அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
நம் மனம் நினைப்பதை முகம் சொல்லிவிடும்..
அடுத்தது காட்டும் பளிங்கு போல..நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்று கண்ணாடியையும், மனதையும் ஒப்பிட்டு சொன்ன வள்ளுவன் மற்றொன்றையும் சொல்கிறார்
அனிச்ச மலர் என்னும் மலர்..முகர்ந்து பார்த்தாலே வாடிவிடுமாம்.அந்த அளவிற்கு மெல்லியதாம்.அதுபோல நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை..."இவன் ஏன் இப்போது வந்தான்" என்ற எண்ணத்துடன்..நாம் வரவேற்றால்....நம் முகத்தைப் பார்த்ததுமே..விருந்தினர் அதை புரிந்து கொண்டுவிடுவார்களாம்
இதைத்தான் வள்ளுவன்
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து (90)
என்கிறார்..
அனிச்சம் எனப்படும் பூ, முகந்தவுடன் வாடிவிடக் கூடியது.அதுபோல சற்று முகங்கோணி விருந்தினரை வரவேற்றாலே அவர்கள் வாடிவிடுவர்
(இப்போதைய கதை வேற...'மெகா சீரியல் பார்க்கும் நேரத்தில்..இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்?" என முகமாற்றம் பல வீடுகளில் தோன்றுகிறது விருந்தினரைப் பார்த்தால்)