Monday, October 21, 2019

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 88

தனிப்படர் மிகுதி  இது அதிகாரம்.

தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாடஹ் பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.

காதலர்கள் ஒருவரை ஒருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.....என்கிறது இக்குறள்..

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி (1192)

வாழ்வார்,வீழ்வார்,வீழ்வார், அளிக்கும் அளி.

அடுத்து ஒரு குறளையும் பார்ப்போம்..

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின் (1194)

விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்.

விழப்படுவார், வீழ்வார்,வீழப்படாஅர்.... 

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 87

இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர்  போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்க காதல் நோயும் பெருகுமாம்.

காதல் நோயை மறைக்கவும் முடியாதாம்..அதற்குக் காரணமான காதலரிடமும் நாண்த்தால் உரைக்கவும் முடியாதாம்.

படர்மெலிந் திரங்கல் அதிகாரத்தில் இப்படிக் கூறுபவர் மேலும் சொல்கிறார்...

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா  (1169)

இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவது போல தோன்றும் கொடுமை இருக்கின்றதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.

கொடியார்,கொடுமை,கொடிய,நெடிய...

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 86

ஒருவர் தகாத நடத்தையின் காரணமாக நாணுவத்ற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேற்பாடு உண்டு...

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற (1011)

நாணுதல்,நாணுத்திருநுதல்,நாணுப்பிற ....

அடுத்து

வெட்கப்படவேண்டிய அளவிற்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்

பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து (1018)

பிறர் நாணத் தக்கது, அறநாணத்தக்கது, தானாணானாயின்..

வள்லவரும் சொல் விளையாட்டும் - 85

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு (963)

உயர்ந்தநிலை வரும்போது அடக்க உணர்வும்,அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்

பெருக்கத்து, சுருக்கத்து, வேண்டும், வேண்டும்....  அடடா....

அடுத்து...

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்த கடை (964)

மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவர்,

தலையின், நிலையின் ,இழிந்த,இழிந்த..

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர் (962)

புகழ்மிகக் வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டு மென்பத்ற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்கள்

சீரினும்,சீரல்ல, சீரொடு....

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 84

நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ர அடக்க  உணர்வும்  கால்கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.

பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்..

என்றெல்லாம் குடிமை எம்னும் அதிகாரத்தில் சொல்கிறார்.
தவிர்த்து ஒரு குறளில்...

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தவாய்ச் சொல் (959)

விளைந்த பயிரைப் பார்த்தாலே அது எந்த நிலத்தில் விளைந்தது என அறிந்து கொள்ளலாம்.அதுபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நிலத்திற், குலத்திற், காட்டும், காட்டும்!!!!!

அடுத்து ஒரு குறள்...

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு (960)

தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவையாகும்.

நலம் வேண்டின்,குலம் வேண்டின், வேண்டுக.... 

Sunday, October 20, 2019

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 83

மருந்து ,இது  அதிகாரம்..

உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு  வேறு மருந்தே தேவையில்லையாம்..

தவிர்த்து உடலுக்கு ஒத்துவரும் உணவுக் கூட  அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை என்கிறார்.

மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு (945)

மாறுபாடில்லாத,ஊறுபாடில்லாத..

நோய் என்ன? அதற்கான காரணம் என்ன?நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்.

இதையே...

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)

நோய்நாடி, நோய் முதல் நாடி, வாய்நாடி...!!!!!


வள்ளுவரின் சொல் இளையாட்டு - 82

அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொது மகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல் (912)

ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு போகமொழி பேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது

பயன் தூக்கி,நயன் தூக்கி, பண்பு,பண்பின்

அடுத்து....

புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்கள்

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள் (916)

தந்நலம்,புன்னலம்,பாரிப்பார்,பாரிப்பார்

மேற்கண்ட குறள்கள் வரும் அதிகாரம் வரைவின் மகளிர்.