Tuesday, January 9, 2018

வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 11

நண்பன் ஒருவரைப் பாராட்டுகிறோம்.அவனும் நம் இன்சொல் பாராட்டுதலால் மனம் மகிழ்கிறான்.

அச்சமயத்தில், நம்மை அறியாமல் ஒரு தீய சொல்லும் நம் வாயிலிருந்து விழுந்து விடுகிறது.

இப்போது, நம் பாராட்டில் மனம் மகிழ்ந்த நண்பன், பாராட்டுதல்களையெல்லாம் மறந்து விடுகிறான்.நாம் சொன்ன ஒரு இன்னா சொல் அவனை மற்றதை மறக்க வைத்து விடுகிறது.மன வருத்தம் அடைகிறான்.

இது எதற்கு ஒப்பாகும் என்று வள்ளுவன் சொல்கிறான்..
ஒரு குடம் நிறைந்த பாலில், சிறிது விஷம் கலந்தாலும் அவ்வளவு பாலும் விஷமாக மாறிவிடுவது போல இருக்கிறதாம் வள்ளுவம் சொல்கிறது...

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா  தாகி விடும்  128

ஒருகுடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானால், அப்பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்

நல்ல சொற்களை பால் என்றும்..கடுஞ்சொல்லை விஷம் என்றும் ஒப்பிடுகிறார் வள்ளுவர்

No comments: