Sunday, May 31, 2009

92 வரைவின் மகளிர்

1.அன்பு இல்லாமல்..பொருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இன்சொல் பேசும் பொது மகளிர்
துன்பத்தையே தருவர்.

2.ஆதாயம் ஒன்றையே எண்ணி..அதற்கேற்ப இன்சொல் கூறும் பொதுமகளிர் உறவை நம்பி ஏமாறக்கூடாது.

3.பணத்துக்காக மட்டுமே ஒருவனைத் தழுவும் பொய்யான தழுவல் என்பது..இருட்டு அறையில் ..பிணத்தை
தழுவினாற்போன்றது.

4.அருளுடையோர்..பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாக எண்ணுவர்.

5.இயற்கை அறிவும்,கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்..விலைமகளிரின் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.

6.நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர்..ஒழுக்கமற்ற பொதுமகளிரை நாட மாட்டார்கள்.

7.உறுதியற்ற மனம் படைத்தவர் மட்டுமே..தன் மனதில் பொருள் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள
பொதுமகளிரை விரும்புவர்.

8.வஞ்சம் நிறைந்த பொது மகளிரிடம் ஒருவன் மயங்குதல் என்பது..அறிவில்லாதவனிடம் ஏற்படும்
மோகினி மயக்கமாகும்.

9.விலை மகளை விரும்புதல்..தெரிந்தே நரகத்தில் விழுவதற்கு சமமாகும்.

10.பொதுமகளிர் தொடர்பு,மதுப்பழக்கம்,சூதாட்டம் இம்மூன்றும் அமைந்தவர் வாழ்வு சிறப்புற அமையாது.

Wednesday, May 13, 2009

91.பெண் வழிச் சேறல்

1.கடமையுடன் செயல் புரிபவர்கள்..இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதக்கூடாது.

2.கடமை தவறி..மனைவியின் பின்னால்..சுற்றித் திரிபவன் நிலை வெட்கப்படும் செயலாகும்.

3.மனைவியின் துர்க்குணத்தை திருத்தமுடியாது பணியும் கணவன்.. நல்லோர் முன் நாணித் தலைக்குனிவான்.

4.மனைவிக்கு அஞ்சி நடப்பவனின் செயலாற்றல் சிறப்பாக அமையாது.

5.நல்லவர்க்கு தீங்கு செய்ய அஞ்சுபவன்..தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.

6.மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவர்..தேவாம்சம் பொருந்தியவர்கள் போல சிறப்பான நிலையில் வாழ்ந்தாலும்
பெருமை இல்லாதவர் ஆவர்.

7.மனைவியின் எல்லாக் கட்டளைக்கும் கீழ்படிந்து நடப்பவனை விட மான உணர்வுள்ள பெண்மை சிறந்ததாகும்.

8.மனைவியின் விருப்பப்படி நடப்பவர் ..நண்பர்கள் பற்றி,நற்பணிகள் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

9.ஆணவப் பெண்கள் இடும் கட்டளைக்கு கீழ்ப்படிபவனிடம் ,சிறந்த அறநெறிச் செயல்களோ ..சிறந்த
அறிவாற்றலோ இருக்காது.

10.சிந்திக்கும் திறன்,உறுதியான மனம் கொண்டவர்கள்..பெண்களிடமே பழியாகக் கிடக்க மாட்டார்கள்

Sunday, May 3, 2009

90.பெரியாரைப் பிழையாமை

1.ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தலே..நம்மை காத்திடும் காவல்கள்
அனைத்தையும் விடச் சிறந்த காவலாகும்.

2.பெரியோர்களை மதிக்காமல் நடந்தால்..நீங்காத துன்பத்தை அடைய நேரிடும்.

3.பகையை அழிக்கக்கூடிய ஆற்றலுள்ளவர்கள் பேச்சைக் கேட்காது இழித்துப் பேசினால்..அவன் தன்னைத்தானே
அழித்துக் கொள்கிறான் என்று பொருள்.

4.ஆற்றல் உடையவர்களுக்கு ஆற்றலற்றவர் தீமை செய்தால்..தங்கள் முடிவுக்காலத்தை அவர்களே
அழைத்துக் கொள்வது போலாகும்.

5.வலிமை பொருந்திய அரசின் கோபத்துக்கு ஆளானவர்கள் எங்கு சென்றாலும் உயிர் வாழ முடியாது.

6.தீயால் சுட்டால் கூட ஒரு வேளை உயிர் பிழைக்கலாம்..ஆற்றல் மிக்கவரிடம் தவறிழைப்பவர் தப்பிப்
பிழைக்க முடியாது.

7.பெருஞ்செல்வத்துடன் சுகமாக இருந்தாலும்..பெரியோரின் கோபத்துக்கு ஆளானவர்கள் முன் அனைத்தும்
பயனற்றதாய் விடும்.

8.மலை போன்ற பெருமை கொண்ட பெரியவர்களை குலைக்க நினைத்தால்..பெருஞ்செல்வந்தரும் குடியோடு அழிவர்

9.உயர்ந்த கொள்கை உடைய பெரியோர்கள்..கோபமடைந்தால் அரசனும்..அரசு இழந்து அழிவான்.

10.வசதி வாய்ப்புக்கள்,வலிமையான துணைகள் உடையவராக இருந்தாலும் சான்றோரின் சினத்தை எதிர்த்துத்
தப்பிப் பிழைக்க முடியாது.