Wednesday, January 10, 2018

வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 12

நம்மை இகழ்ந்து பேசுபவர் செயல்களை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
..
இயற்கை எவ்வளவு வளங்களை வாரிக் கொடுத்திருக்கிறது.
ஆனால், நாம் அவற்றைக் காப்பாற்றுகிறோமா..
நதி நீரில்,தொழிற்சாலை கழிவுகளை விட்டு நீரை நாசமாக்குகிறோம்

ஆற்று மணலை பேராசையால் கொள்ளை அடிக்கிறோம்
மரங்களை வெட்டி...தட்ப வெட்ப நிலையை மாற்றுகிறோம்
கிரானைட் வெட்டி மலைகளை அழிக்கிறோம்
இவ்வளவு எல்லாம் கொடுமைகளைப் புரிந்தாலும், இந்த பூமி நம்மைப் பொறுத்துக் கொள்கிறதே அதுபோல நாமும்,நம்மை இகழ்ந்து பேசுபவர்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமாம்

இதையே

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை   - 151
என் கிறார்

தன்மீது குழி பறிப்போரையேத் தாங்குகின்ற பூமியைப் போல, தம்மை இகழ்ந்து பேசுபவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்

(தன்னை அழிப்போரை இந்த பூமி எப்படி தாங்கி நிற்கிறதோ..அதே போல நம்மை இகழ்வோரையும், அவர் செயல்களையும் நாம் தாங்கிக் கொள்ள வேண்டும்)

No comments: