Monday, March 31, 2008

16.பொறையுடைமை

1.கூட இருந்தே குழிப்பறிப்போரையும்...இந்த பூமி தாங்குவது போல...நம்மை இகழ்பவர்களை
பொறுத்துக்கொள்ளவேண்டும்.

2.ஒருவர் செய்த தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக்காட்டிலும் ....அத்தீங்கை மறந்துவிடுவதே சிறந்த பண்பு.

3.வறுமையில் பெரும் வறுமை விருந்தை வரவேற்க முடியாதது.அதுபோல ...பெரும்வலிமை
அறிவிலிகளை பொறுத்துக்கொள்வது.

4.பொறுமையாய் இருப்பவரை நிறைவான மனிதர் என போற்றுவர்.
5.தமக்கு இழைக்கப்படும் தீமையை பொறுத்துக்கொள்பவரை உலகம் பொன்னாக மதித்து போற்றும்.

6.தமக்கு கேடு செய்பவரை தண்டித்தல் ஒரு நாள் இன்பம்.
அவரை மன்னித்தல் வாழ்நாள் முழுவதும் இன்பம்.

7.பிறர் செய்யும் இழிவுக்கு பதிலாக இழிவே செய்யாது பழி வாங்காதிருத்தலே நற்பண்பாகும்.

8.அநீீதி விளைவிப்பவர்களை ...பொறுமை என்னும் குணத்தால் வென்றிடலாம்.

9.கொடுமையான சொற்கள் நம்மீது வீசப்பட்டாலும் ....அதை பொறுப்பவனே தூய்மையானவனாவான்.

10.இறைவனுக்கு உண்ணா நோன்பு இருப்பவரை விட...ஒருத்தர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர்
முதன்மையானவர் ஆவார்.

No comments: