Tuesday, September 23, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1090



போதையைக் கொடுக்கக் கூடியது கள்.ஆனால் கள்ளுண்ணுவதால் அதை உண்ணுபவர் மட்டுமே மகிழ்ச்சியடைகிறார்கள்.அம்மகிழ்ச்சி சரியா..தப்பா..என்பது வேறு விஷயம்.ஆனால்...ஆனால் அம்மகிழ்ச்சி காதல் தரும் மகிழ்வை விடக் குறைவாம்..வள்ளுவனுக்கு

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.


கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லை.

No comments: