Friday, September 26, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1095



ஒருவரைப் பர்க்கவும் உண்டும்.அப்படிப் பார்ப்பது பார்க்கப்படுபவர்க்குத் தெரியவும் கூடாது. என்ன செய்வோம்? சாதாரணமாக கண்களை சற்றே சுருக்கிப் பார்த்து, பார்த்து, பாராதது போல பாசாங்கு செய்வோம் அல்லவா? அதையே இந்த காதலியும் செய்கிறாள்.தான் காதலனைப் பார்த்து மகிழ வேண்டும்..அது காதலனுக்கும் தெரியக்கூடாது...கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்து மகிழ்கிறாள்.

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

உரை_
என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையேத் தவிர, ஒரு கண்ணைச் சுருக்கியவள் போல என்னைப் பார்த்து மனதிற்குள் மகிழ்கிறாள்

No comments: