Sunday, June 1, 2008

107.இரவச்சம்

1.உள்ளதை ஒளிக்காமல் வழங்கும் இரக்கச் சிந்தை உள்ளவரிடம்..இரவாமல்
இருப்பது கோடி மடங்கு உயர்வானது.

2.உலகைப்படைத்தவன்.. உலகில் சிலர் இரந்துதான் உயிர்வாழவேண்டும் என
ஏற்படுத்தியிருந்தால்..கெட்டொழியப்படும்.

3.வறுமையை.. பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என எண்ணும்
கொடுமையைப்போல வேறு கொடுமை இல்லை.

4.வாழ வழி இல்லாதபோதும்..பிறரிடம் கைநீட்டாத பண்புக்கு
இந்த உலகே ஈடாகாது.

5.கூழ்தான் உணவென்றாலும் ..தம் முயற்சியில் சம்பாதித்து அதைக்குடித்தால்
அதைவிட இனிமையானது எதுவும் இல்லை.

6.பசுவிற்க்கு தண்ணீர் வேண்டும் என்று இரந்து கேட்டாலும் அதைவிட
இழிவானது வேறொன்றுமில்லை.

7.இருப்பதை மறைத்து இல்லை என்பாரிடம் கையேந்த வேண்டாம் என
கையேந்தி கேட்பதில் தவறில்லை.

8..இருப்பதை மறைத்து ..இல்லை எனக் கூறுபவர்மீது..இரத்தல் என்னும்
மரக்கலம் மோதினால் அதுதான் உடையும்.

9.இரந்து வாழ்வோர் நிலை கண்டு உள்ளம் உருகும்.கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை
நினைத்தால் உள்ளமே ஒழிந்துவிடும்.

10.இரப்பவரிடம் இல்லை என்றால் உயிரே போய்விடுகிறதே..ஆனால் இல்லை என்று பொய்
சொல்பவரின் உயிர் மட்டும் எங்கு ஒளிந்துக் கொள்கிறது.

No comments: