Monday, July 29, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 139

புகழை விரும்பாது, பொருள் சேர்ப்பது ஒன்றினையே குறியாக இருப்பவர்கள் பிறந்து, வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.கொடுத்து உதவும் பண்பில்லாதவர்களிடம் கோடி கோடியாய் செல்வம் குவிந்தாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை.

வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவன் செல்வம் எதற்கு ஒப்பாகும் தெரியுமா?  அழகிய பெண் ஒருத்தி தனியாகவே இருந்து முதுமையடைவதற்கு ஒப்பாகுமாம்.

அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று (1007)

வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனின் செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது

No comments: