tag:blogger.com,1999:blog-6561225950477795372024-02-08T08:59:01.626-08:00வள்ளுவன்ஒவ்வொரு குறளும் சொல்வதென்னT.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger560125tag:blogger.com,1999:blog-656122595047779537.post-72449193088159279822019-10-21T07:40:00.001-07:002019-10-22T03:22:45.938-07:00வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 88<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தனிப்படர் மிகுதி இது அதிகாரம்.<br />
<br />
தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாடஹ் பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.<br />
<br />
காதலர்கள் ஒருவரை ஒருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.....என்கிறது இக்குறள்..<br />
<br />
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு<br />
வீழ்வார் அளிக்கும் அளி (1192)<br />
<br />
வாழ்வார்,வீழ்வார்,வீழ்வார், அளிக்கும் அளி.<br />
<br />
அடுத்து ஒரு குறளையும் பார்ப்போம்..<br />
<br />
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்<br />
வீழப் படாஅர் எனின் (1194)<br />
<br />
விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்.<br />
<br />
விழப்படுவார், வீழ்வார்,வீழப்படாஅர்.... </div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-50826293285957163272019-10-21T07:32:00.001-07:002019-10-22T03:21:39.617-07:00வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 87<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்க காதல் நோயும் பெருகுமாம்.<br />
<br />
காதல் நோயை மறைக்கவும் முடியாதாம்..அதற்குக் காரணமான காதலரிடமும் நாண்த்தால் உரைக்கவும் முடியாதாம்.<br />
<br />
படர்மெலிந் திரங்கல் அதிகாரத்தில் இப்படிக் கூறுபவர் மேலும் சொல்கிறார்...<br />
<br />
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்<br />
நெடிய கழியும் இரா (1169)<br />
<br />
இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவது போல தோன்றும் கொடுமை இருக்கின்றதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.<br />
<br />
கொடியார்,கொடுமை,கொடிய,நெடிய...</div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-25677133251436524712019-10-21T03:59:00.003-07:002019-10-22T03:22:29.115-07:00வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 86<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒருவர் தகாத நடத்தையின் காரணமாக நாணுவத்ற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேற்பாடு உண்டு...<br />
<br />
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்<br />
நல்லவர் நாணுப் பிற (1011)<br />
<br />
நாணுதல்,நாணுத்திருநுதல்,நாணுப்பிற ....<br />
<br />
அடுத்து<br />
<br />
வெட்கப்படவேண்டிய அளவிற்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்<br />
<br />
பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்<br />
அறநாணத் தக்க துடைத்து (1018)<br />
<br />
பிறர் நாணத் தக்கது, அறநாணத்தக்கது, தானாணானாயின்..</div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-51864288838621590022019-10-21T00:51:00.001-07:002019-10-22T03:18:21.616-07:00வள்லவரும் சொல் விளையாட்டும் - 85<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய<br />
சுருக்கத்து வேண்டும் உயர்வு (963)<br />
<br />
உயர்ந்தநிலை வரும்போது அடக்க உணர்வும்,அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்<br />
<br />
பெருக்கத்து, சுருக்கத்து, வேண்டும், வேண்டும்.... அடடா....<br />
<br />
அடுத்து...<br />
<br />
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்<br />
நிலையின் இழிந்த கடை (964)<br />
<br />
மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவர்,<br />
<br />
தலையின், நிலையின் ,இழிந்த,இழிந்த..<br />
<br />
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு<br />
பேராண்மை வேண்டு பவர் (962)<br />
<br />
புகழ்மிகக் வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டு மென்பத்ற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்கள்<br />
<br />
சீரினும்,சீரல்ல, சீரொடு....</div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-30839163217443857122019-10-21T00:39:00.001-07:002019-10-22T03:10:40.609-07:00வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 84<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ர அடக்க உணர்வும் கால்கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.<br />
<br />
பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்..<br />
<br />
என்றெல்லாம் குடிமை எம்னும் அதிகாரத்தில் சொல்கிறார்.<br />
தவிர்த்து ஒரு குறளில்...<br />
<br />
நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்<br />
குலத்திற் பிறந்தவாய்ச் சொல் (959)<br />
<br />
விளைந்த பயிரைப் பார்த்தாலே அது எந்த நிலத்தில் விளைந்தது என அறிந்து கொள்ளலாம்.அதுபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.<br />
<br />
நிலத்திற், குலத்திற், காட்டும், காட்டும்!!!!!<br />
<br />
அடுத்து ஒரு குறள்...<br />
<br />
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்<br />
வேண்டுக யார்க்கும் பணிவு (960)<br />
<br />
தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவையாகும்.<br />
<br />
நலம் வேண்டின்,குலம் வேண்டின், வேண்டுக.... </div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-28976001519452245022019-10-20T23:40:00.000-07:002019-10-22T03:05:29.302-07:00வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 83<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மருந்து ,இது அதிகாரம்..<br />
<br />
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லையாம்..<br />
<br />
தவிர்த்து உடலுக்கு ஒத்துவரும் உணவுக் கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை என்கிறார்.<br />
<br />
மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்<br />
ஊறுபா டில்லை உயிர்க்கு (945)<br />
<br />
மாறுபாடில்லாத,ஊறுபாடில்லாத..<br />
<br />
நோய் என்ன? அதற்கான காரணம் என்ன?நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்.<br />
<br />
இதையே...<br />
<br />
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்<br />
வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)<br />
<br />
நோய்நாடி, நோய் முதல் நாடி, வாய்நாடி...!!!!!<br />
<br />
<br /></div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-50406833460981399432019-10-20T23:21:00.002-07:002019-10-22T03:03:58.450-07:00வள்ளுவரின் சொல் இளையாட்டு - 82<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொது மகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.<br />
<br />
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்<br />
நயன்தூக்கி நள்ளா விடல் (912)<br />
<br />
ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு போகமொழி பேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது<br />
<br />
பயன் தூக்கி,நயன் தூக்கி, பண்பு,பண்பின்<br />
<br />
அடுத்து....<br />
<br />
புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்கள்<br />
<br />
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்<br />
புன்னலம் பாரிப்பார் தோள் (916)<br />
<br />
தந்நலம்,புன்னலம்,பாரிப்பார்,பாரிப்பார்<br />
<br />
மேற்கண்ட குறள்கள் வரும் அதிகாரம் வரைவின் மகளிர்.<br />
<br /></div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-54589298568129206802019-10-20T23:12:00.001-07:002019-10-22T03:00:17.904-07:00வள்ளுவரின் சொல் விளையாட்டு - 81<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பெரியாரைப் பிழியாமை...<br />
<br />
ஒரு செயலை செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காதலாம அமையும்..<br />
<br />
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்<br />
போற்றலுள் எல்லாம் தலை (891)<br />
<br />
ஆற்றுவார், ஆற்றல், போற்றுவார்,போற்றல்<br />
<br />
அடுத்து<br />
<br />
பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்<br />
பேரா இடும்பை தரும் (892)<br />
<br />
பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.<br />
<br />
பெரியாரை, பெரியாராற், பேரா..</div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-89880429368588268002019-10-20T21:39:00.000-07:002019-10-22T02:59:13.676-07:00வள்ளுவரின் சொல் விளையாட்டு - 80<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உட்பகை அதிகாரத்தில் மேலும் இரு குறள்கள்..<br />
<br />
உட்பகை அஞ்சித்தற் காக்க உறைவிடத்து<br />
மட்பகையின் மானத் தெறும் (883)<br />
<br />
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை மண்பாண்டத்தை அறுக்கும் கருவி போல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்.<br />
<br />
உட்பகை, மட்பகை..<br />
<br />
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்<br />
பொன்றாமை ஒன்றல் அரிது (886)<br />
<br />
ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால்,அத்னால் ஏற்படும் அழிவினைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.<br />
<br />
ஒன்றாமை,ஒன்றி,ஒன்றல்</div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-74223265609403443042019-10-20T21:34:00.001-07:002019-10-22T02:58:18.321-07:00வள்ளுவரின் சொல் விளையாட்டு -79<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நெருங்கிய உறவினரிடம் தோன்றும் உட்பகையானது அவர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பல துபங்களை உண்டாக்கும் என்கிறார் உட்பகை அதிகாரத்தில்.<br />
<br />
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்<br />
இன்னாவாம் இன்னா செயின் (881)<br />
<br />
இனிமையாய்த் தெரியும் நிழலும்..நீரும் கூடக்கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும்.அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையுமாகும்.<br />
<br />
இன்னாத,இன்னா,இன்னாவாம், இன்னா...<br />
<br />
அடுத்து<br />
<br />
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக<br />
கேள்போல் பகைவர் தொடர்பு (882)<br />
<br />
என்கிறார்.<br />
<br />
வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடி கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.<br />
<br />
வாள்போல்,கேள்போல்,அஞ்சற்க, அஞ்சுக, பகவரை, பகைவர்<br />
<br />
</div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-26742189398740568652019-10-20T21:27:00.000-07:002019-10-22T02:56:44.437-07:00வள்ளுவரின் சொல் விளையாட்டு - 78<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பகைத்திறம் தெரிதல்..<br />
<br />
பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக் கூடாது.<br />
<br />
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க<br />
சொல்லேர் உழவர் பகை (872)<br />
<br />
சொல்லாற்றல் மிக்கவர்களை சொல்லேர் உழவ்ர் என்கிறார்.<br />
வில்லேர் உழவர், படைக்கலன்களைக் கொண்ட வீரர்கள்..<br />
<br />
படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம்.ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெரு மக்களுடன் பகை கொள்ளக் கூடாது </div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-56636013783698142592019-10-20T20:43:00.002-07:002019-10-22T02:55:27.940-07:00வள்ளுவரின் சொல் விளையாட்டு - 77<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மனமாறுபாடு காரணமாக ஏற்படும் பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.<br />
<br />
மனமாறுபாடு எனும் நோயை யார் தனக்ள் மனத்தைவிட்டு அகற்றிவிடுகிறார்களோ, அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.<br />
<br />
இகல் எனும் அதிகாரத்தில் வரும் இரு குறட்பாக்களில் இப்படிச் சொல்லுபவர் சொல்கிறார்..<br />
<br />
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்<br />
துன்பத்துள் துன்பங் கெடின் (854)<br />
<br />
துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான்.அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால் அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.<br />
<br />
<br />
இன்பத்துள் இன்பம், துன்பத்துள் துன்பம்..இது வள்ளுவனின் விளையாட்டு.<br />
<br />
<br />
<br /></div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-16594269910077202922019-10-20T06:29:00.000-07:002019-10-22T02:56:25.397-07:00வள்ளுவரின் சொல் விளையாட்டு - 76<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும் என்கிறார் புல்லறிவாண்மையில்.<br />
<br />
எதிரிகளால் கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.<br />
<br />
அறிவின்மை,இன்மையுள்,இன்மை,பிறிதின்மை,இன்மை என கீழே சொல்லியுள்ளக் குறளில் சொய்ல் விளையாட்டினைப் பாருங்கள்.<br />
<br />
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை<br />
இன்மையா வையா துலகு (836)<br />
<br />
அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும்.மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது. </div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-50169124116483090412019-10-20T05:36:00.002-07:002019-10-22T02:54:12.144-07:00வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 75<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பழைமை இது அதிகாரம்.<br />
<br />
பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.<br />
<br />
வருந்தக் குடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்..<br />
<br />
எல்லைக்கண், தொல்லைக்கண் என் அஒரு குறளில் விளையாடுகிறார்.<br />
<br />
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்<br />
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு (806)<br />
<br />
நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால் கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள். </div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-656122595047779537.post-77949296034990131632019-10-20T05:29:00.002-07:002019-10-21T23:13:11.790-07:00வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 74<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பெரும் செல்வமாகஇருப்பினும் அது அருள் நெறியிலோ, அன்பு வழியிலோ வராத போது அதனை புறக்கணித்துவிடவேண்டும்,<br />
<br />
என பொருள் செயல்வகை அதிகாரத்தில் கூறுபவர் மேலும் சொல்கிறார்..<br />
<br />
அறம், பொருள்,இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்.<br />
<br />
உறுபொருள்,உல்குபொருள்,தெறுபொருள் என ஒரு குறளில் விளையாடுகிறார்.அந்த குறள்..<br />
<br />
உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்<br />
தெறுபொருளும் வேந்தன் பொருள் (756)<br />
<br />
வரியும், சுங்கமும்,வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்</div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-74101761724926174792019-10-20T00:40:00.002-07:002019-10-21T23:04:39.119-07:00வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 73<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும்.அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.<br />
<br />
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்...<br />
<br />
என்றெல்லாம் சிற்றினம் சேராமையில் சொன்னவர் சொல்கிறார்.<br />
<br />
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்<br />
இனந்தூய்மை தூவா வரும் (455)<br />
<br />
ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் ,செயலும் தூய்மையானவையாக இருக்கும்<br />
<br />
மனந்தூய்மை,செய்வினைதூய்மை,இனந்தூய்மை..வள்ளுவரின் சொல் விளையாட்டு. </div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-85998266986828933912019-10-20T00:33:00.003-07:002019-10-21T23:03:21.792-07:00வள்ளுவரும் சொல் விளையாட்டு - 72<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
முன் கூட்டியே எச்சரிக்கையாய் இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போலக் கருகிவிடும்....என குற்றங்கடிதல் அதிகாரத்தில் ஒரு குறளில் சொன்னவர் அடுத்து சொல்கிறார்...<br />
<br />
முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்? என்கிறார் இக்குறளில்..<br />
<br />
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்<br />
என்குற்ற மாகும் இறைக்கு (436)<br />
<br />
தன் குற்றம்,பிறர் குற்றம், என் குற்றம்<br />
<br />
<br /></div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-54127088793459472962019-10-19T22:31:00.001-07:002019-10-21T23:03:05.961-07:00வள்ளுவரும் சொல்வெளையாட்டும் - 71<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எண்ணும், எழுத்துமாகிய அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்..என கல்வி அதிகாரத்தில் சொல்லுபவர் மேலும் சொல்கிறார்..<br />
<br />
கற்க கசடறக் கற்பவை கற்றபின்<br />
நிற்க அதற்குத் தக (391)<br />
<br />
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவிற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.கற்றபிறகு அதன்படி நடக்க வேண்டும்<br />
<br />
கற்க,நிற்க, கற்பவை, கற்றபின்<br />
<br />
அடுத்த குறள்...<br />
<br />
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங்<br />
கண்ணென்ப வாழும் உயிக்கு (392)<br />
<br />
எண்ணென்ப,எழுத்தென்ப, கண்ணெண்ப<br />
<br />
எண்ணும், எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.</div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-22007226199835174502019-10-19T21:39:00.002-07:002019-10-21T22:59:42.763-07:00வள்ளுவரும் சொல் விளையாட்டும் -70<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நன்மையும் ,தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும்.நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும் போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?<br />
<br />
எனக் கேட்கும் வள்ளுவர்...<br />
<br />
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியினை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது அரிதேயாகும் என்கிறார் இக்குறளில்..<br />
<br />
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி<br />
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது (377)<br />
<br />
வகுத்தான்,தொகுத்தார், வகுத்த, வகை</div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-65166005285752984512019-10-19T21:33:00.002-07:002019-10-21T22:51:53.146-07:00வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 69<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
களவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்..<br />
<br />
களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதே கூடத் தவறிப் போகும்.களவினை , பார்க்காதவர்க்கோ புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.<br />
<br />
கள்வார்க்குத் தள்ளும் உயர்நிலை கள்ளார்க்குத்<br />
தள்ளாது புத்தே ளுலகு (290)<br />
<br />
கள்வார்,கள்ளார்,தள்ளும்,தள்ளாது<br />
<br />
கள்ளாமை அதிகாரத்தில் வருகின்றன இக்குறள்கள்.<br />
<br />
மற்றொரு குறள்...<br />
<br />
நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்.கொள்ளையடிப்போர் நெஞசமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.<br />
<br />
அளவறிந்தார் நெஞ்சத் தரம்போல நிற்குங்<br />
களவறிந்தார் நெஞ்சில் கரவு (288)<br />
<br />
அளவறிந்தார்,களவறிந்தார்,நெஞ்சம்,நெஞ்சம்</div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-50356119423608350652019-10-19T21:23:00.003-07:002019-10-21T22:49:15.083-07:00வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 68<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கண்ட இடத்தில் ஒன்றும் காணாத இடத்தில் ஒன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்றாம்..<br />
<br />
மேலும்....<br />
<br />
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்.ஆனால், பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்ரிக் குறை கூறுவது தவறாகும்.<br />
<br />
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க<br />
முன்னின்று பின்னோக்காச் சொல்(184)<br />
<br />
கண்ணிண்று, கண்ணற, சொல்லினும்,சொல்லற்க,சொல்,முன், பின்.. </div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-34546140751752930142019-10-19T21:18:00.001-07:002019-10-21T22:48:10.469-07:00வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 67<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கினைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கினை அறவே மறந்துவிடுவது சிறந்த பண்பாகும்.<br />
<br />
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்<br />
வன்மை மடவார்ப் பொறை (153)<br />
<br />
இன்மை,இன்மை, வன்மை,வன்மை<br />
<br />
வறுமையிலும் கொடிய வறுமை ,வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது.அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.<br />
<br />
<br /></div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-78265865261657016642019-10-19T20:14:00.001-07:002019-10-21T22:46:57.686-07:00வள்ளுவரின் சொல் விளையாட்டு - 66<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
விருந்தோம்பல் அதிகாரத்தில்.. விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவேக் கருதலாம் என்கிறார் பொய்யாமொழியார்.<br />
<br />
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து<br />
நோக்கக் குழையும் விருந்து (90)<br />
<br />
அனிச்சம் எனப்படும் பூ முகர்ந்த உடன் வாடிவிடக் கூடியது.அதுபோல சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்....என்றவர்...மேலும் சொல்கிறார்...<br />
<br />
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்<br />
நல்விருந்து வானத் தவர்க்கு (86)<br />
<br />
வந்த விருந்தினரை உபசரித்து அவர்கள் வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.<br />
<br />
செல்விருந்து, வருவிருந்து,நல்விருந்து....ஆஹா...<br />
<br />
<br /></div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-62163561291197827512019-10-19T20:05:00.002-07:002019-10-21T22:45:44.805-07:00வள்ளுவரின் சொல் விளையாட்டு - 65<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் சொல்கிறார்..<br />
<br />
நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது .<br />
<br />
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் (52)<br />
<br />
அடுத்து ...<br />
<br />
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்<br />
இல்லவள் மாணாக் கடை (53)<br />
<br />
இல்லது,இல்லவள், இல்லவள்....<br />
<br />
இதன் பொருள்...<br />
<br />
நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில்<br />
எதுவுமே இருக்காது. </div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-20642583764654546512019-10-19T19:58:00.001-07:002019-10-21T21:57:30.833-07:00வள்ளுவரின் சொல் விளையாட்டு - 64<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும்,அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது.இன்பமும் ஆகாது.<br />
<br />
என்றவர் சொல்கிறார்...<br />
<br />
வீழ்நாள் படாஅமை நன்றாற்ரின் அஃதொருவன்<br />
வாழ்நாள் வழியடைக்கும் கல் (38)<br />
<br />
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுவோர்க்கு வாழ்க்கைப் பாதையை சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்..<br />
<br />
வீழ் நாள்....வாழ்நாள்...<br />
<br />
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு<br />
உயர்பால தோரும் பழி (40)<br />
<br />
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தகக் அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவருக்குப் புகழ் சேர்க்கும்.<br />
<br />
செயற்பால, உயர்பால...<br />
<br /></div>
T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com0