Monday, July 29, 2019

வள்ளுவனுமொப்பீடுகளும் - 140

பேராசையினால், அளவிற்கு அதிகமாக செல்வத்தைச் சேர்த்து வைத்து, அதனை அனுபவிக்காமல் செத்துப் போகின்றவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தால் என்ன பயன்?

ஊருக்கு நடுவே ஒரு நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்கும் கனிகளினால் என்ன பயன்? ஒன்றும் இல்லை.அதுபோலவே வறியவர்க்கு வழங்காமல் குவித்துவைக்கும் செல்வத்தால் என்ன பயனும் இல்லை.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று(1008)

வெறுக்கப்படுபவர்களிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையில்லை

No comments: