Monday, January 1, 2018

வள்ளுவனும்..எடுத்துக்காட்டுகளும் - 6

வெயில் ம ண்டையைப் பிளக்கிறது

சாலையில் நடந்து கொண்டிருக்கும் நாம் மர நிழலில் ஒதுங்குகிறோம்.
நமக்கு மட்டுமா வெயில்...
மரங்களின் இலைகளும் சற்று வாட்டத்துடனேயே காணப்படுகிறது.தெருநாய்கள் தண்ணீருக்காக அலைகின்றன.காக்கைகளையும் காணோம்.மண்ணில் ஒரு சிறு புழு ஒன்று வளைந்து, வளைந்து வெயில் கொடுமையில் தவிக்கிறது.

இச்சமயம் வள்ளுவன் நினைவில் வருகின்றான்

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
- 77

அறம் என்பது என்னவென்று தெரிந்தும், அதை கடைப் பிடிக்காத வரை, அவரது மனசாட்சி வாட்டி வதைக்கும்,அது எப்படியிருக்கும் தெரியுமா வெயிலின் வெம்மை ஒரு புழுவை வாட்டுவது போல இருக்குமாம்.

எவ்வளவு அருமையான கருத்தை சிறு புழுவின் மூலம் சொல்கிறான் வள்ளுவன்

No comments: