன்பங்களை இவர்கள் படாததால் நான் பார்க்கும் படி அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்து சிரிக்கின்றனர்.

Thursday, October 9, 2014

திருக்குறள்-காமத்துப்பால் 1131 முதல் 1135வரை



(மடல் ஊர்தல் (மடலூர்தல்) என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடலேறுதல் என்றும் கூறுவர். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்லுதல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை.ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.



அவனுக்கு காதலில் தோல்வி அதனால் மடல் ஏறுதலைத் தவிர அவனுக்கு வேறு துணை இல்லையாம்

குறள் 1131

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலணுக்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு வலிமையானத் துணை இல்லை

பாடல்-1132

அவனுக்குக் காதலில் தோல்வி.இனி காதல் நிறைவேற வேறு வழியும் இல்லை.இந்நிலையில் அவன் மடல் ஏற நினைக்கிறான்


நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

காதல் த்ள்வியால் என் உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கிறது.வெட்கத்தைவிட்டு நடள் ஏற துணிந்து விட்டேன்

குறள்- 1133

காதல் தோல்வி ஏற்பட்டால்..காதலன் அக்கதல் நிறைவேற தன் தன்மானத்தையும் விட்டு,நாணத்தையும் விட்டு காதலியை அடைய முடியுமானால் போதும் என முயற்சிப்பான். மடல் ஏறவும் தயாராம் இக்காதலன்

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

முன்பு நல்ல ஆண்மையும், நாண உணர்வும் பெற்றிருந்த நான் இன்று காதலுக்காக அவற்றை ,அறந்து மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்

குறள்- 1134

காதல் வந்து விட்டால் நாணம் மறைந்து விடும்.காதல் நிறைவேறவில்லை எனின் எப்பாடுபட்டாவது அது நிறைவேற வெட்கம் ,ஆண்மை ,வலிமை எல்லாம் மறந்து ஈடுபடுவான் காதலன்


காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

நாணம்,நல்ல ஆண்மை ஆகிய தோணிகளைக் காமம் எனும் கடும் நோய் அடித்துக் கொண்டு போய் விடுகிறது.

குறள்-1135

சிலர் காதல் தோல்வியடைந்தாலும், அது வெற்றி பெற காதலியே சில உபாயங்களைச் சொல்வதுண்டு,இக்குறள் கூட அப்படியோ எனத் தோன்றுகிறது.காதலன் மடல் ஏறுவேன் என மிரட்டுகிறானோ!

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

மேகலையையும்,மெல்லிய வளையலையும் அணிந்த இப்பெண் மாலை மரும் நோயான காதலையும், மடலூர்தலையும் எனக்கு தந்து விட்டாள்

திருக்குறள் - காமத்துப்பால்- 1126,1127,1128,1129,1130



காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தால் இமைக்கவும் மறந்து பரவசத்தில் ஈடுபடுவார்கள்.இதை இலக்கியங்களிலும் நாம் படித்ததுண்டு...நடைமுறையிலும் நடப்பது உண்டு..ஆனால்..ஒருவேளை கண் இமைத்துவிட்டால்... என்னவாகும்..ஒரு காதலி சொல்வதைக் கேட்போம்

குறள்-1126

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.

என் காதலர் என் கண்களிலிருந்து போகமாட்டேன் என்கிறார்.கண்களை மூடி நான் இமைத்தாலும் வருந்த மாட்டார்/அவ்வளவு நுட்பமானவர்.

கண்ணுக்கு மை அழகு என்பர்.அதுவும் பெண்களை கயல்விழி என அழைக்க..கண்களின் இட்ட மையே பெரும் காரணமாய் அமைவதுண்டு.ஆனால் பெண் மை தீட்டும் நேரத்தில் காதலன் மறைந்துவிட்டால்...அதனால் வள்ளுவன் சொல்லும் காதலி எப்படிப்பட்டவள் பாருங்கள்.

குறள்- 1127

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

என் காதலன் என் கண்ணினுள் உள்ளார்.ஆகவே நான் மை தீட்டினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் தீட்டுவதில்லை.



காதலி மனதில் காதலன் உள்ளான்.ஆதலால் சூடான உணவினை அவள் சாப்பிட்டால்..ஒருவேளை அது அவனை சுட்டுவிட்டால்...ஆகவே அவள் சூடான உணவுகளை சாப்பிட அஞ்சுகிறாளாம்.,

குறள்-1128


நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.

என் காதலன் என் நெஞ்சத்தில் இருக்கிறார்,ஆகவே சூடான பொருளை நான் உண்டாள்..அது அவரைச் சுடுமோ என எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகிறேன்

கண்ணுக்குள் இருக்கும் காதலன், காதலி கண் இமைப்பதால் மறையக் கூடும் என்பதால்...இவள் கண்களை இமைப்பதில்லை.ஆனால்..இதை உறவு தவறாக எண்ணி காதலனை அன்பில்லதவன் என்கின்றனராம்

குறள்-1129

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.

என் கண்கள் இமைத்தால் காதலர் மறைவார் என்பதால் கண் இமைப்பதில்லை அவ்வளவுதான்.ஆனால் இதை அறியா ஊரார் அவரை அன்பில்லாதவர் என்கின்றனர்.

குறள்-1130


என் காதலன் என் நெஞ்சத்திலேயே  உள்ளான்.ஆனால்..இதை அறியா உறவு..அவர் என்னைப் பிரிந்து வாழ்கிறார்..அவர் அதனால் அன்பற்றவர் என்றெல்லாம் சொல்கின்றனரே என காதலி வருத்தப்படுகிறாள்

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.


என் காதலர் எப்போதும் என் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கையில், அதை அறியாத உறவினர் நாங்கள் பிரிந்திருப்பதாகப் பழித்துரைப்பது தவறு

Wednesday, October 8, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1121,1122,1123,1124,1125



குறள்=1121

சர்க்கரைப் பந்தலில் தேன் மாரிப் பொழிந்தாற் போல, அவரது பேச்சு இருந்த்து..என ஒருவர் இனிமையுடன் பேசுவதைக் குறிக்கச் சொல்வார்கள்.ஆனால்..அதே தேனில்..பாலையும் சேர்த்தால் அது எப்படியிருக்கும்..பார்ப்போமா...

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

மென்மையான மொழிகளைப் பேசும் இவளது  தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

குறள்-1122
உயிருடன் ஒரு உறவு கலந்தது என்பார்கள்.அதாவது..இவரின் உயிர் போனால் வேறு ஒருவருடன் அவருக்கான ஆன உறவும் போய் விடுமாம்.அப்படிப்பட்ட உறவு என்னாவாயிருக்கும்...


உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. #1122

இப்பெண்ணோடு எனது உறவு உடம்புக்கும்.உயிருக்கும் உள்ள தொடர்பு எத்தன்மையானதோ..அத்தன்மையானது.

குறள்-1123

கண்ணில் பாவை உள்ளது.அப்பாவையில் தெரிகிறது ஒருவன் காதலிக்கும் பாவையின் உருவம்.ஆனாலும்..அவனால் அப்பாவையை முழுதும் ரசிக்க முடியவில்லையாம்.காரணம் கண்ணிலுள்ள பாவையாம்.வள்ளுவனே..என்னே உன் ஒப்பீடு..


கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய் விடு.நான் விரும்பும் பாவைக்கு உன்னால் என் கண்ணில் இருக்கும் இடம் போதவில்லை.

குறள்-1124
ஓருயிர் ஈருடல் என்பார்கள்.சாதாரணமாக கணவன், மனைவிக்குள் அப்படியிருந்தால்..அந்த வாழ்க்கை, வாழ்வின் ருசி இவை அலாதி.

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

ஆய்ந்து தேர்ந்த அணிகலன்களை அணிந்த இவளைக் கூடும் போது உயிர்க்கு வாழ்வாகிறாள்.பிரிகையில் என் உயிர் நீங்குவது போலவும் உள்ளது.

குறள்-1125.

காதலி தன் காதலனைப் பிரிந்து சில காலம் இருந்தாள்.பின்னர் ஒருநாள் அவனைப் பார்த்த போது,"இவ்வளவு நாள் என்னைப் பிருந்திருந்தாயே..எப்போதேனும் எனை நினைத்தாயா? என அவனுடன் ஊடல் கொண்டாள்.பார்த்தான் காதலன் ,இவளை மகிழ்விக்க ஒரே வழி..."நான் உன்னை மறந்தாள் அல்லவா? நினைப்பதற்கு' என்றாம்.ஊடல் போய் கூடல் ஆயிற்று.

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

ஒளியுடனான கண்களைக் கொண்ட காதலியின் பண்புகளை நான் மறந்தால்தானே பின்னர் நினைக்க முடியும்.ஆனால் ஒரு போதும் நான் மறந்ததில்லையே!

திருக்குறள்-காமத்துப்பால் 1118,1119,1120



குறள்-1118

அவன் நிலவைக் காதலிக்கிறானாம்.ஆனால்..அது அவன் காதலிக்கு நிகராக ஒளி வீச வேண்டுமாம்.அதாவது அவனைப் பொறுத்த வரை நிலவை விட காதலியின் முகம் ஒளி வீசுகிறதாம்.

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி

நிலவே! இப் பெண்ணின் முகத்தைப் போல உன்னால் ஒளி வீச முடியுமேயாயின், நீயும் என் காதலைப் பெறுவாய்.

குறள்- 1119

தன் காதலி மலர் போன்ற கண்களை உடையவளாம்.நிலவிற்கு அவளது முகம் போல அழகுடன் ஆக வேண்டுமானால், நிலவு என்ன செய்ய வேண்டுமாம்..அவனுக்கு மட்டுமே தெரிய வேண்டுமாம்.பிறர் கண்கள் அதைப் பார்க்கக்கூடாதாம்

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

நிலவே! மலர் போன்ற கண்களை உடைய இவள் முகம் போல நீயும் இருக்க விரும்பினால்,பலரும் காணுமாறு நீ தோன்றாதே!

குறள்-1120

அவள் காதலியின் பாதங்கள் பஞ்சினைப் போல மென்மையானவையாம்.மலர் மீது அவள் கால் வைத்தாலும் அது முள்ளாய் குத்துமாம் அவளுக்கு..


அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

(மென்மையான) அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் காதலியின் மெல்லிய பாதங்களுக்கு நெருஞ்சி முள் போல் தைக்குமாம்.


Tuesday, October 7, 2014

திருக்குறள் - காமத்துப்பால்-1115,1116,1117



பெண்களின் இடையை கொடி இடை என கவிஞர்கள் வர்ணிப்பது உண்டு.மெல்லிய இடைதான் பெண்டிக்கு அழகு.ஒரு கவிஞர் தனது ஒரு பாடலில் கதாநாயகியிடம் கதாநாயகன் பாடும்போது, "இடையா..இது இடையா..அது இல்லாதது போல இருக்கிறது" என பாடுவது போல எழுதியிருப்பார்.கவிஞர்கள் பலருக்கு முன்னோடியான வள்லுவன் என்ன சொல்கிறான்..

குறள்-1115

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

அவள் தனது மென்மை தெரியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் சூடினால்..அவளது இடை ஒடிந்து வீழ்ந்தாள்.இனி நல்ல பறைகள் அவளுக்கு ஒலியாது

குறள்-1116

சாதாரணமாக மங்கையரின் முகத்தை நிலவுக்கு ஒப்பிடுவது உண்டு."அவளைப் பார்த்து பின் நிலவைப் பார்த்தால் நிலவில் ஒளி மங்கியது போல இருக்கிறதாம் காதலர்க்கு.காதலியின் முகம் அவ்வளவு ஒளி பொருந்தியதாம்.ஆனால் இங்கு என்ன நடக்கிறது பாருங்கள்...

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

வானில் நட்சத்திரங்கள் மங்கையின் முகத்திற்கும் நிலவிற்கும் வேறுபாடு தெரியாமல் மயங்கித் தவிக்கின்றன.

குறள்-1117

நட்சத்திரங்கள் இவள் முகத்தைப் பார்த்து ஏன் கலங்க வேண்டும்.நிலவின் களங்கம் போல இவள் முகத்தில் களங்கம் உள்ளதா..இல்லையே

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

படிப்படியாய் குறைந்து படிப்படியாய் நிறைந்து காணும் நிலவில் உள்ளது போல இந்தப் பெண்ணின் முகத்தில் களங்கம் இல்லையே

Monday, October 6, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1113.1114




குறள்-1113
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டா..அல்லது செயற்கை மணமா என்ற சந்தேகமும், அதனால் சிவனே வந்து தருமிக்குப் பாட்டெழுதிக் கொடுத்ததும்..நக்கீரன்..அப்பாடலில் பொருட்குற்றம் இருக்கிறது என்றதும்...நான் எழுதிய பாட்டில் குற்றமா? என சிவன் நேரில் வந்து கேட்டதும்.."முக்கண்ணைக் காட்டினும்...குற்றம் குற்றமே" என்று உரைத்ததும் எல்லாம் நாம் அறிவோம்.ஆனால், உண்மையிலே..பெண்களுக்கு கூந்தல் அல்ல..உடலே நறுமணமாம்..வள்ளுவன் உரைக்கின்றான்.

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

மூங்கில் போன்ற தோளை உடைய அவளின்  மேனி மாந்தளிர், பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!.

குறள்-1114

பெண்ணின் முகத்தைத் தாமரை மலருக்கும், கண்களை கயலுக்கும் சாதாரணமாக அனைத்து காதலர்களும் வர்ணிப்பது உண்டு.ஆனால்..வள்ளுவன் ஒரு படி மேலே போய்..பெண்ணின் கண்களிப்போல தான் இல்லையே என மலர் வெட்கப்படுமாம்.

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

குவளைப் பூக்களுக்கு பார்க்கும் திறனிருந்தால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்குமாம்.