Wednesday, September 17, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1084



அன்புள்ளம் கொண்டவர்கள் பெண்கள்..இரக்கக் குணம் உள்ளவர்கள் என்றெல்லாம் போற்றப்படுபவர்கள் பெண்கள்.ஆனால்..அவர்களது பார்வை உயிரையே பறிக்குமாம்...வள்ளுவன் சொல்கிறான்

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு, அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம்(கவர்ச்சி) இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் இது மாறுபாடாய் உள்ளதே!.

No comments: