Wednesday, September 24, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1092



கண் பேசும் பார்வைகள் புரியாதா...என்பது தற்போது ஒரு கவிஞனின் வரிகள் ஆனால் 2000 ஆண்டுகள் முன்னரே வள்ளுவன் அதை சொல்லி விட்டான்.காதலியின் மனது நினைப்பதை அவளின் பார்வையே சொல்லிவிடுமாம்.பார்வை ஒன்றே போதும்..சொற்கள் எதற்கு...

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

கள்ளத்தனமாக பார்க்கும் (இவளின்) சிறு பார்வை, காமத்தில் சரியான பாதி இல்லாமல் அதைக்காட்டிலும் பெரிய பகுதியாகும்.
(கள்ளப் பார்வையே ஆயிரம் சொல்லும்).

No comments: