Monday, September 15, 2014

திருக்குறள்- காமத்துப்பால்



காதலி காதலுடன் பார்க்கிறாள்.காதல் பார்வை.சாதாரணமாகப் பார்த்தாலே மயங்கும் காதலன் காதல் பர்வையுடன் அவள் பார்க்கையில்..அடையும் மயக்கத்தை வார்த்தையில் வடிக்க இயலுமா?


நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
                                                   -1082

இவன் பார்க்கிறானாம்...அவள் அழகு அவனைத் தாக்குகிறதாம். பதிலுக்கு இவனை அவள் பார்க்கையில்...அந்த தேவதை மட்டுமல்ல..ஒரு தேவதைப்படையே தாக்குவது போல இருக்கிறதாம்.

No comments: