Saturday, September 20, 2008

24.புகழ்

1.பிறர்க்கு ஈதலும்,புகழுமே வாழ்வில் ஆக்கம் தரும்

2.இல்லாதவர்க்கு வழங்குபவரின் புகழே போற்றப்படும் புகழாகும்.

3.ஒப்பற்றதும்,அழிவில்லாததும் இந்த உலகில் புகழ் ஒன்றே ஆகும்.

4.தன்னலமின்றி புகழ் ஈட்டிய மக்களை ஏழேழு உலகும் பாராட்டும்.

5.துன்பம்,சாவு.. இவற்றிலும் கூட புகழ் பெறுவார் ஆற்றலுடையவர்.

6.எத்துறையில் ஈடுபட்டாலும் புகழோடு விளங்க வேண்டும்.அல்லாதார் அத்துறையில் ஈடுபடவே கூடாது.

7.புகழுடன் வாழ முடியாதார் ..தம் செயல்களை இகழ்பவரை நொந்துக்கொள்ளாமல் தன்னைத்தானே நொந்துக்கொள்ள வேண்டும்.
8.தமக்குப்பிறகு எஞ்சி நிற்கக்கூடிய புகழை பெறாதார், வாழ்ந்தும் பயன் இல்லை.

9.மனித உடலில் உயிர் எனப்படுவது புகழ் ஆகும்.அது இல்லாதார் இந்த பூமியில் தரிசு நிலமே ஆவர்.

10.பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை.அதுபோல புகழுடன் வாழ்வதே வாழ்க்கை.

2 comments:

Thamira said...

அரும்பணி செய்கிறீர்கள். எனக்கும் இப்படி ஓர் எண்ணம் இருந்தது. மொத்தமாக இப்போது ரிப்பீட்டு போடுகிறீர்கள் போலத்தெரிகிறது. வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

முதல்முறை தமிழ்மணத்தில் இணைவதற்குமுன் தேன்கூட்டில் பதித்தேன்.ஆகவே இப்பொழுது தமிழ்மணத்தில் பதிவை இடுகிறேன்.
வருகைக்கு நன்றி தாமிரா