Friday, September 19, 2014

திருக்குறள் - காமத்துப்பால் குறள் எண் 1086



பெண்களை வர்ணிக்கையில் வில் போன்ற புருவம் என்பர்.பெண்களுக்கு அழகு அது என்பது வெள்ளிடைமலை.அதற்காகவே பல பெண்கள் இன்று ழகு நிலையங்களுக்குப் போய் வில் புருவம் உண்டாக்கிவருவது நாம் அறிந்ததே,அப்படிப்பட்ட புருவம் ஆண்களை   நடுங்கச் செய்யுமாம்..

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
                                                         1086



அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தராது..

No comments: