Wednesday, December 27, 2017

வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 4

கடல்நீர் ஆவியாகி மழைமேகமாக உருவெடுத்து மழையாய்
பெய்து, மக்கள் தேவையையும் பூர்த்தி செய்து..மிகைநீர் பல நிலைகளில் மீண்டும் கடலில் சங்கமிக்கிறது.அப்படி
கடல்நீர் ஆவியாகி மீண்டும் அக்கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.அதுபோல மனித சமுதாயதிலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும், அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்த சமுதாயம்வாழும்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் (17)

எப்படிக் கடல்நீர் ஆவியாகி மழையாய் பொழிகிறதோ அதுபோல சமுதாயத்தில் , சமுதாயத்தால் புகழ் அடைந்தவர்கள், அச்சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலேயே வாழ வேண்டும்

கடல்நீரையும், மழையையும் சமுதாயத்திற்கும்,புகழுடன் உயர்ந்தவர்களுக்கும் ஒப்பிடுகிறார்இக்குறளில்

No comments: