Wednesday, January 7, 2009

58.கண்ணோட்டம்

1.இரக்கம் என்னும் சிறந்த அழகு இருப்பதால் தான் உலகு
அழியாமல் இருக்கின்றது.

2.இரக்கம்,அன்பும் இல்லதவர்கள் உயிரோடு இருத்தல் நிலத்துக்கு ஒரு சுமையே ஆகும்.

3.பாடலுடன் பொருந்தாத இசை போல..இரக்கம் சுரக்கா கண்ணினால் என்ன பயன்.

4.தக்க அளவில் அன்பும் இரக்கமும் இல்லாத கண்கள் முகத்தில் இருந்தால் என்ன...இல்லாவிட்டால் என்ன.

5.கருணைஉள்ளம் உள்ளவன் கண்ணே கண்..மற்றவை எல்லம் கண் அல்ல புண்.

6.கண் இருந்தும் இரக்கம் இல்லாதவர் மரம் போன்றவர்கள்.

7.கருணை உள்ளம் கொண்டவர்களுக்கு இருப்பதே கண்கள்..அல்லாதவர்கள்
கண்ணற்றோர் என சொல்லலாம்.

8.கடமை தவறாதல் கருணை பொழிதல் உள்ளவர்க்கே
இவ்வுலகம் உரிமையுடையதாகும்.

9.தம்மை அழிக்க நினைப்பவரிடமும் பொறுமை காட்டுவது மிக
உயர்ந்த பண்பாகும்.

10.கருணை உள்ளமும் பண்பும் உள்ளவர்கள் விஷத்தையேக் கொடுத்தாலும் அருந்தி மகிழ்வர்

No comments: