Wednesday, September 17, 2014

திருக்குறள்- காமத்துப்பால்-குறள்- 1083



குறள்- 1083

எமன் எனப்படுபவன் எப்படியிருப்பான்? காலா உன்னைக் காலால் மிதிக்கிறேன் வாடா..என்றான் பாரதி,அவன் எப்படி வேணுமென்றாலும் இருந்து விட்டுப் போகட்டும்.ஆனால்..அவனிடம் உள்ள பாசக்கயிற்றை வீசினால்..என்னவாகும்...

எமனின்   தாக்குதல் எப்படியிருக்கும்?

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.


எமன் என்று கூறப்படுவதைப் பற்றிக் கேட்டிருக்கிறேன்; ஆனால் முன்பு பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.

No comments: