Tuesday, August 13, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 181

நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனத் தெரிந்தும், என் நெஞ்சே! அவரையே நாடிச் செல்கின்றாயே ஏன்? என்கிறாள் காதலி.

உடுக்கை இழந்தவன் கை போல நண்பனுக்கு இடுக்கண் வந்தால் அதைப் போக்க உதவுவது கைகள் என்பது..பொய்த்துவிடுமோ என அஞ்சுகிறாள்..

கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டங் கவர்பின் செலல் (1293)

நெஞ்சே! நீ என்னை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவா?

No comments: