Saturday, June 15, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 45

நஞ்சினை நெஞ்சில் வைத்து, நாவினில் அன்பு வைத்து நல்லவர் போல் நடிப்பார்.....இவ்வரிகளை நாம் பாடலாகவும், உரைநடையாகவும் கேள்விப்பட்டதுண்டு.

சுருங்கச்சொன்னால்...நல்லவர்கள் போல நடிப்பார்கள் கயவர்கள்.

அவர்கள் எப்படிப்பட்டவர்களாகவும் இருக்கக்கூடும் என் கிறார் வள்ளுவர் .....

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து  (277)

வெளித்தோற்றத்திற்குக் குன்றிமணியைப் போல் சிவப்பாக இருந்தாலும். குன்றிமணியின் முனையைப் போலக் கறுத்தமனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.

வெளித்தோற்றம் கண்டு ஏமாறக்கூடாது

No comments: