Sunday, May 26, 2019

வள்ளுவனும்......ஒப்பீடுகளும் - 26

உண்ணாவிரதம்..

உடலுக்கு சில வேளைகளில் பல நன்மைகளை விளைவிக்கும்.

மஹாத்மா போன்றவர்களின் உண்ணாவிரதம்.. மக்களுக்கு பல நன்மைகளுக்காக நடத்தப்பட்டது.

காலையில் ஆரம்பித்து..மாலையில் நிறவினை அடையும் உண்ணாவிரதங்களும் உண்டு.

மனைவியின் உண்ணாவிரதத்தால் கணவனின் பர்ஸ் இளைப்பதும் உண்டு

ஆனால்..நல்ல நோக்கோடு இருக்கும் உண்ணாவிரதம் இருப்பவர்களின் மனவுறுதி போற்றற்குரியதாகும்.அப்படி  உறுதி படைத்தவர்களாக போற்றப்படுபவர்களை விட முன் நிலையில் ஒருசாரார் உள்ளனராம்..அவர்கள் யார்? என வள்ளுவர் சொல்கிறார்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரிற் பின்(160)

பசி பொறுத்து உண்ணாநோன்பிருக்கும் உறுதி படைத்தவர்கள் கூடப் பிறர் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள். 

No comments: