1.மழை தான் உலகத்தை வாழ வைக்கும் அமிர்தம்.
2.உணவுப்பொருட்கள் விளைய மழை தேவை...தவிர...மழையே அருந்தும் உணவாகும் உள்ளது.
3.எங்கும் கடல் நீர் சூழ்ந்திருந்தாலும் மழை இல்லை எனின் பசி வாட்டி வதைக்கும்.
4.மழை இல்லையேல் உழவுத்தொழிலும் இல்லை.
5.மழை பெய்யாம்மல் வாழ்வையும் கெடுக்கும்...பெய்து வாழ்வின் வள்த்தையும் சேர்க்கும்.
6.மழை இல்லையேல் மண்ணில் புல்லைக்கூட பார்க்கமுடியாது.
7.கடல்நீர் மேகமாக மீண்டும் கடலில் பெய்வதால் கடல் வற்றுவதில்லை.அதுபோல மனிதனும் சமுதாயத்துக்கு
பயன்பட்டால்தான் சமுதாயம் வாழும்.
8.மழை பொய்த்துவிடடால் இறைவனுக்கு விழாக்க்ளும் கிடையாது...வழிபாடும் இருக்காது.
9.மழை பெய்யாவிடின்..செய்யும் தானம்....மேற்கொள்ளும் நோன்பு ஆகியவை இருக்காது.
10.உலகில் மழை இல்லை எனில் ஒழுக்கமே கேள்விக்குறியாகும்...
மழையின் முக்கியத்தை இதைவிட அருமையாக யாரால் சொல்லமுடியும்.
வாழ்க வள்ளுவம்
Wednesday, February 27, 2008
Monday, February 25, 2008
கடவுள் வாழ்த் து
1. 'அ' என்ற உயிர்எழுத்து எழுத்துக்களுக்கு முதல் அதுபோலl ஆதி பகவன் உலக உயிர்களுக்கு முதல்.
(திருவள்ளூவரின் தாய்,தந்தை ஆதி பகவன் என்பதால் உலக உயிர்களுக்கு தாய்,தந்தை முதல் என்றும்
சொல்லலாம்)
2. இறைவனை வணங்கும் பண்பில்லாதவன் படித்திருந்தும் பயனில்லை
. 3. மலரை ஒத்த இறைவனை மனதில் ஆராதிப்பவன் பெயர் உலகில் நீடித்து இருக்கும்
4.விருப்பு வெறுப்பு இல்லா இறைவனை வேண்டுவோர்க்கு எந்த துன்பமும் வராது.
5. இறைவனை புரிந்து கொண்டால் நன்மை,தீமைகள் எல்லாம் ஒன்றே போல் தெரியும்.
6.ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தியவனின் ஒழுக்க நெறியை பின்பற்றவேண்டும்.
7.இறைவனை வேண்டினால் மனக்கவலைகள் மறையும்.
8.இறைவனை வேண்டினால் துன்பங்களை எளிதில் வெல்லலாம்.
9.இறைவனை வேண்டாதவனுக்கு ஐம்புலன்கள் இருந்தும் பயனில்லை.
10.இறைவனை வேண்டினால் நற்பிறவி அடைய முடியும்
Subscribe to:
Posts (Atom)