Sunday, September 28, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1097



அவளை நான் விரும்புகிறேன், ஆனால் அவளோ பகைவனிடம் பேசுவது போல கடுஞ்சொல்லால் என்னை சுடுகிறாள்  என்னைப் பார்க்கும் போதும்.பகைவனைப் பார்ப்பது போலவே பார்க்கிறாள்..இதற்கெல்லாம் காரணம் என்ன? என நண்பன் ஒருவன் உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்..

உன்னை அவளுக்குப் பிடிக்கவில்லை..உனக்கேன் இனி வம்பு..பேசாமல் ஒதுங்கிக் கொள் ..என அறிவுரை சொல்வீர்கள்

ஆனால் வள்ளுவன் என்ன சொல்கிறான் தெரியுமா?

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

உரை-

பகையுணர்வு இல்லாமல் கடுஞ்சொல்லும், பகைவரை நோக்குவது போன்ற பார்வையும் வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.

No comments: