ஒரு பெண் வெட்கப்படுகிறாள் என்றால் அது நாணம்.ஆனால் அதுவே, ஒருவர் தமது தகாத நடத்தையினால் நாணுகின்றார் என்றால்..இந்த வெட்கத்திற்குப் பொருள் வேறு.
தாம் செய்த தகாத செயலை எண்ணி,தன் கீழ்த்தரமான செயலுக்காக வெட்கப்பட்டு தலைகுனிந்து வருந்துகிறார் என்று பொருள்
உலகில் எந்தப் பாதுகாப்பினையும் விட நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்தோர் தம் பாதுகாப்பாகக் கொள்வர்
பொம்மலாட்டம் நாம் எல்லாம் பார்த்திருப்போம்.அதில் பொம்மைகள் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும்.அப்பொம்மைகளுக்கு உயிர் இல்லை.அதுபோல மனதில் நாணம் இன்றி திரிவோரும் உயிர் இருந்தும் உயிரற்றவர்கள் போல என்கிறார் வள்ளுவர்.
நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று (1020)
உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும்,மனதில் நாணமெனும் ஒரு உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை
தாம் செய்த தகாத செயலை எண்ணி,தன் கீழ்த்தரமான செயலுக்காக வெட்கப்பட்டு தலைகுனிந்து வருந்துகிறார் என்று பொருள்
உலகில் எந்தப் பாதுகாப்பினையும் விட நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்தோர் தம் பாதுகாப்பாகக் கொள்வர்
பொம்மலாட்டம் நாம் எல்லாம் பார்த்திருப்போம்.அதில் பொம்மைகள் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும்.அப்பொம்மைகளுக்கு உயிர் இல்லை.அதுபோல மனதில் நாணம் இன்றி திரிவோரும் உயிர் இருந்தும் உயிரற்றவர்கள் போல என்கிறார் வள்ளுவர்.
நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று (1020)
உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும்,மனதில் நாணமெனும் ஒரு உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை
No comments:
Post a Comment