Wednesday, June 19, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 54

நம்பிக்கையுடன் செயலில் ஈடுபடுபவர்களுக்கு வானமும் தொட்டுவிடும் தூரம்தான் என்பார்கள்

அதேபோன்று, ஒருவனுக்கு மெய்ப்பொருள் என்பது என்ன என்பது தெரிந்து விட்டால் அவன் வாழ்க்கை சிறப்பாக அமையுமாம்.

எந்த ஒரு ஐயப்பாடு இருந்தாலும், அதை அலசி ஆராய்ந்து அல்லது அறிவுடையாரை நாடி தீர்த்துக் கொள்ள வேண்டும்

ஐயப்பாடுகளை, ஆராய்ந்து உண்மையை உணர வேண்டும்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து (353)

ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்து கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்

No comments: