Wednesday, November 12, 2008

41.கல்லாமை

1 அறிவாற்றல் இல்லாமல் கற்றவர்களிடம் பேசுதல் கட்டமில்லாமல்
சொக்கட்டான் விளையாடுவதைப்போல ஆகும்.

2.கல்லாதவன் சொல்லை கேட்க நினைப்பது மார்பகம் இல்லா பெண்ணை விரும்புவது போல ஆகும்.

3.கற்றவர் முன் எதுவும் பேசாதிருந்தால் கற்காதவர்கள் கூட நல்லவர்களே ஆவர்.

4.படிக்காதவனுக்கு இயற்கை அறிவு இருந்தாலும் ...அவனை சிறந்தோன் என அறிவுடையோர்
ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

5.கல்வி அற்றவன் மேதை போல நடந்தால் ...கற்றவர்களிடம் அவன் வேஷம் கலைந்துவிடும்.

6.கல்லாதவர்கள் வெறும் களர் நிலமே...அவர்கள் வெறும் நடைபிணங்களே.

7..அழகாய் இருந்தாலும்...தெளிந்த அறிவற்றோர் கண்ணைக்கவரும் மண் பொம்மையாகவே ஆவர்.

8.முட்டாள்களின் செல்வம் ..நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட மிக்க துன்பம் செய்வதாகும்.

9.கற்றவராயிருந்தால் ..உயர்ந்தவர்..தாழ்ந்தவர் என்ற வேறுபாடு போய்விடும்.

10.அறிவு நூல் படித்தவர்கள் மனிதர்களாகவும்..படிக்காதவர்கள் விலங்குகளாகவும் கருதப்படுவர்.

No comments: