Monday, October 21, 2019

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 88

தனிப்படர் மிகுதி  இது அதிகாரம்.

தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாடஹ் பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.

காதலர்கள் ஒருவரை ஒருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.....என்கிறது இக்குறள்..

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி (1192)

வாழ்வார்,வீழ்வார்,வீழ்வார், அளிக்கும் அளி.

அடுத்து ஒரு குறளையும் பார்ப்போம்..

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின் (1194)

விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்.

விழப்படுவார், வீழ்வார்,வீழப்படாஅர்.... 

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 87

இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர்  போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்க காதல் நோயும் பெருகுமாம்.

காதல் நோயை மறைக்கவும் முடியாதாம்..அதற்குக் காரணமான காதலரிடமும் நாண்த்தால் உரைக்கவும் முடியாதாம்.

படர்மெலிந் திரங்கல் அதிகாரத்தில் இப்படிக் கூறுபவர் மேலும் சொல்கிறார்...

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா  (1169)

இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவது போல தோன்றும் கொடுமை இருக்கின்றதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.

கொடியார்,கொடுமை,கொடிய,நெடிய...

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 86

ஒருவர் தகாத நடத்தையின் காரணமாக நாணுவத்ற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேற்பாடு உண்டு...

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற (1011)

நாணுதல்,நாணுத்திருநுதல்,நாணுப்பிற ....

அடுத்து

வெட்கப்படவேண்டிய அளவிற்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்

பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து (1018)

பிறர் நாணத் தக்கது, அறநாணத்தக்கது, தானாணானாயின்..

வள்லவரும் சொல் விளையாட்டும் - 85

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு (963)

உயர்ந்தநிலை வரும்போது அடக்க உணர்வும்,அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்

பெருக்கத்து, சுருக்கத்து, வேண்டும், வேண்டும்....  அடடா....

அடுத்து...

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்த கடை (964)

மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவர்,

தலையின், நிலையின் ,இழிந்த,இழிந்த..

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர் (962)

புகழ்மிகக் வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டு மென்பத்ற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்கள்

சீரினும்,சீரல்ல, சீரொடு....

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 84

நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ர அடக்க  உணர்வும்  கால்கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.

பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்..

என்றெல்லாம் குடிமை எம்னும் அதிகாரத்தில் சொல்கிறார்.
தவிர்த்து ஒரு குறளில்...

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தவாய்ச் சொல் (959)

விளைந்த பயிரைப் பார்த்தாலே அது எந்த நிலத்தில் விளைந்தது என அறிந்து கொள்ளலாம்.அதுபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நிலத்திற், குலத்திற், காட்டும், காட்டும்!!!!!

அடுத்து ஒரு குறள்...

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு (960)

தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவையாகும்.

நலம் வேண்டின்,குலம் வேண்டின், வேண்டுக.... 

Sunday, October 20, 2019

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 83

மருந்து ,இது  அதிகாரம்..

உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு  வேறு மருந்தே தேவையில்லையாம்..

தவிர்த்து உடலுக்கு ஒத்துவரும் உணவுக் கூட  அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை என்கிறார்.

மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு (945)

மாறுபாடில்லாத,ஊறுபாடில்லாத..

நோய் என்ன? அதற்கான காரணம் என்ன?நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்.

இதையே...

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)

நோய்நாடி, நோய் முதல் நாடி, வாய்நாடி...!!!!!


வள்ளுவரின் சொல் இளையாட்டு - 82

அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொது மகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல் (912)

ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு போகமொழி பேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது

பயன் தூக்கி,நயன் தூக்கி, பண்பு,பண்பின்

அடுத்து....

புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்கள்

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள் (916)

தந்நலம்,புன்னலம்,பாரிப்பார்,பாரிப்பார்

மேற்கண்ட குறள்கள் வரும் அதிகாரம் வரைவின் மகளிர்.

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 81

பெரியாரைப் பிழியாமை...

ஒரு செயலை செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காதலாம அமையும்..

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை (891)

ஆற்றுவார், ஆற்றல், போற்றுவார்,போற்றல்

அடுத்து

பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும் (892)

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.

பெரியாரை, பெரியாராற், பேரா..

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 80

உட்பகை அதிகாரத்தில் மேலும் இரு குறள்கள்..

உட்பகை அஞ்சித்தற் காக்க உறைவிடத்து
மட்பகையின் மானத் தெறும் (883)

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை மண்பாண்டத்தை அறுக்கும் கருவி போல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்.

உட்பகை, மட்பகை..

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது (886)

ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால்,அத்னால் ஏற்படும் அழிவினைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.

ஒன்றாமை,ஒன்றி,ஒன்றல்

வள்ளுவரின் சொல் விளையாட்டு -79

நெருங்கிய உறவினரிடம் தோன்றும் உட்பகையானது அவர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பல துபங்களை உண்டாக்கும் என்கிறார் உட்பகை அதிகாரத்தில்.

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின் (881)

இனிமையாய்த் தெரியும் நிழலும்..நீரும் கூடக்கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும்.அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையுமாகும்.

இன்னாத,இன்னா,இன்னாவாம், இன்னா...

அடுத்து

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு (882)

என்கிறார்.

வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடி கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வாள்போல்,கேள்போல்,அஞ்சற்க, அஞ்சுக, பகவரை, பகைவர்

  

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 78

பகைத்திறம் தெரிதல்..

பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக் கூடாது.

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை (872)

சொல்லாற்றல் மிக்கவர்களை சொல்லேர் உழவ்ர் என்கிறார்.
வில்லேர் உழவர், படைக்கலன்களைக் கொண்ட வீரர்கள்..

படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம்.ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெரு மக்களுடன் பகை கொள்ளக் கூடாது 

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 77

மனமாறுபாடு காரணமாக ஏற்படும் பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.

மனமாறுபாடு எனும் நோயை யார் தனக்ள் மனத்தைவிட்டு அகற்றிவிடுகிறார்களோ, அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.

இகல் எனும் அதிகாரத்தில் வரும் இரு குறட்பாக்களில் இப்படிச் சொல்லுபவர் சொல்கிறார்..

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின் (854)

துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான்.அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால் அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.


இன்பத்துள் இன்பம், துன்பத்துள் துன்பம்..இது வள்ளுவனின் விளையாட்டு.



வள்ளுவரின் சொல் விளையாட்டு - 76

ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும் என்கிறார் புல்லறிவாண்மையில்.

எதிரிகளால் கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.

அறிவின்மை,இன்மையுள்,இன்மை,பிறிதின்மை,இன்மை என கீழே சொல்லியுள்ளக் குறளில் சொய்ல் விளையாட்டினைப் பாருங்கள்.

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு (836)

அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும்.மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.  

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 75

பழைமை இது அதிகாரம்.

பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

வருந்தக் குடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்..

எல்லைக்கண், தொல்லைக்கண் என் அஒரு குறளில் விளையாடுகிறார்.

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு (806)

நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால் கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது  நட்பைத் துறக்க மாட்டார்கள். 

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 74

பெரும் செல்வமாகஇருப்பினும் அது அருள் நெறியிலோ, அன்பு வழியிலோ வராத போது அதனை புறக்கணித்துவிடவேண்டும்,

என பொருள் செயல்வகை அதிகாரத்தில் கூறுபவர் மேலும் சொல்கிறார்..

அறம், பொருள்,இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்.

உறுபொருள்,உல்குபொருள்,தெறுபொருள் என ஒரு குறளில் விளையாடுகிறார்.அந்த குறள்..

உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள் (756)

வரியும், சுங்கமும்,வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 73

ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும்.அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்...

என்றெல்லாம் சிற்றினம் சேராமையில் சொன்னவர் சொல்கிறார்.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும் (455)

ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் ,செயலும் தூய்மையானவையாக இருக்கும்

மனந்தூய்மை,செய்வினைதூய்மை,இனந்தூய்மை..வள்ளுவரின் சொல் விளையாட்டு. 

வள்ளுவரும் சொல் விளையாட்டு - 72

முன் கூட்டியே எச்சரிக்கையாய் இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போலக் கருகிவிடும்....என குற்றங்கடிதல் அதிகாரத்தில் ஒரு குறளில் சொன்னவர் அடுத்து சொல்கிறார்...

முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்? என்கிறார் இக்குறளில்..

தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு (436)

தன் குற்றம்,பிறர் குற்றம், என் குற்றம்


Saturday, October 19, 2019

வள்ளுவரும் சொல்வெளையாட்டும் - 71

எண்ணும், எழுத்துமாகிய அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்..என கல்வி அதிகாரத்தில் சொல்லுபவர் மேலும் சொல்கிறார்..

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க  அதற்குத் தக (391)

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவிற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.கற்றபிறகு அதன்படி நடக்க வேண்டும்

கற்க,நிற்க, கற்பவை, கற்றபின்

அடுத்த குறள்...

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிக்கு (392)

எண்ணென்ப,எழுத்தென்ப, கண்ணெண்ப

எண்ணும், எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

வள்ளுவரும் சொல் விளையாட்டும் -70

நன்மையும் ,தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும்.நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும் போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?

எனக் கேட்கும் வள்ளுவர்...

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியினை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது அரிதேயாகும் என்கிறார் இக்குறளில்..

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது (377)

வகுத்தான்,தொகுத்தார், வகுத்த, வகை

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 69

களவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்..

களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதே கூடத் தவறிப் போகும்.களவினை , பார்க்காதவர்க்கோ புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.

கள்வார்க்குத் தள்ளும் உயர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு (290)

கள்வார்,கள்ளார்,தள்ளும்,தள்ளாது

கள்ளாமை அதிகாரத்தில் வருகின்றன இக்குறள்கள்.

மற்றொரு குறள்...

நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்.கொள்ளையடிப்போர் நெஞசமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.

அளவறிந்தார் நெஞ்சத் தரம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு (288)

அளவறிந்தார்,களவறிந்தார்,நெஞ்சம்,நெஞ்சம்