Friday, August 22, 2008

14.ஒழுக்கம் உடைமை

1.ஒழுக்கம் உயர்வைத் தருவதால், அது உயிரை விட மேலானதாகும்.

2.எப்படி ஆராய்ந்தாலும்,வாழ்வில் ஒழுக்கமே சிறந்த துணை..ஆதலால் எப்பாடுபட்டாவது அதை காக்கவேண்டும்.

3.உயர்ந்த குடிபிறப்பு ஒழுக்கத்தையே அடிப்படையாகக் கொண்டது.ஒழுக்கம் தவறியவர் இழிந்த குடிபிறப்பாவர்.

4.உயர் குடியில் பிறந்தவன் படித்ததை மறந்தால்..மீண்டும் படிக்கலாம்.ஆனால் ஒழுக்கம் தவறினால் அவன்
இழிமகனே ஆவான்
5.பொறாமைக்காரனும்,தீய ஒழுக்கமும் உள்ளவன் வாழ்வு உயர்வான வாழ்வாகாது.

6.மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறினால் உண்டாகும் இழிவுப்பற்றி தெரிந்திருப்பதால்..நல்லொழுக்கத்துடன் நடப்பார்கள்.
7.நன்னடத்தை உயர்வு தரும்.அல்லதோர் மீது இழிவான பழி சேரும்.

8.நல்லொழுக்கம் நன்மைக்கு வித்து.தீயொழுக்கமோ தீராத துன்பம்.

9.தவறி கூட தகாத வார்த்தைகளை ஒழுக்கமுடையோர் கூறக்கூடாது.

10.ஒழுக்கம் என்ற பண்போடு வாழத்தெரியாதவர்..எவ்வளவு படித்தும்..அறிவில்லாதவர்களே ஆவர்.

No comments: