Wednesday, August 14, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 186

காதலரிடையே மலர்ந்துள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாய் இருந்தாலும் அதனால் விளைகின்ற சிறு  துன்பமும் பெருமையுடையதாம்.

அன்புடன் கூடியிருக்கும் காதலர்களின் ஊடல் நிலத்தோடு நீர் கலந்தது போலவாம்

புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து (1323)

நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதைவிட புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?

தவறே செய்யாத நிலையிலும், தன் உள்ளம் கொள்ளை கொண்டவளிடம் ஊடல் கொள்வதில் கூட ஓர் இனபம் உள்ளதாம்

உணவு அருந்துவதை விட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம் உண்டு அதுபோல உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம் உணடாம் 

No comments: