Sunday, June 1, 2008

106.இரவு

1.கொடுக்கக்கூடிய தகுதி இருந்தும்..இரப்பவர்களுக்கு இல்லை என்று சொன்னால் பழி ஏற்படும்.

2.இரந்து அடையும் பொருள் துன்பமின்றி கிடைக்குமானால்..வழங்குபர்,வாங்குபவர் இருவர் மனத்திலும்
இன்பம் உண்டாகும்.

3.ஒளிவு மறைவு இல்லா நெஞ்சம்,கடமைஉணர்வு கொண்டவரிடம் வறுமை காரணமாக ஒருவர் இரந்து
பொருள் கேட்பதும் பெருமையுடையது ஆகும்.

4.உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையில்லாதவரிடம்..இரந்து கேட்பது பிறர்க்குக் கொடுப்பது போல
பெருமையைத் தரும்.

5.உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கும் பண்புடையோர் இருப்பதாலேயே..இல்லாதார் அவர்களிடம்
சென்று இரத்தலை மேற்கொள்கின்றனர்.

6.உள்ளதை ஒளிக்காதவரைக் கண்டால் ..இரப்போரின் வறுமைத் துன்பம் அகலும்.

7.இகழ்ந்து பேசாமல்..ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால்..இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து
மகிழ்ச்சி அடையும்.

8.இரப்பவர்கள் தம்மை அணுகக்கூடாது என நினைக்கும் மனிதருக்கும்..மரப்பதுமைகளுக்கும் வேறுபாடு இல்லை.

9.இரந்து பொருள் பெறுவோர் இல்லையெனில்..பொருள் கொடுத்து புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும்.

10இரப்பவன் எந்நிலையிலும் கோபம் கொள்ளக்கூடாது..தன்னைப் போல் பிறர் நிலையும் இருக்கக்கூடும் என்ற
எண்ணமும் வேண்டும்.

No comments: