Thursday, December 28, 2017

வள்ளுவனும் எதுத்துக்காட்டுகளும் -5

உலகில் பிறப்பும், இறப்பும் இயற்கை.

வந்தவர் எல்லாம் தங்கி விட்டால், இந்த மண்ணில் நமக்கு இடமேது என்றார் கண்ணதாசன்

இதுவரை இறந்தவர் இவ்வளவு, பிறந்தவர் இவ்வளவு என்பதைக் கணக்கில் காட்ட இயலுமா?

அது முடியாத காரியம் அல்லவா?

அதுபோல அளவிடமுடியாது வேறொன்றும் இருக்கிறதாம்...வள்ளுவன் சொல்கிறான்

அது என்ன..

உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிட முடியாதாம்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று   - 22

என்கிறார்

உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கையை எவ்வளவு என்று எப்படி கூறமுடியாதோ.அதுபோல பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது


No comments: