Thursday, September 5, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 35

ஆழமும், அகலமும் கொண்ட அகழ்.பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத் தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்ரை உடையதே அரணாகும்.

தவிர்த்து, உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை  அழிக்கக் கூடியதே அரண் ஆகும்.

அரண் பற்றிய அதிகாரத்தில் இவையெல்லாம் கூறுபவரிடமிருந்து, இவ்வதிகாரத்தில் சொல்விளையாட்டு இல்லாமலா? அதையும் பார்ப்போம்.

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண் (748)

முற்றாற்றி,முற்றிய, பற்றாற்றி, பற்றியார்

சரி இதற்கான பொருள்...

முற்றுகையிடும் வலைமைமிக்க படையை எதிர்த்து,உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கேற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்

No comments: