Saturday, September 27, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1096



அவளை அவன் அறிவான்.அவளுக்கும் அவன் மீது உள்ளூர ஆசை. ஆனால் அவளிடம் பேசினால்..ஏதோ அயலாரிடம் பேசுவது போல பேசுகிறாள்.ஆனால் அவள்  மனதில் என் மீது பகை இல்லை என அறிவேன்.அப்படி அவள் இருக்கக் காரணம் என்ன?

வள்ளுவன் என்ன சொல்கிறான்..

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

உரை-

(தன் காதலை மறைத்துக் கொண்டு)புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்

No comments: