Saturday, May 31, 2008

105.நல்குரவு

1.வறுமையைப்போல வேறு துன்பம் எது என்று கேட்டால்,வறுமையைப் போல துன்பம் வறுமை ஒன்றே ஆகும்.

2.வறுமை என்னும் பாவி ஒருவனை நெருங்கினால்..அவருக்கு எக்காலத்திலும் நிம்மதி என்பதே கிடையாது.

3.வறுமை காரணமாக பேராசை ஏற்பட்டால்..அது அவன் பரம்பரை பெருமையையும் ,புகழையும் சேர்த்து
கெடுத்துவிடும்.

4.வறுமை என்பது..நற்குடியிற் பிறந்தவரிடம் இழிவு தரும் சொல் பிறக்க காரணமான சோர்வை உண்டாக்கும்.

5.வறுமை என்னும் துன்பத்திலிருந்து பலவகை துன்பங்கள் உருவாகும்.

6.அரிய நூல் கருத்துக்களை, ஒரு வறியவன் சொன்னால்..அவை எடுபடாமற் போகும்.

7.வறுமை ..வந்துவிட்டது என்று..அறநெறி விலகி நடப்பவனை தாய் கூட புறக்கணிப்பாள்.

8.வறியவன்..நேற்று கொலை செய்தது போல துன்புறுத்திய..வறுமை இன்று வராமல் இருக்க வேண்டுமே என
நாளும் வருந்துவான்.

9.நெருப்பில் படுத்து தூங்கினாலும் துங்க முடியும்.ஆனால் வறுமைப் படுத்தும் பாட்டில் தூங்குவது இயலாது.

10.ஒழுக்கமில்லா வறியவர் முற்றுந் துறக்காமல் உயிர் வாழ்வது உப்புக்கும்..கஞ்சிக்கும் கேடாகும்.

No comments: