Tuesday, September 5, 2017

வள்ளுவனும்...எடுத்துக் காட்டுகளும் - 1

திருக்குறளில் பல இடங்களில் வள்ளுவன்  தான் கூற வந்ததை மற்றொரு செயலுடன் ஒப்பிட்டு கூறுவதை காணமுடிகிறது

அப்படி சொல்லப்படும் எடுத்துக்காட்டுகளில் உள்ள நயம், உவமை, உவமேயம் ஆகியவை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

இந்நூலில் சொல்லப்பட்ட சில குறள்கள்..உவமை/உவமேயம் ஆகிய இலக்கணக் குறிப்புகளுக்கும் வராமல் இருக்கலாம்.ஆனால்..வள்லுவரின் ஒப்பீடும்..அதற்கான எடுத்துக்காட்டுகளும் வியக்கவைக்கின்றன

இனி அப்படிப்பட்ட ஒவ்வொரு குறள் பற்றியும்...நாளும் ஒரு குறள் என்ற கணக்கில் சொல்லலாம் என உள்ளேன்

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை  -37

அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களை எளியவாகக் கருதி பயணத்தை மேற்கொள்வார்கள்.தீயவழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாது, துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இன்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்

(அறவழியில் நடப்போரை பல்லக்கில் அமர்ந்தவர் போலவும், தீயவழி நடப்போரை பல்லக்கு தூக்கிகளுடன் ஒப்பிட்டுள்ளது இங்கு சிறப்பு)


நாளை வேறு ஒரு குறளுடன் சந்திப்போம்

No comments: