Saturday, September 20, 2014

திருக்குறள் காமத்துப்பால்- குறள் எண் 1088



எப்பேர்பட்ட வீரனானாலும் கட்டழகிகளைக் கண்டால், வீரத்தை இழக்கக்கூடும்.ராமாயணம் கூட கைகேயி, சீதை,சூர்ப்பணகை என பெண்களை மையமாக்கியே அமைந்தது.மகாபாரதம், திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியியால் உருவானது.
ஆகவேதான் பெரியோர்கள் "ஆவதும் பெண்ணாலே..அழிவதும் பெண்ணாலே' என்றனர்.பெண் நினைத்தால் எதையும் சாதிப்பாள்.ஆமாம்..அதற்கும் குறளுக்கும் என்ன சம்மந்தம்? என்கிறீர்களா..இருக்கிறது..

இக்குறளைப் பாருங்கள்..


ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

போர்க்களத்தில் (என் வீரத்தால்) என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், ஒளி பொருந்திய (அவள்) நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே! (என்கிறானாம் ஒருவீரன்)
(அதாவது..அவன் வீரத்தையே அழிக்கும் அளவு அவளது நெற்றி அழகே இருக்கிறதாம்)

No comments: