Friday, September 26, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1094



காதலி காதலனைப் பார்க்க விரும்புகிறாள்.ஆனால் நேருக்கு நேர் பார்க்க நாணம் தடுக்கிறது.ஆதலால் காதலன் பார்க்காத போது மெல்ல அவனை பார்த்து மகிழ்கிறாள்.அவன் பார்த்ததும் நாணம் மேலிட தலை குனிந்து நிலத்தைப் பார்க்கிறாள்.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

நான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், நான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

2 comments:

Unknown said...

புத்தகமாக போட வி
ரும்புகிறிர்களா .

T.V.ராதாகிருஷ்ணன் said...

புத்தகமாகப் போடும் எண்ணமும் உண்டு..
Selvaprabhu