Sunday, October 20, 2019

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 83

மருந்து ,இது  அதிகாரம்..

உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு  வேறு மருந்தே தேவையில்லையாம்..

தவிர்த்து உடலுக்கு ஒத்துவரும் உணவுக் கூட  அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை என்கிறார்.

மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு (945)

மாறுபாடில்லாத,ஊறுபாடில்லாத..

நோய் என்ன? அதற்கான காரணம் என்ன?நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்.

இதையே...

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)

நோய்நாடி, நோய் முதல் நாடி, வாய்நாடி...!!!!!


No comments: