Thursday, September 25, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1093



அவன் அவள் தன்னைக் காதலிக்கிறாளா என புரியாது குழம்பிய நிலையிலிருந்தான்.அப்போது காதலித்து மணந்த நண்பன் சொன்னான்.அவள் இருக்குமிடம் செல்.அவள் அறியாது அவளைப்பார்.அவள் நீ பார்ப்பது தெரியாமல் உன்னைப் பார்ப்பாள்.உடனே அவளைப்பார்...பெண்களுக்கே உரிய நாணத்தால் முகம் சற்றே சிவக்கும்.அவள் உன்னைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள் எனப் பொருள் என்று..அட....வள்ளுவன் அப்படித்தான் சொல்லியிருக்கிறான் என நினைத்தான் அவன்.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்


என்னை அவள் நோக்கினாள், நான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

No comments: