Monday, October 21, 2019

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 84

நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ர அடக்க  உணர்வும்  கால்கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.

பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்..

என்றெல்லாம் குடிமை எம்னும் அதிகாரத்தில் சொல்கிறார்.
தவிர்த்து ஒரு குறளில்...

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தவாய்ச் சொல் (959)

விளைந்த பயிரைப் பார்த்தாலே அது எந்த நிலத்தில் விளைந்தது என அறிந்து கொள்ளலாம்.அதுபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நிலத்திற், குலத்திற், காட்டும், காட்டும்!!!!!

அடுத்து ஒரு குறள்...

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு (960)

தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவையாகும்.

நலம் வேண்டின்,குலம் வேண்டின், வேண்டுக.... 

No comments: