Wednesday, April 23, 2008

39.இறைமாட்சி

1.படை,குடி மக்கள்,குறையா வளம்,நல்ல அமைச்சர்கள்,நல்ல நட்பு,அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் அமைந்த அரசு
ஆண் சிங்கமாகும்.
2.துணிவு,இரக்கம்,அறிவாற்றல்,உயர்ந்த குறிக்கோள் இந் நான்கு பண்புகளும் அரசின் இயல்பாகும்.

3.காலம் தாழ்த்தா தன்மை,கல்வி,துணிவு இவை மூன்றும் அரசனிடம் நீங்காமல் இருக்க வேண்டும்.

4.ஆட்சியில் அறநெறி தவறாமை,குற்றம் ஏதும் செய்யாமை,வீரம்,மானம் இவையே சிறந்த அரசனிடம் இருக்க வேண்டியவை.
5.பொருள் வரும் வழி,வந்த பொருள்களைச் சேர்த்தல்,காத்தல் அவற்றை சரியாக வகுத்தல் இவையே நல்லாட்சி
அரசனின் இலக்கணம்.
6.எளியவரையும்,கடுஞ்சொல் கூறாதவனையும் இனிய பண்புடையவனையும் கொண்ட அரசனை உலகு புகழும்.

7.இனிய சொற்கள்,பிறர்க்கு தேவையானவற்றை வழங்கிக் காத்தல் கொண்ட அரசனுக்கு உலகு வசப்படும்

8.நீதி தவறா ஆட்சியுடன் மக்களைக் காப்பாற்றும் மன்னவன் மக்கள் தலைவனாவான்.

9.தன்னை குறைகூறுவோரின் கடும் சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் மன்னனுக்கு மக்களிடம் மதிப்புண்டு.

10.கொடை,அருள்,செங்கொல்,குடிகளைக்காத்தல் இவை நான்கும் உள்ள அரசன் ..ஒளி விளக்காவான்

No comments: