Showing posts with label திருக்குறள் இலக்கியம். Show all posts
Showing posts with label திருக்குறள் இலக்கியம். Show all posts

Sunday, December 20, 2009

98.பெருமை

1.ஊக்கம் ஒருவரது வாழ்க்கைக்கு ஒளி தருவதாகும்..ஊக்கமின்றி வாழ்வது இழிவே தரும்.

2.பிறப்பினால் அனைவரும் சமம்..தொழில் செய்யும் திறமையால் மட்டுமே வேறுபாடு காணமுடியும்.

3.பண்பு இல்லாதவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் உயர்ந்தவர் ஆகமாட்டார்கள்..இழிவான காரியத்தில்
ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தலும் உயர்ந்தாரே ஆவார்கள்.

4.ஒருவன் தன்னைத்தானே காத்துக்கொண்டு நடந்தால்..கற்புக்கரசிகளுக்கு கிடைக்கும் புகழும் ,பெருமையும்
இவர்களுக்கும் கிடைக்கும்.

5.அரிய செயல்களை செய்து முடிக்கும் திறமைசாலிகள் அனைவரும் பெருமைக்குரியவர்களே.

6.பெரியாரை விரும்பி ஏற்றுக்கொள்ளும் நோக்கம்..சிறியோரின் உணர்ச்சியில் இருக்காது.

7.சிறப்பு நிலை..பொருந்தாத கீழ்மக்களுக்குக் கிடைத்தால்..அவர்கள் வரம்பு மீறி செயல்படுவர்.

8.பண்புடைய பெரியார் எக்காலமும்..எல்லோரிடமும் பணிவுடன் நடப்பார்கள்.ஆனால் சிறியோரோ
பண்பு இன்றி தன்னைத்தானே பாராட்டிக் கொண்டு இருப்பார்கள்.

9.ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை ஆகும்.ஆணவத்தின் எல்லைக்கு செல்வது சிறுமை ஆகும்.

10.பிறர் குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும்..பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது
சிறுமைக் குணமாகும்.

Thursday, December 10, 2009

96.குடிமை

1.நடு நிலையான பண்பு,அடக்கம் கொண்டவர்களையே உயர் குடி பிறப்பு எனலாம்.

2.ஒழுக்கம்,வாய்மை,நாணம் இம்மூன்றும் வழுவாமல் வாழ்வரே உயர் குடியில் பிறந்தவர்கள்.

3.முகமலர்ச்சி,ஈகை,இனியசொல்,பிறரை இகழாமை ஆகிய நான்கு நல்ல பண்புகளும் பெற்றவர்கள் உயர்குடியினர்.

4.பலகோடி பெறுவதாக இருந்தாலும்..உயர் குடியில் பிறந்தவர்..சிறப்புக் கெடும் காரியங்களை செய்யமாட்டார்கள்.

5.பழம் பெருமை வாய்ந்த குடிபிறப்பினர்..வறுமையால் வாடிய போதும்..பிறர்க்கு வழங்கும் பண்பை விடமாட்டார்கள்.

6.வஞ்சக எண்ணத்துடன் தகுதியில்லாதவற்றை, மாசற்ற பண்புடன் வாழ்பவர்கள் செய்ய மாட்டார்கள்.

7.உயர்குடியில் பிறந்தவர்களிடம் உண்டாகும் குற்றம்..வானத்து நிலவில் காணப்படும் களங்கம் போல
பலர் அறியத் தெரியும்.

8.நல்ல பண்புள்ள ஒருவனிடம் அன்பற்ற தன்மை இருந்தால்..அவன் பிறந்த குலம் பற்றி ஐயப்பட நேரிடும்.

9.இன்ன நிலத்தில்..இன்ன பயிர் விளைந்தது என சொல்வது போல..ஒருவரின் வாய்ச்சொல்லே அவரின்
குடிபிறப்பைக் காட்டும்.

10.ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால்..தகாத செயல் செய்ய அஞ்சி நாண வேண்டும்.அதுபோல குடியின்
உயர்வு வேண்டுமானாலும் அனைவரிடமும் பணிவு வேண்டும்.

Sunday, May 31, 2009

92 வரைவின் மகளிர்

1.அன்பு இல்லாமல்..பொருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இன்சொல் பேசும் பொது மகளிர்
துன்பத்தையே தருவர்.

2.ஆதாயம் ஒன்றையே எண்ணி..அதற்கேற்ப இன்சொல் கூறும் பொதுமகளிர் உறவை நம்பி ஏமாறக்கூடாது.

3.பணத்துக்காக மட்டுமே ஒருவனைத் தழுவும் பொய்யான தழுவல் என்பது..இருட்டு அறையில் ..பிணத்தை
தழுவினாற்போன்றது.

4.அருளுடையோர்..பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாக எண்ணுவர்.

5.இயற்கை அறிவும்,கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்..விலைமகளிரின் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.

6.நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர்..ஒழுக்கமற்ற பொதுமகளிரை நாட மாட்டார்கள்.

7.உறுதியற்ற மனம் படைத்தவர் மட்டுமே..தன் மனதில் பொருள் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள
பொதுமகளிரை விரும்புவர்.

8.வஞ்சம் நிறைந்த பொது மகளிரிடம் ஒருவன் மயங்குதல் என்பது..அறிவில்லாதவனிடம் ஏற்படும்
மோகினி மயக்கமாகும்.

9.விலை மகளை விரும்புதல்..தெரிந்தே நரகத்தில் விழுவதற்கு சமமாகும்.

10.பொதுமகளிர் தொடர்பு,மதுப்பழக்கம்,சூதாட்டம் இம்மூன்றும் அமைந்தவர் வாழ்வு சிறப்புற அமையாது.

Sunday, May 3, 2009

90.பெரியாரைப் பிழையாமை

1.ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தலே..நம்மை காத்திடும் காவல்கள்
அனைத்தையும் விடச் சிறந்த காவலாகும்.

2.பெரியோர்களை மதிக்காமல் நடந்தால்..நீங்காத துன்பத்தை அடைய நேரிடும்.

3.பகையை அழிக்கக்கூடிய ஆற்றலுள்ளவர்கள் பேச்சைக் கேட்காது இழித்துப் பேசினால்..அவன் தன்னைத்தானே
அழித்துக் கொள்கிறான் என்று பொருள்.

4.ஆற்றல் உடையவர்களுக்கு ஆற்றலற்றவர் தீமை செய்தால்..தங்கள் முடிவுக்காலத்தை அவர்களே
அழைத்துக் கொள்வது போலாகும்.

5.வலிமை பொருந்திய அரசின் கோபத்துக்கு ஆளானவர்கள் எங்கு சென்றாலும் உயிர் வாழ முடியாது.

6.தீயால் சுட்டால் கூட ஒரு வேளை உயிர் பிழைக்கலாம்..ஆற்றல் மிக்கவரிடம் தவறிழைப்பவர் தப்பிப்
பிழைக்க முடியாது.

7.பெருஞ்செல்வத்துடன் சுகமாக இருந்தாலும்..பெரியோரின் கோபத்துக்கு ஆளானவர்கள் முன் அனைத்தும்
பயனற்றதாய் விடும்.

8.மலை போன்ற பெருமை கொண்ட பெரியவர்களை குலைக்க நினைத்தால்..பெருஞ்செல்வந்தரும் குடியோடு அழிவர்

9.உயர்ந்த கொள்கை உடைய பெரியோர்கள்..கோபமடைந்தால் அரசனும்..அரசு இழந்து அழிவான்.

10.வசதி வாய்ப்புக்கள்,வலிமையான துணைகள் உடையவராக இருந்தாலும் சான்றோரின் சினத்தை எதிர்த்துத்
தப்பிப் பிழைக்க முடியாது.

Monday, January 5, 2009

56.கொடுங்கோன்மை

1.குடிகளை வருத்தும் தொழிலையும்,முறையில்லா செயல்களையும் செய்யும் அரசன் கொலையாளியை விடக்
கொடியவன்.
2.ஆட்சியில் இருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டி பொருள் பறித்தல்..வேல் ஏந்தி நிற்கும்
கள்வன் மிரட்டி 'கொடு' என பறித்தல் போன்றது.
3.ஆட்சியில் விளையும் நன்மை,தீமைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தகுந்தவாறு நடக்காத அரசு சீர் குலையும்.

4.நாட்டு நிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசன் பொருளையும்,குடிகளையும் ஒரு சேர இழப்பான்.

5.கொடுமையால் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கக்கூடியதாகும்.

6.நீதி நெறி தவறாத அரசு புகழ் பெறும்..தவறிய அரசு சரிந்து போகும்.

7.மழை இல்லா உலகம் எத்தன்மையானதோ..அத்தன்மையானது நாட்டில் வாழும் மக்களிடம் அருள் இல்லா அரசு.

8.வறுமை இல்லா ஒருவன் வாழ்வு..கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்து விட்டால் அது வறுமைத் துன்பத்தை
விட அதிக துன்பமாகும்.
9.முறை தவறி நாட்டை ஆளும் அரசன் இருந்தால்..அந்த நாட்டில் பருவ மழை கூட பொய்த்துப் போகும்.

10.நாட்டைக் காக்கும் அரசன் முறை தவறினால்..அந் நாட்டில் பசுக்கள் பால் தராது..அறநூல்களையும் மக்கள்
மறப்பர்.

Friday, January 2, 2009

54.பொச்சாவாமை

1.மகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி,அடங்காத சினத்தால் ஏற்படும்
விளைவை விட தீமையானது.

2.நாளும் வாட்டும் வறுமை அறிவைக் கொல்வதுபோல,புகழை
அவனுடைய மறதி கொன்றுவிடும்.

3.மறதி உள்ளவர்களுக்கு..அவர் எப்படிபட்டவராயிருந்தாலும் புகழ்
ஏற்படாது.

4.தம்மைச்சுற்றி பாதுகாப்பிருந்தாலும்..அச்சம் உள்ளவருக்கு பயனில்லை..
அதுபோல மறதி உடையவர்களும் நல்ல நிலை இருந்தும் பயனில்லை.

5.துன்பம் வருமுன் அதை காக்காமல் மறந்துவிடுபவன்..பின்னர்
அவை வரும்போது தன் பிழையை எண்ணி வருந்துவான்.

6.ஒருவரிடம் மறவாமை என்ற பண்பு இருக்குமேயானால்..அதைவிட
அவருக்கு நன்மை தருவது வேறு எதுவும் இல்லை.

7.மறதியின்றி அக்கறையுடன் செயல்பட்டால் முடியாதது என்பதே கிடையாது.

8.சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களை போற்றிஸ் செய்யவேண்டும்..
இல்லையனில் ஏழு பிறப்பிலும் நன்மை உண்டாகாது.

9.மகிழ்ச்சியால் செருக்கு அடைந்து கடமையை மறப்பவன்...
அதுபோல முன்னரே அழிந்துபோனவர்களை எண்ணி திருந்திடவேண்டும்.

10.ஒருவன் எண்ணியதை விடாது...வெற்றி அடைவதிலேயே குறியாக இருந்தால்..
குறிக்கோளை அடைவது எளிதாகும்.