விருந்தோம்பல் அதிகாரத்தில்.. விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவேக் கருதலாம் என்கிறார் பொய்யாமொழியார்.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து (90)
அனிச்சம் எனப்படும் பூ முகர்ந்த உடன் வாடிவிடக் கூடியது.அதுபோல சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்....என்றவர்...மேலும் சொல்கிறார்...
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு (86)
வந்த விருந்தினரை உபசரித்து அவர்கள் வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.
செல்விருந்து, வருவிருந்து,நல்விருந்து....ஆஹா...
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து (90)
அனிச்சம் எனப்படும் பூ முகர்ந்த உடன் வாடிவிடக் கூடியது.அதுபோல சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்....என்றவர்...மேலும் சொல்கிறார்...
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு (86)
வந்த விருந்தினரை உபசரித்து அவர்கள் வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.
செல்விருந்து, வருவிருந்து,நல்விருந்து....ஆஹா...
No comments:
Post a Comment