1.மதிக்கத்தக்காதவர்களையும்..மதிக்கச் செய்வது அவர்களிடம் உள்ள பணமே ஆகும்.
2.பொருள் இல்லாதவரை இகழ்வதும்..உள்ளவரை புகழ்வதும் உலக நடப்பு ஆகும்.
3.செல்வம் என்னும் அணையாவிளக்கு கையில் இருந்தால் நினைத்த இடத்திற்குச்
சென்று துன்பம் என்னும் இருளை போக்கிடலாம்.
4.தீய வழியில் சேர்க்கப்படாத செல்வம் அறநெறியைக் காட்டி ஒருவருக்கு இன்பத்தைத் தரும்.
5.பெரும் செல்வம் வந்தாலும் அது அருள் நெறியிலோ..அன்பு வழியிலோ வரவில்லை என்னும்போது
அதை புறக்கணித்து விட வேண்டும்.
6.வரி,சுங்கம்,பகை நாடு,செலுத்தும் கப்பம் ஆகியவை அரசுக்குரிய செல்வமாகும்.
7.அன்பு பெற்றெடுக்கும் அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் செவிலித்தாயால் வளர்க்கப்படும்.
8.தன்னிடம் உள்ள செல்வத்தைக் கொண்டு தொழில் செய்தல்..மலையின் மேல் ஏறி யானைகளின்
போரைப் பார்ப்பது போல எளிதானதாகும்.
9.தன்னுடைய பகைவனின் செருக்கை அழிக்கவல்லது பொருளே ஆகும்.
10.சிறந்ததான பொருளை ஈட்டியவர்க்கு..அறமும்..இன்பமும்..எளிதாக வந்து சேரும்
Thursday, February 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)

1 comments:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
Post a Comment