Thursday, December 28, 2017

வள்ளுவனும் எதுத்துக்காட்டுகளும் -5

உலகில் பிறப்பும், இறப்பும் இயற்கை.

வந்தவர் எல்லாம் தங்கி விட்டால், இந்த மண்ணில் நமக்கு இடமேது என்றார் கண்ணதாசன்

இதுவரை இறந்தவர் இவ்வளவு, பிறந்தவர் இவ்வளவு என்பதைக் கணக்கில் காட்ட இயலுமா?

அது முடியாத காரியம் அல்லவா?

அதுபோல அளவிடமுடியாது வேறொன்றும் இருக்கிறதாம்...வள்ளுவன் சொல்கிறான்

அது என்ன..

உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிட முடியாதாம்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று   - 22

என்கிறார்

உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கையை எவ்வளவு என்று எப்படி கூறமுடியாதோ.அதுபோல பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது


Wednesday, December 27, 2017

வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 4

கடல்நீர் ஆவியாகி மழைமேகமாக உருவெடுத்து மழையாய்
பெய்து, மக்கள் தேவையையும் பூர்த்தி செய்து..மிகைநீர் பல நிலைகளில் மீண்டும் கடலில் சங்கமிக்கிறது.அப்படி
கடல்நீர் ஆவியாகி மீண்டும் அக்கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.அதுபோல மனித சமுதாயதிலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும், அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்த சமுதாயம்வாழும்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் (17)

எப்படிக் கடல்நீர் ஆவியாகி மழையாய் பொழிகிறதோ அதுபோல சமுதாயத்தில் , சமுதாயத்தால் புகழ் அடைந்தவர்கள், அச்சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலேயே வாழ வேண்டும்

கடல்நீரையும், மழையையும் சமுதாயத்திற்கும்,புகழுடன் உயர்ந்தவர்களுக்கும் ஒப்பிடுகிறார்இக்குறளில்