Thursday, September 18, 2014

திருக்குறள் - காமத்துப் பால் குறள் 1085





அவளுக்காக உயிர்விடவும் தயார்..என்று சொல்வதால் ஒருவேளை அவள் உயிரைப் பறிக்கும் எமனா!
அவள் பார்த்தால் மேனி முழுதும் சிலிர்க்கிறதே,,அந்த விழிகள் உறவாடுவனவா?
அவள் பார்க்கும் பார்வையில் சற்று பயம் தெரிகிறதே..ஒருவேளை இவள் பெண்மானாய் இருப்பாளா?
என்றெல்லாம்..தன்னவளைப் பற்றி எண்ணுவதுதான் காதலா?
.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.



என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கின்றனவே!.

No comments: